Translate

Sunday, May 11, 2014

பொன்மொழிகள்

401. பிறருடைய பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால்
    மகத்தான காரியம் எதையும் செய்யமுடியாது.  


402. வலக்கை ஊக்கமாக உழைக்க வேண்டும்; இடக்கை
    சிக்கனமாகச் செலவு செய்ய வேண்டும். இதுவே
    ஒருவனின் உண்மையான அதிர்ஷ்டம்.

                                   --- இங்கிலாந்து


403. உயர்நீதி மன்றங்களைவிட உயர்வான மன்றம் ஒன்று
    உண்டு. அதுதான் மனச்சாட்சி மன்றம்.

                                   --- மகாத்மா காந்தி

404. காலத்தை வீணாக்குவதே செலவுகள் அனைத்திலும்
    அதிகச் செலவும் ஊதாரித்தனமுமாகும்.

                                       --- பிரேஸ்டஸ்

405. வெற்றிக்குப் பத்துப் படிகள்:

     1. திட்டமிட்டுச் செயல்படு.
     2. அதிகமாகக் கவனி.
     3. குறைவாகப் பேசு.
     4. நேர்மையாக நட.
     5. விமர்சனம் வேண்டாம்.
     6. எளிமையைப் பின்பற்று.
     7. தர்மம் செய்.
     8. கடனைத் தவிர்.
     9. கோபம் கொள்ளாதே.
     10. தியானம் மேற்கொள்.  


406. கவலையுடன் தூங்கச் செல்வது முதுகில்  சுமைகளைக்
    கட்டிக் கொள்வதற்குச் சமம்.

                                   --- கூப்பர்
     

407. முன்னும் பின்னும் யோசிக்காமல் வார்த்தைகளை
     விடுகிறோம். ஆனால் அதற்குரிய பலனை வட்டியும்
    முதலுமாக அனுபவிக்கிறோம். இதுதான் வாழ்க்கை.


408. தூசிகளைக் கண்டதும் இமைகள் மூடிக்கொள்வதைப்
    போல் தீமையைக் கண்டதும் விலகுகின்ற மனச்சான்றே
     இணையற்றதாகும்.

                                     --- ஆதம்ஸ்



409. உலகில் வெற்றிகரமாக வாழ, நான்கு குணங்கள் மட்டுமே
    தேவை. நிறைய பொறுமை, வாய்ப்புக்களை சரியாகப்
    பயன்படுத்தும் திறமை, தவறைக் கண்டிக்கும் அச்சமின்மை,
    தவறு செய்பவர்களையும் அணைத்துச் செல்லும் கனிவுடைமை.

                                     --- மாத்யூ ஆர்னால்ட்

410. கடவுள் நமக்கு நாக்கைக் கொடுத்திருப்பது இனிமையான
    சொற்களைக்கூறுவதற்கே.

                                            ---ஹீன்


411. அன்பினால் ஊக்கப்பட்டு அறிவினால் நடத்தப்படுவது வாழ்க்கை.

                                              --- ரஸ்ஸல்

412. நான் விழுந்தால் விழுகிற ஒவ்வொருமுறையும் எழுவேன்
    என்கிற மன உறுதி படைத்தவர்கள் சாதிக்கிறார்கள்.
    அவர்கள் தோற்கத் தயங்குவதில்லை.

                                         --- ஷேக்ஸ்பியர்


413. ஒருவர் கையை எதிர்பார்த்திராதே; உன் கொள்கைகளை
     நீயே சாதித்துக் கொள்ள முயற்சி செய்.

                                       --- மில்டன்  


414. செயல்படாத மனிதனுக்கு யாரும் ஒருபோதும்
     உதவி செய்வதில்லை.

                             --- ஸோஃபாக்ஸில்


415. இயற்கையை நேசிக்கக் கற்றுக்கொண்டால் இந்தப்
    பிரபஞ்சமே இறைவனின் குரலைக் கேட்கச் சொல்லும்.
    பிரபஞ்சமே இறைவனின் சிந்தனைகள் என்ற ஞானமும்
    பிறக்கும்.

                                     --- வால்டேர்


416. எந்தத் தொழிலும் இழிவில்லை. தொழில் எதுவும்
    செய்யாமல் இருப்பதுதான் இழிவு.

                                   --- டால்ஸ்டாய்


417. இனிமைக்கு இலக்கணம்
    இரண்டொரு சொற்கள்
    காலம் கருதுக
    அளவோடு பேசுக.

                             --- ரகு நாதன்

418. நன்மைகள் விளைய,
    நன்மைகள் செய்வோம்.
    நமக்கென உள்ளதைப்
    பிறர்க்கும் கொடுப்போம்.

                        --- நல்வாக்கு


419. எந்தப் பொருளின் மீது ஆசை இல்லையோ
    அதனால் துன்பம் இல்லை.

                                  --- மில்டன்
 
420. 'இல்லை' என்று ஒருபோதும் சொல்லாதே.'என்னால்
     இயலாது' என்று ஒருநாளும் சொல்லாதே. ஏனெனில்
     நீ வரம்பில்லா வலிமை பெற்றவன். உன்னுடைய
     உண்மை இயல்போடு ஒப்பிடும்போது காலமும்
    இடமும் கூட உனக்கு ஒரு பொருட்டல்ல. நீ எதையும்
    எல்லாவற்றையும் சாதிக்கக் கூடியவன்; சர்வ வல்லமை
    படைத்தவன் நீ.

                                   --- விவேகானந்தர்


421. செயலில் கவனக்குறைவுதான் தோல்விகளைச் சந்திக்க
    காரணமாக இருக்கிறது.

                               --- பெஞ்சமின் பிராங்க்ளின்


422. வறுமை உன்னை வாட்டும்போது பொறுப்புக்கள்
    உன்னைத் துரத்தும்.
    பொறுப்புக்கள் உன்னைத் துரத்தும் போது போராடி
    வெற்றிகொள்.

                           ---- வாஜ்பாய்
423. நான்கு விஷயங்களைத் திரும்பப் பெற முடியாது.
    சொல்லிய வார்த்தை, விட்ட அம்பு, கடந்தகால
    வாழ்க்கை, நழுவவிட்ட வாய்ப்பு.

                             --- அரபுப் பழமொழி



424. கடுமையான உழைப்பைத் தவிர வெற்றிக்கு
   வேறுவழி இல்லை.
   வெற்றி என்பது பெற்றுக் கொள்வது.
   தோல்வி என்பது கற்றுக் கொள்வது.


