Translate

Wednesday, October 31, 2012

அருட்பெருஞ்ஜோதியட்டகம்




திரு அருட்பா திரட்டு

அருட்பெருஞ்ஜோதியட்டகம்


நசைத்தமே னிலையீ தெனவுணர்ந் தாங்கே

     நண்ணியுங்கண்ணுறா தந்தோ

திசைத்திமா மறைக ளுயங்கின மயங்கிதி

      திரும்பின வெனிலத னியலை

இசைத்தலெங் ஙனமோ வையகோ சிறிதும்

     இசைத்திடு வேமென நாவை

அசைத்திடற் கரிதென் றுணர்ந்துளோர் வழுத்தும்

      அருட்பெருஞ் ஜோதியென் னரசே                 4








Google affiliate Ads;

source book.com link:


Up to 60% off Parenting & Children's Books



77 kids.com link


Primary




littlepim.com

585019_Little Pim 468x60

My blogs:

http://saivasiddhantam.blogspot.in/

http://sansalternatetherapy.blogspot.in/

http://behaviourtherapy.blogspot.in/







Tuesday, October 30, 2012

அருட்பெருஞ்ஜோதியட்டகம்




திரு அருட்பா திரட்டு

அருட்பெருஞ்ஜோதியட்டகம்



கண்முதற் பொறியால் மனமுதற் கரணக்

     கருவினாற் பகுதியின் கருவால்

எண்முதற் புருட தரத்தினாற் பரத்தால்

     இசைக்குமோர் பரம்பர வுணர்வால்

விண்முதற் பரையால் பராபர வறிவால்

      விளங்குவ தரிதென வுணர்ந்தோர்

அண்முதற் றடித்துப் படித்திட வோங்கும்

அருட்பெருஞ் ஜோதியென் னரசே              3


              (தொடரும்)


Google affiliate Ads;

source book.com link:


Up to 60% off Parenting & Children's Books



77 kids.com link


Primary







My blogs:

http://saivasiddhantam.blogspot.in/

http://sansalternatetherapy.blogspot.in/

http://behaviourtherapy.blogspot.in/





Monday, October 29, 2012

அருட்பெருஞ்ஜோதியட்டகம்





திரு அருட்பா திரட்டு

அருட்பெருஞ்ஜோதியட்டகம்


குலவுபே ரண்டப் பகுதியோ ரனந்த

     கோடிகோடி களுமாங் காங்கே

நிலவிய பிண்டப் பகுதிகள் முழுது

     நிகழ்ந்தபற் பலபொருள் திரளும்

விலகுறா தகத்திமு புறத்துமே விடத்தும்

     மெய்யறி வானந்தம் விளங்க

அலகுறா தொழியா ததுவதில் விளங்கும்

    அருட்பெருஞ் ஜோதியென் னரசே          2.



Google affiliate Ads;

source book.com link:


Up to 60% off Parenting & Children's Books



77 kids.com link


Primary







My blogs:

http://saivasiddhantam.blogspot.in/

http://sansalternatetherapy.blogspot.in/

http://behaviourtherapy.blogspot.in/







Sunday, October 28, 2012

அருட்பெருஞ்ஜோதியட்டகம்




 திரு அருட்பா திரட்டு

அருட்பெருஞ்ஜோதியட்டகம்


அருட்பெரு வெளியி லருட்பெரு வுலகத்

     தருட்பெருந் தலத்துமே னிலையில்

அருட்பெரும் பீடத் தருட்பெரு வடிவில்

     அருட்பெருந் திருவிலே யமர்ந்த

அருட்பெரும் பதியே யருட்பெரு நிதியே

     அருட்பெருஞ் சித்தியென் னமுதே

அருட்பெருங் களிப்பே யருட்பெருஞ் சுகமே

     அருட்பெருஞ் ஜோதியென் னரசே            1

                                                          (தொடரும்)


Google affiliate Ads;

source book.com link:


Up to 60% off Parenting & Children's Books



77 kids.com link


Primary







My blogs:

http://saivasiddhantam.blogspot.in/

http://sansalternatetherapy.blogspot.in/

http://behaviourtherapy.blogspot.in/







Saturday, October 27, 2012

திருக்குறள்





                                                                 திருக்குறள்

                                                               1.அறத்துப்பால்


                                                                 2.வான் சிறப்பு


வான்நின்று உலகம் வழங்கி வருதலால்

தான்அமிழ்தம் என்றுணர் பாற்று.           11


     மழை தவறாமல் பெய்ய உலகம் நிலை பெற்று வாழும்.