425. தோல்வி பற்றிய பயம்தான் மகிழ்ச்சி, செல்வம்,
     செல்வாக்கு, புகழ் என அனைத்தையும் நம்மிடமிருந்து
     பிடுங்கிக் கொண்டுவிடுகிறது.

                                  --- பிராங்க்ளின்  


426. உங்களுடைய இலக்கு எப்போதும் உயர்வானதாக
    இருக்க வேண்டும்.

                                 --- சாக்ரடீஸ்




427. குழந்தையிடமிருந்து வளர்ந்த மனிதர்கள் கற்றுக்கொள்ள
    வேண்டியவை நிறைய. அவற்றில் சில.
   
    1. கள்ளமில்லாச் சிரிப்பு.
    2. உண்மையான பேச்சு
    3. எல்லோரிடமும் காட்டும் ஒரேவித மரியாதை.
    4. பிறர் நகைக்கும்படி பேசும் பேச்சுக்கள்
    5. முகத்தில் சாந்தம்.

                         --- டாக்டர் பாரீசன்


428. ஆடை ஆபரணம் அணிந்து கொண்டாலும் ஆணவம்
     இருந்தால் பார்க்க அழகாக இருக்காது.




429. அதிகப் பேச்சு,பொய் இவை இரண்டும் நெருங்கிய நண்பர்கள்.

                                          --- கதே

430. தன் கால்களால் பறவைகள் சிக்கிக்கொள்ளும்.
    தன் நாவினால் மனிதன்  சிக்கிக்கொள்வான்.

                                 --- தாமஸ்புல்லர்

431. வாழ்க்கை முறையை சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து
    அமைத்துக் கொள்வதுதான் ஒருவனின் வெற்றிகரமான
    வாழ்க்கைக்கான அரிய ரகசியமாகும்.

                                 --- விவேகானந்தர்


432. குறைவான நம்பிக்கையும் மிதமிஞ்சிய நம்பிக்கையும்
     பலன் அளிக்கா.

                                   --- நேருஜி


433. துக்கத்தை தூர எறிவதைத் தவிர அதற்கு வேறுமருந்து
    இல்லை என்பதை அறிந்தவன் புத்திசாலி.

                                     ---- சாணக்கியன்


434. நல்ல செயல்களை நாமாகத் தேடிச்செல்லவேண்டும்.
    அவை நம்மை நாடிவாரா.

                                  --- விவேகானந்தர்
     

435. தெளிவான குறிக்கோளே வெற்றியின் முதல் ஆரம்பம்.

                                   --- வீபர்



436. தவறுசெய்துவிட்டோம் என்று தெரிந்ததும் அதை
     ஒப்புக்கொள்ள வெட்கப்படாதே.

                                   --- ஆவ்பரி



437. எவன் தவிர்க்க முடியாததைத் துணிச்சலுடன் ஏற்றுக்
     கொள்வதோடு அதை விருப்பத்துடன் பொறுத்துக்
     கொள்கிறானோ அவன்தான் மாமனிதன்.

                                       --- நீட்ஸே
   438. ஆணவமும் அழிவும் இரட்டைக் குழந்தைகள்.
     இரண்டாவது குழந்தை மெதுவாக வளரும்.
     அவ்வளவுதான்.



439. நல்லோரிடம் கூடி இருப்பது சொர்க்கத்தில் இருப்பதற்குச் சமம்.

                                      --- சாணக்கியன்



440. மகிழ்ச்சியுடையவன் எந்தப் பணியையும் தன்னுடைய
     சுவைக்கேற்ப மாற்றிக்கொள்பவனே.

                                       --- விவேகானந்தர்



441. உங்களை நீங்களே மதித்துக்கொள்வது ஆணவம்;
    பிறர் உங்களை மதிப்பது பெருமை.

                                      --- ஸ்டீவன்சன்


442. உள்ளொளி காட்டும் வெளிச்சத்தில் நடப்பவனே
     இலக்கை அடைய முடியும்.



443. உயர்ந்த உள்ளங்களுக்கிடையில்தான் தூய்மையான
     தோழமை மலரமுடியும்.

                              --- சார்லஸ் இஸ்தலீஷ்

444. தீயவர் தங்கள் தவறுகளுக்குச் சமாதானம் தேடுவர்;
    நல்லவர்கள் தங்கள் தவறுகளைத் தவிர்ப்பது எப்படி
    என்று சிந்திப்பார்கள்.

                                    --- பென்ஜான்சன்


445. நேர்மையான மனம் படைத்தவருக்குச் சட்டம்தான் கடவுள்;
      முட்டாளுக்குக் கோரிக்கைதான் கடவுள்.

                                       --- மில்டன்

446. சில நூல்களை ருசி பார்க்க வேண்டும்.
    சில நூல்களை மென்று தின்னாமல் விழுங்கிவிட வேண்டும்.
    சில நூல்களை நன்கு சுவைத்து மென்று விழுங்கி
    செரிக்கச் செய்ய வேண்டும்.

                                       --- லெனின்

447. மௌனம் அறிவுக்கு அழகு; பொறுமை திறமைக்கு ஏற்றது.

                                      --- காளிதாசர்


448. மனிதன் தனது அகத்தின் அரசன்; மனத்தின் காவலன்;
    வாழ்க்கையாகிய கோட்டையின் தனிக்காப்பாளன்.

                                      --- ஜேம்ஸ்ஆலன்


449. உன் கொடிய பகைவன் உன்னிடம் இருக்கும் அறியாமைதான்.

                                               --- பர்க்

450. அன்பான இதயத்தோடு அணுகி இதமாகப் பேசினால்
     யாரையும் உன்னால் திருத்தமுடியும். மனிதர்களில்
     யாரும் பிறக்கும் போதே கெட்டவனாகப் பிறப்பதில்லை.

                                   --- அறிஞர் அண்ணா

451. எதையும் செய்யாதிருப்பதைவிட ஏதாவது ஒன்றை
     நாள்தோறும் செய்துகொண்டிருப்பது மேல்.

                                   --- வில்லியம் ஜேம்ஸ்


452. கண்களை இழந்தவன் குருடனல்லன்;
    எவன் தன்னிடமுள்ள குறைகளை மறைக்கிறானோ
     அவனே குருடன்.

                             --- குருநானக்


453. பருத்தியைப் போல் அன்பைச் செலுத்தினால் அது
     ஆடையாக நம்மைக் காப்பாற்றும்.

                                       --- சீனம்


454. தன்னைத் தானே மேதாவியாக நினத்துக் கொண்டு
    இருக்கும் இளைஞர்கள் இருந்த இடம் தெரியாமல்
    போய் விடுகின்றனர்.

                               --- மகாவீர்



455. சண்டைக்கு இருவர் தேவை. நீங்கள் அவ்விருவரில்
    ஒருவராயிருக்காதீர்கள்.

                                   --- ஆவ்பரி


456. அதிகமான எதிர்பார்ப்பு நிச்சயம் கைகூடப்போவதில்லை.

                                 --- ஷேக்ஸ்பியர்

457. அறிவுள்ள மனிதனிடம் உரையாடு.
    அறிவில்லாத மனிதர்களோடு உறவாடு.
    ஆனால் பண்பிலாதவனைக் கண்டால் ஒதுங்கிவிடு.


458. வீண்பேச்சு பேசுபவர்களின் பேச்சை நீங்கள் ஆமோதித்தால்
     அடுத்த அவதூறு உங்கள் மேல்தான்.

                                 ---ஜார்ஜ்சன்ட்டயானா


459. சுறுசுறுப்பாய் உள்ள மனிதன் எப்போதும் மகிழ்ச்சியோடு
    இருப்பான்.

                                ---ஹென்றி ஃபோர்டு




460. பிறர் நலத்தின் பொருட்டு உழைப்பது மனத்தின்
     கோணல்களைத் திருத்துகிறது.

  461. பணக்காரனுடன் பழகினால் பணக்காரன் ஆகமாட்டாய்;
    அறிவாளியுடன் பழகினால் நீயும் அறிவாளியாவாய்.




462. ஏழை உறவினரையும்,சிறிய காயத்தையும் அலட்சியப்படுத்தாதே.

                                        --- வாரியார்


463. இவ்வுலக வாழ்வு பற்றிய அச்சம் எனும் இருள்
     ஞான ஒளியால் விரட்டப்படுகிறது.

                                      --- சாணக்கியர்

464. உலகின் தேவை உபதேசம் அன்று; உதவிதான்.

                                       --- செனீகா





465.வேண்டுதல், வேண்டாதது இரண்டையும் சகித்துக் கொள்ளவேண்டும்.

                                        --- மகாவீர்




466. ஆயுளின் பெருமை ஆண்டுகளில் இல்லை; அவன்
     வாழும் முறையில் உள்ளது.

                                   --- வாரியார்

467. வாய்ப்புக்காகக் காத்திருப்பவன் கோழை.
    அதை உருவாக்கிக் கொள்பவனே புத்திசாலி.


468. நான் தோற்றதே இல்லை என்று ஒருவர் சொன்னால்
    வெற்றியை மட்டுமே பெற்றுக் கொண்டிருக்கிறார் என்று
    அர்த்தம் இல்லை. அவர் போட்டியில் கலந்துகொள்ளவே
    இல்லை என்றுதான் பொருள்.



469. பொறுமையிழந்தவர் வறுமையில் வாடுவார்;
     ஒற்றுமை இழந்தவர் சிறுமையில் வாடுவார்.



470. பிறர் மனம் வருந்த செயல் புரியாதீர்கள்.
    உங்கள் உரிமையை விட்டுவிடாதீர்கள்.
    பிறர் உரிமையில் தலையிடாதீர்கள்.



471. வாழ்க்கை முறையை சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து
     அமைத்துக் கொள்வதுதான் ஒருவனின் வெற்றிகரமான
    வாழ்க்கைக்கான அரிய ரகசியமாகும்.

                                     --- சுவாமி விவேகானந்தர்



472. மனிதன் பாவம் பண்ணும்போது புரியாது;
    பாவத்தை அனுபவிக்கும்போதுதான் புரியும்.


473. மனம் தளர்வதனால் எதையும் சாதிக்க முடியாது.


474. பொய் பேசுவோரிடமும் சுற்றித் திரிவோரிடமும்
    தொடர்பு கொள்ளாதே.

                                      --- ராமானுஜர்

475. முள்ளிலே பிறந்து முள்ளிலே மலர்ந்த தாழம்பூவுக்கு
     மனம் உண்டு. பிறந்த இடம் எத்தகையதாக இருப்பினும்
    குணம் உடையவராய் இருத்தல் வேண்டும்.

                                     --- சாணக்கியன்  



476. நம்பிக்கை என்பது விழித்திருக்கும் நிலையில்
    கனவு காண்பதைப் போன்றது.

                                      --- சிங்சௌ

 
477. எவர்க்கும் எவராலும் எந்த இன்னலும் ஏற்படக்கூடாது.

                                    --- நபிகள் நாயகம்

478. தீமைகளை விலக்குவது என்பதைக் கடமையாகக்
    கொள்ளுதல் நன்மைகளைச் செய்வதற்குச் சமமாகும்.


   
479. கோபம் என்பது நமது உயிரின் சக்தியையும்,புத்தியையும்
     சிதைத்துவிடும். அதனால் மனிதன் கோப உணர்ச்சியை
     வென்றே தீர வேண்டும்.


480. பொன்னான நேரத்தைப் பொறுமையுடன் சாதித்தால்
     பொன்னுக்கும் மேலானது கிடைக்கும்.

                                        --- சாணக்கியன்



481. உண்மையே நம் பெருமைக்கு ஆதாரம்.

                                            --- மகாவீர்

482. யாருடைய நம்பிக்கையையும் குலைக்காதீர்கள்.
    ஏதேனும் ஒன்றில் ஆழ்ந்த நம்பிக்கை அறிவுப் பூர்வமானதாக
    இருக்கட்டும்.

                                --- ராமகிருஷ்ணர்

483. நீங்கள் சிந்திக்கும் ஒவ்வொரு நற்சிந்தனையும்
    நீங்களே எதிர்பாராத அளவிற்கு அற்புதமான
    முடிவுகளை ஒவ்வொரு முறையும் தரும்.

                                      --- ஜான்ரோஜர்



484. அறிவுத் தெளிவு இருந்தால்தான் கலக்கமின்றி
     நிதானமாகச் செயல்படமுடியும்.

                                      --- ஆவ்பரி




485. புதிய சவால்கள்தான் நமது பலவீனங்களை அறிந்து
     நாம் நம்மைப் பலப்படுத்திக் கொள்ள உதவுகின்றன.


486. பகட்டுக்காகச் செலவுசெய்வது பெருந்தன்மை அன்று
     என்பதை அறியாதவன் முட்டாள்.



487. அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும் வரை உங்களுக்கு
     என்றைக்கும் விடிவுகாலம்தான்.

                                    --- பிளாட்டோ


488. மனோசக்தியுள்ள மனிதனுக்கு நன்மையான இடம்
     கிடைத்தே தீரும்.