     ஆதலால் மழை உலகத்து உயிர்களுக்கு அமிர்தம்

     என்று கூறலாம்.



துப்பார்க்கு துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

துப்பாய தூஉம் மழை.                       12



உண்பவர்களுக்கு பல்வேறு உணவுகளை உண்டாக்கி

தாகம் தணிக்கும் நீருமாகி இருப்பது மழையாகும்.




விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து

உள் நின்று உடற்றும் பசி.                    13


      பருவமழை பெய்யாதிருந்தால் கடலால் சூழப்பட்ட உயிர்கள்

பசியால் வருந்தும். தாவரங்களும் அழிந்துவிடும்.        




ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும்

வாரி வளங்குன்றிக் கால்                             14


       மழை வளம் குறைந்தால் உழவர் வயலை

உழ ஏர் கொண்டு செல்ல மாட்டார்.




கெடுப்பதூஉங் கெட்டார்க்குச் சார்வாய்மற் றா\ங்கே

எடுப்பதூஉம் எல்லாம் மழை.                        15



       பெய்யாமல் நின்று வாழ்வைக் கெடுப்பதும் மழை.

மழை இன்றி வளம் கெட்டு துன்புறுவோர்க்கு துணையாக

பெய்து காப்பதும் மழையாகும்.





விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே

பசும்புல் தலைகாண்பு அரிது.                       16


        வானிலிருந்து மழைத்துளி விழாவிட்டால் பசுமையான

புல்லின் தலையையும் காண்பது அரிது.





நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி

தான்நல்கா தாகி விடின்.                          17


     மேகமானது கடலிலிருந்து நீரை கிரகித்து மறுபடியும்

அந்நீரையே மழையாகத் தருகிறது. அவ்வாறு இல்லாவிடின்

கடலும் வற்றிவிடும்.




சிறப்பொடு பூசனை செல்லாது வானம்

வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.            18.


மழை பொழியாவிடில், இப்பூமியில் வானவர்க்காண

பூஜைகள் நடைபெற இயலாது.





தானம் தவம் இரண்டும் தங்கா வியன்உலகம்

வானம் வழங்கா தெனின்.                        19



        மழை பொழியாவிடின் இந்தப் பரந்த உலகில்

தானம், தவம் என்ற இரண்டு அறங்களும் கிடையாது.





நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்

வான்இன்று அமையாது ஒழுக்கு.                20


     அனைத்து உயிர்களும் தண்ணீர் இல்லாமல்

வாழமுடியாது. தொடர்ந்து மழை இல்லாவிடில்

ஒழுக்கமும் மறைந்து போகும்.


source book.com link:


Up to 60% off Parenting & Children's Books



77 kids.com link


Primary





My blogs:

http://saivasiddhantam.blogspot.in/

http://sansalternatetherapy.blogspot.in/

http://behaviourtherapy.blogspot.in/









Friday, October 26, 2012

திருக்குறள்







                                                            திருக்குறள்


                                                            1.அறத்துப்பால்


                                           
                                                          1. கடவுள் வாழ்த்து


      அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

       பகவன் முதற்றே உலகு.          1


எழுத்துகள் அனைத்தும் "அ" என்ற எழுத்தை முதலாவதாகக் கொண்டு

உள்ளதுபோல் உலகத்து உயிர்கள் எல்லாம் இறைவனை முதலாவதாகக்

கொண்டுள்ளன.



  கற்றதனா லாய பயனெங்கொல் வாலறிவன்

  நற்றாள் தொழாஅர் எனின்.              2


           தூய அறிவினன் ஆகிய இறைவனின் திருப்பாதங்களை

தொழாதவன் எத்தனை கற்றும் பயன் இல்லை.



   மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்

   நிலமிசை நீடுவாழ்வார்.                  3


            அடியவர்களின் மனமென்னும் மலரில் வீற்றிருக்கும் இறைவனின்

திருவடிகளை   இடைவிடாமல் நினைக்கின்றவர்கள் இந்த உலகில் நீண்ட

ஆயுளுடன்வாழ்வார்கள்.



       வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு

       யாண்டும் இடும்பை இல.                              4.