                                    --- எமர்சன்



489. வறுமை உன்னை வாட்டும்போது பொறுப்புக்கள்
    உன்னைத் துரத்தும். பொறுப்புக்கள் உன்னைத்
    துரத்தும் போது போராடி வெற்றிகொள்.

                                     --- வாஜ்பாய்



490. எல்லோருக்கும் தங்களைப் பற்றிய ஒரு சுயமதிப்பு
    இருக்கவேண்டும். அந்த சுயமதிப்பைக் குறையவிடாமல்
    பார்த்துக் கொள்கிற தன்னம்பிக்கை வேண்டும்.
    அதுதான் எதையும் சாதிக்கும்.

                                 --- நவீன் செய்


491. உன் நண்பனை ரகசியமாகத் திருத்து; வெளிப்படையாகப் புகழ்.

                                  ---மில்டன்
     

பொன்மொழிகள்

492. பிறர் தவறுகளைக் கொண்டு தன் தவறுகளைத்
    திருத்திக் கொள்பவனே அறிவாளி.

                                   --- ஹெர்பர்ட்  




493. நல்ல யோசனை தோன்றும் போது அதை உடனே
     செய்து முடியுங்கள்; வெற்றி உங்கள் பக்கம்.

                                         --- ஸ்டோன்


494. நம்மால் நிச்சயமாக ஜெயிக்கமுடியும் " என்னும்
    மன உறுதியும், நம்பிக்கையும் எப்போதும் நம்மைக்
    கைவிடுவதில்லை.

                                  --- ராபர்ட் ஹெச். ஷூல்லர்
     


பொன்மொழிகள்

495. ஒவ்வொரு நாள் காலையிலும் அந்தந்த நாள் செய்யவேண்டிய
     காரியங்களை திட்டமிட்டு 'நேர ஒழுங்கு' செய்யாதவன்
     எதையும் வெற்றிகரமாக நிறைவேற்ற முடியாத
     குழப்பவாதியாகிவிடுகிறான்.

                               --- பிரெஞ்சு சிந்தனையாளர் ஹியூகோ                                  


496. நீங்கள் அதிக பரபரப்பாக விரையும் போது,உங்களுக்குக்
    கிடைக்கும் பொருளைவிட அதிகவிலையைத்
    தரவேண்டியவர்களாக இருக்கிறீர்கள். பின் ஏன் பரபரப்பு?
    பொறுமையுடன் கூடிய அமைதியே என்றும் வெற்றி தரும்.

                                      --- பெர்ரி ஃபார்பர்



497. உங்களுடைய லட்சியம் டாக்டராகவோ, வக்கீலாகவோ,
    எஞ்ஜினியராகவோ,பெரிய வியாபாரியாகவோ ஆவதாக
    இருக்கலாம்.ஆனால் நீங்கள் ஒரு மனிதர் என்பதை முதலில்
    தெரிந்து கொள்ளவேண்டும். உங்களுக்கு வீட்டில் மனைவி,
    மக்கள்,நண்பர்கள் என்று பலபேருடன் தொடர்பு இருக்கும்.
    இவர்களுடன் உள்ள தொடர்புக்கான நேரத்தை அவர்களுக்காக
    நீங்கள் நிச்சயம் செலவழித்துத்தான் ஆகவேண்டும்.!
    'இலட்சியம், இலட்சியம்' என்று இவர்களை கவனிக்காமல்
    விட்டால் நீங்கள் வாழ்வில் தோற்றவர் ஆகிவிடுவீர்கள்
    ஜாக்கிரதை!

                                         --- பார்பாரா புஷ்


498. மற்றவர்கள் செய்வதைப் பற்றியோ, செய்யாததைப்
    பற்றியோ ஆராய்ந்துகொண்டிருக்காமல், உங்களது
    கடமையில் கண்ணும் கருத்துமாய் இருங்கள்.

                                     --- சுவாமி தேஜோமயானந்தா



499. இரவு தூங்குவதற்கு முன்பு, ஐந்து நிமிடம் மறுநாள்
    சாதிக்கக்கூடிய காரியங்கள் என்னென்ன இருக்கின்றன
    என்பதைப் பற்றிக் கற்பனை செய்யுங்கள். கவலைகளையும்
    அச்சங்களையும் ஒதுக்கிவிட்டு சாதனைகளைப் பற்றி
    மட்டுமே நினைப்பது பலன் கொடுக்கத் தொடங்கும்.

                                     --- பிரடெரிக் பீடர்ஸ்  



500. வெற்றிக்கான ரகசியம் மிகவும் எளிமையானவை.

    1. தினமும் புது விஷயங்களைக் கற்றுக் கொள்ளுங்கள்.
   
    2. உங்களுடைய முடிவுகளைச் சீக்கிரமாக உருவாக்கிக்
       கொள்ளுங்கள்.

    3. அனுசரித்துப் போவதையும், விசுவாசமாக இருப்பதையும்
       கொள்கைகளாக்கிக் கொள்ளுங்கள்.

    4. சின்ன விஷயங்களைப் பற்றி கவலைப்படாதீர்கள்.

     5. எல்லாவற்றிற்கும் மேலாக ஒழுக்கம்தான் சிறந்தது என்று
         தெளிவாக இருங்கள்.

      எந்த மனிதனிடத்தில் தெய்வ நம்பிக்கையும் ஒப்பற்ற தூய்மையும்
      இருக்கின்றனவோ அவனிடத்தில் ஆரோக்கியம் இருக்கிறது.
      வெற்றி இருக்கிறது. வலிமை இருக்கிறது.

                                                  --- ஜேம்ஸ் ஆலன்  


திருக்குறள்





திருக்குறள் 
 (see below in English)
 2. பொருட்பால்
49. காலம் அறிதல்

பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது.                       481

கோட்டானைப் பகலில் அதைவிடப் பலம் குறைந்த
காகம் வென்றுவிடும். அது போல எதிரியை ஜெயிக்கக்
கருதும் அரசனுக்கும் ஏற்ற காலம் வேண்டும்.

kural-481

A crow will conquer owl in broad daylight;
The king that foes would crush, needs fitting time to fight.

A crow will overcome an owl in the day time; So the king
would conquer his enemy must have (a suitable) time.


பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்கும் கயிறு.                               482

காலத்துக்குத் தக்கபடி நடந்தால் அது செல்வத்தை
நீங்காமல் தங்கி இருக்கும்படிக் கட்டும் கயிறாயிருக்கும்.

kural-482

The bond binds fortune fast is ordered effort made,
Strictly observant still of favouring season's aid.

Acting at the right season, is a cord that will immovably
bind success (to a king).


அருவினை என்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின்.                        483

செயல் செய்யும் விதத்தையும் தகுந்த காலத்தையும்
அறிந்து செய்வதால் அவனால் முடிக்கமுடியாத
செயலும் உண்டோ?

kural- 483

Can any work be hard in very fact,
If men use fitting means in timely act?

Is there anything difficult for him to do,
who acts, with (the right) instruments
at the right time?

ஞாலம் கருதினுங் கைகூடும் காலம்
கருதி இடத்தாற் செயின்.                      484

தகுந்த காலத்தையும் இடத்தையும் அறிந்து
பொருந்தும்படிக் காரியங்களைச் செய்பவர்
உலகத்தையே ஆள நினைத்தாலும் முடியும்.


kural-484

The pendant world's dominion may be won,
In fitting time and place by action done.

Though (a man) should meditate (the conquest)
the world, he may accomplish it if he acts in the
right time, and at the right place.
காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருதுபவர்.                            485

உலகப் புகழ் பெற நினைப்பவர் அதற்காக
மலைக்காமல் அதற்கான காலம் கருதிக்
காத்திருப்பர்.
 
kural-485

Who think the pendant world itself to subjugate,
with mind unruffled for the fitting time must wait.

They who thoughtfully consider and wait for the
(right) time for action, may successfully meditate
(the conquest of ) the world.

ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து.                          486

ஊக்கமுள்ளவர் தகுந்த காலத்தைக் கருதி
அடங்கி இருப்பர். அது சண்டை செய்யும்
ஆட்டுக்கடா பாய்ச்சலுக்காகப் பின்னே போவதை
ஒத்தது.

kural-486

The men of mighty power their hidden energies repress,
As fighting ram recoils to rush on foe with heavier stress.

The self-restraint of the energetic  (while waiting for a
 Suitable opportunity), is like the drawing back of a
fighting-ram in order to butt.



பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.                                487

அறிவுடையோர் பகைவர் தீங்கு செய்ததுமே
கோபிக்க மாட்டார். அவரை ஜெயிப்பதற்கான
காலத்தை எண்ணி மனத்துள் கோபம் கொண்டிருப்பர் .

kural-487

The glorious  once of wrath enkindled make no outward show,
At once;  they bide their time, while hidden fires within them glow.

The wise will not immediately and hastily shew out
their anger; they will watch their time, and restrain
it within.

செறு நரைக் காணின் சுமக்க இறுவரை
காணின் கிழக்காம் தலை.                        488

பகைவரைக் கண்டால் பொறுத்துச் செல்ல
வேண்டும். அப்பகைவருக்கு முடிவுகாலம்
வரும் போது அவர் தலை மண்ணில் சாயும்.

kural-488

If foes' detested form they see , with patience let them bear;
when fateful hour  at last they spy, the head lies there.

If one meets his enemy, let him show him all his respect,
until the time for his destruction is  come; when that  is
come, his head will be easily brought low.





எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல்.                          489

சந்தர்ப்பம் கிடைக்கும் போது அதைப் பயன்படுத்திச்
செய்வதற்கரிய சாதனைகளைச் செய்ய வேண்டும்.

kural-489

When hardest gain of opportunity at last is won,
With promptitude let hardest deed be done.

If a rare opportunity occurs, while it lasts, let a man
do that which is  rarely to be  accomplished (but for
such an opportunity).



கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து.                   490

ஒற்றைக் காலால் கொக்கு தவம் செய்வது
போல் காலம் அநுகூலமாயில்லாதபோது
காத்திருக்க வேண்டும். காலம் வந்தபோது
கொக்கு மீனைக் குத்தி எடுப்பது போல்
தப்பாமல் செய்து முடிக்கவேண்டும்.

kural-490

As heron stands with folded wing, so wait in  waiting hour;
As  heron snaps its  prey, when fortune smiles,put forth your power.

At the time when one should use self-control,let him restrain
himself like a heron; and let him like it,  strike,when there is a
Favourable opportunity.
திருக்குறள்
 (see below in English)
 2. பொருட்பால்
50. இடன் அறிதல்

தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்அல் லது.                            491

பகைவரை முற்றுகை செய்வதற்கு ஏற்ற இடம்
காணாமல் இகழவோ, எச்செயலையும் செய்ய
முற்படவோ கூடாது.

kural-491

Begin no work of war, despise no foe,
Till place where you can wholly circumvent you know.

Let not (a king) despise (an enemy), nor undertake anything
(against him), until he has obtained (a suitable) place for
besieging him.


முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்
ஆக்கம் பலவுந் தரும்.                                      492

வேற்றுமை கொண்ட வலிமை உடையவருக்கும்
பாதுகாப்போடு சேர்ந்து வருகின்ற வெற்றி பல
நன்மைகளைத் தரும்.

kural-492

Though skill in war combine with courage tried on battle-field,
The  added gain of fort doth great advantage yield.

Even to those who are men og power and expedients,
an attack in connection with a fortification will yield
many advantages.


ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து
போற்றார்கண் போற்றிச் செயின்.                  493

வெல்வதற்கேற்ற இடத்தை அறிந்து தன்னைப்
பாதுகாத்துக் கொண்டு, பகைவரோடு போர்
செய்வதால் வலிமையற்றவரும் வலியராய்
வெல்வர்.

kural-493

E'en weak ones mightily prevail, if place of strong defence,
They find,protect themselves, and  work their foes offence.

Even the powerless will become powerful and conquer,
if they select a proper field ( of action), and guard themseves,
while they make war on their enemies.




எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து
துன்னியார் துன்னிச் செயின்.                     494

தகுந்த இடத்தை அறிந்து அதனோடு பொருந்தி
நினைத்த காரியத்தைத் தாமதிக்காமல் செய்வோருக்கு
அவரை வெல்ல எண்ணிய பகைவர் தன் எண்னத்தைக்
கைவிட வேண்டும்.

kural-494

The foes who thought to  triumph, find their thoughts were vain,
If hosts advance, seize vantage ground, and thence the fight maintain.

If they who draw near (to fight) choose a suitable place to
approach (their enemy), the latter, will have to relinquish
the thought which they once entertained,of conquering
them.



நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற.                                   495

ஆழமான நீரில் முதலை பிற உயிர்களை வெல்லும்.
அந்நீரிலிருந்து அது வெளிப்பட்டால் மற்ற உயிர்கள்
அதை வெல்லும்.


kural-495

The crocodile prevails in its own flow  of water wide,
If this it leaves,'tis slain  by anything beside.