             வேண்டியவர் வேண்டாதவர் என்பதே இல்லாத இறைவனின்
           
    திருவடிகளை எப்போதும் நினைப்பவர்களுக்கு எக்காலத்திலும் துன்பங்கள்

அணுகாது.



         இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்

       பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.                 5


                இறைவனின் புகழை விரும்பி அன்பு செலுத்துபவர்களுக்கு,

       இம்மையிலும் மறுமையிலும் துன்பங்கல் ஏற்படுவதில்லை.  




           பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க

         நெறிநின்றார் நீடுவாழ் வார்.                   6


                  மெய், வாய் , கண், காது, மூக்கு  என்ற ஐம்பொறிகளின் வழியாக

        உண்டாகும் பேராசைகளை நீக்கி இறைவனின் ஒழுக்க நெறிகளை

கடைபிடித்து நிற்பவர்கள் சிறந்த வாழ்க்கை வாழ்வார்.




          தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்

       மனக்கவலை மாற்றல் அரிது.                      7


                கடவுளுக்கு ஈடு கடவுள்தான். அவரது திருவடிகளை பக்தியுடன்

            வணங்குபவர்களைத் தவிர மற்றவர்களுக்கு மனக்கவலையை

             மாற்றுவது கடினம்.


             

            அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்

          பிறவாழி நீத்தல் அரிது.                        8


                     தருமக் கடலாக விளங்கும் இறைவனின் திருவடிகளைப்

               பற்றியவர்களைத் தவிர மற்றவர் பொருள், இன்பம் போன்ற

              கடல்களை  கடத்தல் இயலாது.





                  கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்

               தாளை வணங்காத் தலை.                        9.


                          எட்டு குணன்களை உடைய இறைவனின் பாதங்களை

வணங்காதவரின் தலையானது, தங்களுக்குரிய செயல்களை ஆற்றாத

( கேட்காத செவி, பார்க்காத கண், சாத வாய், நுகராத மூக்கு, இயங்காத தேகம்)

ஐம்புலங்களைப் போலப் பயனற்றதாகும்.





               பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

            இறைவன் அடிசேரா தார்.                10


                    இறைவனின் திருவடிகளை அடைந்தவர்கள் பிறவி என்ற 

பெருங்கடலை கடக்க இயலும். மற்றவர்களால் எளிதில் இயலாது.




source book.com link:


Up to 60% off Parenting & Children's Books



77 kids.com link


Primary







My blogs:

http://saivasiddhantam.blogspot.in/

http://sansalternatetherapy.blogspot.in/

http://behaviourtherapy.blogspot.in/









Wednesday, October 24, 2012

திருவருட்பிரகாச வள்ளலாரின் திருநெறிகள்







திருவருட்பிரகாச வள்ளலாரின் திருநெறிகள்



1. கடவுள் ஒருவரே : அவர் அருட்பெருஞ்ஜோதி

  ஆண்டவர் என்க.

2. எல்லா உயிர்களும் நமக்குச் சகோதரர்களே

  என்று உணர்க.

3. சாதி, சமய, மத, இன வேறுபாடுகளைக்

  காணற்க.

4. சிறு தெய்வ வழிபாட்டினையும்,

 பலியிடுவதையும் விலக்குக.

5. புலால் உண்னற்க; எவ்வுயிரையும் கொலை
 
 செய்யற்க.

6. பசித்தாரது பசியைப் போக்குதலே உண்மை

 வழிபாடாகக் கொள்க.

7. இறந்தவர்களைத் தகனம் செய்யாது புதைத்திடுக.

8. இந்திரிய, கரண, ஜீவ, ஆன்ம, நித்திய, ஜீவகாருண்ய

 ஒழுக்கங்களைக் கடைபிடுத்திடுக.

9. உண்மை அன்பால் கடவுளை வழிபாடு செய்து

 ஒளியை நமக்குள் காண்க.

10. உயிர்க்குலமே கடவுள் விளங்கும் ஆலயமாகக்

 கருதி உயிர்கட்கு இரங்கி இதம்புரிக.



source book.com link:


Up to 60% off Parenting & Children's Books



77 kids.com link


Primary







My blogs:

http://saivasiddhantam.blogspot.in/

http://sansalternatetherapy.blogspot.in/

http://behaviourtherapy.blogspot.in/