In deep water, a crocodile will conquer( all other animals);
but if it leave the water, other animals will conquer it.


கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து.                               496

வலிய உருளைகளை உடைய தேர் கடலில் ஓடாது,
கடலில் ஓடும் கப்பல் நிலத்தில் ஓடாது.


kural-496

The lofty car, with mighty wheel, sails not  o'er watery  main,
The boat that  skims the sea,runs  not on earth's hard plain.

Wide chariots, with mighty wheels, will not run on the ocean;
neither will ships  that the traverse ocean, move on the earth.

அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை
எண்ணி இடத்தாற் செயின்.                               497

செய்யும் வழிவகைகளைக் குறையில்லாமல்
திட்டமிட்டுத் தக்க இடத்தில் பொருந்திச் செய்தால்
அஞ்சாமையைத் தவிர வேறு துணைவேண்டாம்.


kural-497

save their own fearless might they need no other aid,
If in right place they fight, all due provision made.

You will need no other aid than fearlessness, if you
thoroughly reflect ( on what you are to do), and select
(a suitable) place  for your operations.




சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்
ஊக்கம் அழிந்து விடும்.                                      498

பெரும் படை கொண்ட அரசன் சிறுபடை செல்வதற்குரிய
இடத்தில் சென்றால் அவனுடைய ஊக்கம் அழிந்துவிடும்.

kural-498

If lord of army vast the safe retreat assail
Of him whose host is small, his mightiest efforts fail.

The power of one who has a large army will perish,
if he goes into ground where only a small army can act.

சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர்
உறைநிலத்தோடு ஒட்டல் அரிது.                499

அரணாகின்ற காவலும் பிற சிறப்பும் இல்லாதவனானாலும்
பகைவர் வாழ்கின்ற இடத்தில் சென்று தாக்குதல் கடினம்.

kural-499

though fort be none, and store of wealth they lack,
'Tis hard a people's homesteads to attack!

It is  a hazardous thing to attack men in their own country,
although they may neither have power nor a good fortress.




காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா
வேலாள் முகத்த களிறு.                        500

வேலேந்திய வீரரைக் கோத்தெடுத்த கொம்புடைய
அஞ்சாத யானை கால்புதையும் சேற்றில் அகப்பட்டால்
அதை நரிகளும் கொன்றுவிடும்.

kural-500

The  jackal slays, in miry  paths of foot-betraying fen,
The Elephant of fearless eye and tusks  transfixing armed men.

A fox can kill a fearless, warrior-faced elephant,
If it go into mud in which its legs sink down.


Wednesday, April 2, 2014

திருக்குறள்



திருக்குறள் 
 (see below in English)
 2. பொருட்பால்
 46. சிற்றினம் சேராமை

சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்.                             451

சான்றோர் அற்பகுணம் கொண்டவரைக் கண்டு
அஞ்சி ஒதுங்குவர். சிறுமை குணம் படைத்தவரோ
அவரைச் சுற்றமாகக் கருதித் தழுவிக்கொள்வர்.
kural-451

The great of soul will mean  association fear;
The mean of soul regard mean men as kinsmen dear.

(True) greatness fears the society of the base; it is only
the low-minded who will regard them as friends.


நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு.                            452

சேர்ந்த மண்ணின் தன்மையால் தண்ணீர்
வேறுபட்டு மண்ணின் தன்மையை ஒத்திருக்கும்.
அது போல மக்கள் சேரும் இனத்தின்  இயல்புக்கு
ஒத்திருப்பர்.

kural-452

The waters' virtues change with soil through  which  they flow;
As man's  companionship  so will his wisdom show.

As water changes (its nature), from the nature of soil
(in which it flows), so will the character of men resemble
that of their associates.
திருக்குறள்
 (see below in English)
 2. பொருட்பால்
                                               46. சிற்றினம் சேராமை



மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்
இன்னான் எனப்படும் சொல்.                      453

மக்களுக்கு இயற்கை அறிவு மனத்தால் ஏற்படும்.
'இப்படிப்பட்டவன்' என்று உலகத்தார் மதிப்பிடுவது
சேர்ந்திருக்கும் இனத்தால் ஏற்படும்.

kural-453

Perceptions manifold in men are of the mind alone;
The value of the man by his companionship is known.

The power  of knowing is from the mind; (but) his
Character is from that of his associates.

மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு
இந்த்துள தாகும் அறிவு.                          454

இவன் இனத்தாரிலிருந்து உயர்ந்தவன்  என்று
நம் மனம் சில சமயம் தவறாக மதிப்பிட்டு விடும்.
செயலின் இறுதியில் இனத்தின் இயல்பு புரியும்.



kural-454

Man's wisdom seems the offspring of his mind;
'Tis outcome of companionship we find.

wisdom appears to rest in the mind, but it really
exists to a man in his companions.




மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனந்தூய்மை தூவா வரும்.                     455

மனத்தூய்மையும், செய்யும் செயலின் தூய்மையும்
ஒருவன் சேர்ந்த இனத்தின் தூய்மையைப் பொறுத்தே
அமையும்.

kural-455

Both purity of mind, and purity of action clear,
Leaning no staff  of pure  companionship,to man draw near.

Chaste company is the  staff on which come, these two things,
Viz,purity of mind and purity  of conduct.




திருக்குறள்
 (see below in English)
 2. பொருட்பால்
                                               46. சிற்றினம் சேராமை

மனந்தூயார்க் கெச்சம் நன் றாகும்  இனந்தூயார்க்கு
இல்லைநன் றாகா வினை.                                456

மனம் தூய்மையாக உள்ளவர்க்கு மரணத்துக்குப் பின்
புகழ் எஞ்சி நிற்கும். தூய்மையான இனத்தில் பிறந்தவருக்கு
நன்மையாகாத செயல் இல்லை.

kural-456

From true pure-minded men a  virtuous race proceeds;
To men of pure companionship belong no  evil deeds.

To the pure-minded there will be a good posterity.
By those whose associates are pure, no deeds will
be done that are not good.


மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்
எல்லாப் புகழும் தரும்.                            457

நன்மையே நினைக்கும் மனத்தைக் கொண்டவர்
எல்லா உயிருக்கும் முன்னேற்றத்தைத் தருகிறார்.
ஒரு நன்மையான இனம் அதோடு புகழையும்
கொடுக்கிறது.

kural-457

Goodness of mind to lives of men increaeth gain;
And  good companionship doth all of praise obtain.

Goodness of mind will give wealth, and good society
will bring with it all praise, to men.


மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு
இனநலம் ஏமாப் புடைத்து.                          458

நல்ல மனத்தைக் கொண்டவரானாலும் சான்றோர்க்கு
இனத்தின் நன்மை மேலும் நல்ல காவலாக அமையும்.

kural-458

To perfect men, though minds right good belong,
yet good companionship is confirmation strong.

Although they may have great (natural) goodness
of mind, yet good society will tend to strengthen it.




மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும்
இன நலத்தின் ஏமாப் புடைத்து.                    459

நல்ல மனம் கொண்டவர்க்கு சொர்க்க வாசம்
கிட்டும். இனத்தின் பெருமையால் அது மேலும்
சிறப்படையும்.


kural-459

Although to mental goodness joys of other life belong,
yet good companionship is confirmation srong.

Future bliss is (the result) of goodness of mind;
and even this acquires strength from the society
of the good.

திருக்குறள்
 (see below in English)
 2. பொருட்பால்
                                               46. சிற்றினம் சேராமை

நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉம் இல்.                              460

ஒருவருக்கு நல்ல இனத்தை விட உயர்ந்த துணையும்
இல்லை. தீய இனத்தை விட துன்பம் தரும் பகையும்
இல்லை.
kural-460

Than good companionship no surer help we know
Than bad companionship nought causes direr woe.

There is no greater help than the company of the good;
there is no greater source of  sorrow than the company
of the wicked.


திருக்குறள்
 (see below in English)
 2. பொருட்பால்
47. தெரிந்து செயல்வகை

அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல்.                   461

ஒரு செயலைத் தொடங்கு முன் அதனால்
ஏற்படும் லாபத்தையும், நஷ்டத்தையும்,
பின்னால் கிடைக்கும் ஆதாயத்தையும்
ஆராய்ந்து செய்ய வேண்டும்.


Kural-461

Expenditure, return, and profit of  the deed
In time to come; weigh these-than to the act proceed.

Let a man reflect on what will be lost, what will be
 acquired and (from these) what will be his ultimate
gain,and(then,let him) act.


திருக்குறள்
 (see below in English)
 2. பொருட்பால்
47. தெரிந்து செயல்வகை

அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல்.                   461

ஒரு செயலைத் தொடங்கு முன் அதனால்
ஏற்படும் லாபத்தையும், நஷ்டத்தையும்,
பின்னால் கிடைக்கும் ஆதாயத்தையும்
ஆராய்ந்து செய்ய வேண்டும்.


Kural-461

Expenditure, return, and profit of  the deed
In time to come; weigh these-than to the act proceed.

Let a man reflect on what will be lost, what will be
 acquired and (from these) what will be his ultimate
gain,and(then,let him) act.


தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல்.                           462

தன் இனத்தாரோடு சேர்ந்து ஆராய்ந்து சிந்தித்து ஒரு
செயலைச் செய்யத் தொடங்கினால் வெற்றி சுலபத்தில்
கிடைக்கும்.        

Kural-462

With chosen friends deliberate; next use the private thought;
Then act. By those who thus proceed all works with ease are wraught.

There is nothing too dificult to (be attained by) those who,
before they act, reflect well themselves, and thoroughly
consider ( the matter) with chosen friends.


ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார்.                         463

பின்னால் வரும் ஆதாயத்திற்காக உள்ள
முதலை இழந்து விடக் காரணமான காரியங்களை
அறிவுடையோர் செய்ய மாட்டார்கள்.

kural-463

To risks one's all and lose, aiming at added gain;
Is rash affair, from which the wise obstain.

Wise men will not , in the hopes of profit,
Undertake works that will consume their principal.



திருக்குறள்
 (see below in English)
 2. பொருட்பால்
47. தெரிந்து செயல்வகை

தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்
ஏதப்பாடு அஞ்சு பவர்.                         464

இழிவு தரும் குற்றங்களுக்கு அஞ்சுபவர்,
நன்மை தரும் என்று நிச்சயமாகத் தெரியாத
காரியங்களைச் செய்யத் தொடங்க மாட்டார்கள்.


kural-464

A work of which the issue is not clear,
Begin not  they reproachful scorn who fear.

Those who fear reproach will not commence
anything which has not been (thoroughly considered)
and made clear to them.


வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்
பாத்திப் படுப்பதோ ராறு.                         465

ஒரு செயலின் நன்மை தீமைகளை தீர
ஆலோசிக்காமல் செயலில் இறங்குவது,
பகைவரை நல்ல இடத்தில் ஸ்திரப்படுத்துவதற்கு
ஏற்ற வழி.

kural-465

With plans not well matured  to rise against your foe,
Is way to plant him out where he is to grow!

One way to promote the prosperity of an enemy,
is (for a king) to set out (to war) without having
thoroughly weighed his ability ( to cope with its chances).




செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும்.                   466

செய்யத்தகாதவற்றைச் செய்தாலும் கேடு
வரும். செய்யத்தகுந்தவற்றைச் செய்யத்
தவறினாலும் கெடுதல் வரும்.

kural-466

'Tis ruin if man do an unbefitting thing;
Fit things to leave undone will equal ruin bring.

He will perish who does not what is not fit to do;
And he also  will perish who does not do  what it
is fit to do.


எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.           467

செய்யத்தகுந்த காரியத்தை ஆராய்ந்துபார்த்த
பிறகே தொடங்கவேண்டும். தொடங்கிய பிறகு
ஆலோசிப்போம் என்பது குற்றமாகும்.

kural-467

Think, and then dare the deed! Who cry,
'Deed dared, we'll think,' disgraced shall be.

Consider, and then undertake a matter; after
having undertaken it, to say " We will consider,"
is folly.




ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும்.                468

தக்க வழியில் செய்யப்படாத முயற்சி பலர்
உதவி செய்து காப்பாற்றினாலும் குற்றப்பட்டு
விடும்.

kural-468

On no right system if  man toil and strive,
Though many men assist, no work can thrive.

The work, which is not done by suitable methods,
will fail though many stand to uphold it.


திருக்குறள்
 (see below in English)
 2. பொருட்பால்
47. தெரிந்து செயல்வகை


நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை.                     469

அவரவருடைய குணங்களை அறிந்து அவரவருக்குப்
பொருந்துமாறு செய்யாவிட்டால் நன்மை செய்த போதிலும்
தவறு ஏற்படும்.


kural-469

Though well the work be done, yet one mistake is made,
To habitudes of various men when no regard is paid.

There are failures even in acting well, when it is done
without knowing the various  dispositions of men.


திருக்குறள்
 (see below in English)
 2. பொருட்பால்
47. தெரிந்து செயல்வகை


எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மொடு
கொள்ளாத கொள்ளாது உலகு.                             470

தன் தகுதிக்குப் பொருந்தாதவற்றை உலகம்
ஏற்றுக்கொள்ளாது. ஆதலால் உலகம் இகழ்ந்து
ஒதுக்காதவற்றை ஆராய்ந்து செய்ய வேண்டும்.

kural-470

Plan and perform no work that others may despise;
What  miseseems  a king the world will not approve as wise.

Let a man reflect, and do things which bring no reproach;
The world will not  approve, with him, of things which do  not
become of his position to adopt.

திருக்குறள்
 (see below in English)
 2. பொருட்பால்
48. வலியறிதல்




வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்.                  471

செயலின் வலிமையையும் தன் பலத்தையும்
பகைவனுடைய பலத்தையும் இருவருக்கும்
துணையாக இருப்பவரின் வலிமையையும்
ஆராய்ந்து செயலைச் செய்ய வேண்டும்.

kural-471

The force the strife demands,the force he owns, the force of foes,
The force of friends; these should he weigh ere to the war he goes.

Let(one) weigh well the strength of the deed (he purposes  to do),
his own strength, the strength of his enemy, and the strength of
the allies (of both), and then let him act.
திருக்குறள்
 (see below in English)
 2. பொருட்பால்
48. வலியறிதல்

ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குஸ் செல்லாதது இல்.                472

தன்னால் முடியும் செயலையும், அதற்காக
அறிய வேண்டியதையும் அறிந்து அச்செயலில்
உறுதியாகப் பாடுபடுகின்றவர்க்கு முடியாதது
என்பதே கிடையாது.


kural-472

Who  know what can be wrought, with knowledge of the means,on this,
Their mind firm set,go forth,nought goes with them amiss.

There is nothing which may not be accomplished by those who,
before they attack (an enemy), make themselves acquainted
with their  own ability, and with whatever  else is (needful)
to be  known, and apply themselves wholly to their object.


உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்.                       473

தன் பலத்தைத் தவறாகக் கணக்கிட்டு மன
ஊக்கம் கொண்டு ஆரம்பித்து நடுவில் அதை
முடிக்க முடியாமல் அழிந்தவர் பலர்.

kural-473

Ill-deeming of their proper powers, have many  monarchs striven,
And midmost of unequal conflict fallen as under riven.

There are many who, ignorant of their (want of) power
(to meet it), have haughtily set out to war, and broken
down in the midst of it.

அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்.                      474

மற்றவர்களோடு ஒத்து நடக்காமல் தன் வலிமையின்
அளவும் தெரியாமல் தன்னைப் பற்றிக் கர்வம்
கொண்டிருப்பவன் விரைந்து கெடுவான்.

kural-474

who not agrees with those around, no moderations knows,
In self -applause indulging, swift to ruin goes.

He will quickly perish who, ignorant of his own resources
flatters himself of his greatness, and does not live in peace
with his neighbours.

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.                                475

மயிலிறகுகளை ஏற்றிய வண்டியேயானாலும்
அளவுக்கு அதிகமாக ஏற்றப்பட்டால் அச்சு முறியும்.

kural-475

With Peacock feathers light, you load the wain;
yet, heaped too high, the axle snaps in twin.

The axle tree of a bandy, loaded only with peacock's
feathers will break, if it be greatly overloaded.

நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்
உயர்க்கிறுதி யாகி விடும்.                        476

ஒரு மரத்தின் நுனிக் கிளையில் ஏறியவர்
அளவு கடந்து அதற்கு மேலும் ஏறமுயன்றால்
அது அவரது உயிருக்கே ஆபத்தாக முடியும்.


kural-476

Who daring climbs, and would himself upraise
Beyond  the branch's tip, with life the forfeit pays.

There will be an end to the life of him who, having
climbed out to the end of a branch, ventures to go
further.

ஆற்றின் அளவறிந்து ஈக அதுபொருள்
போற்றி வழங்கும் நெறி.                         477

தன்னிடம் உள்ள பொருளை அளவறிந்து
அதற்கேற்பக் கொடுக்க வேண்டும். அதுவே
பொருளைப் போற்றி தருமம் செய்யும் நெறியாகும்.

kural-477

With knowledge of the measure due,as virtue bids you  give!
That is the way to guard your wealth, and seemly live.

Let a man know the measure of his ability (to give), and let
Him give accordingly; such giving is the way to preserve his
property.

திருக்குறள்
 (see below in English)
 2. பொருட்பால்
48. வலியறிதல்

ஆகாறு  அளவிட்டி தாயினுங் கேடில்லை
போகாறு அகலாக் கடை.                         478

வருமானம் வருகிற வழி சிறியதானாலும்
போகும் வழி அகலமாகாதிருந்தால் தீமைவராது.


kural-478

Incomings may be scant; but yet, no failure there,
If in expenditure you rightly learn to spare.

Even though the income (of a king) be small,
It will not cause his (ruin), if his outgoings
be not larger than his income.


அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்.                       479

வரவுக்குள் செலவை அடக்கி வாழாதவன் வாழ்க்கை
செழிப்புடையது போலத் தோன்றி பின்னர் அழிந்துவிடும்.

kural-479

Who prosperous lives and of enjoyment knows no bound,
His seeming wealth, departing, nowhere shall be found.

The prosperity of him who lives without knowing the
measure(of his property),will perish, even while it
seems to continue.


உளவரை தூக்காத ஒப்புர வாண்மை
வளவரை வல்லக்கெடும்.                         480

தனது செல்வ நிலையை, வரும்படியை உணராமல்
ஊகாரம் செய்பவனின் செல்வம் விரைவில் சுருங்கும்.

kural-480

Beneficence that measures not its bound of means,
Will swiftly bring  to nought the wealth on which it leans.

The measure of his wealth will quickly perish, whose liberality
weighs not the measure of his property.



Friday, March 7, 2014

திருக்குறள்


திருக்குறள் 
 (see below in English)
 2. பொருட்பால்
  41. கல்லாமை

அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல்.                 401

அறிவு பூர்த்தியாவதற்குக் காரணமான
புத்தகங்களைப் படிக்காமல் கற்றறிந்தவரிடம்
பேசுதல், சூதாட்ட அரங்கம் இல்லாமல்
பாய்ச்சிக் காய்களை வீணே உருட்டிக்
கொண்டிருபதற்கு இணையாகும்.


kural-401

Like those at draughts would play without the chequered square,
Men void of ample lore would counsels of the learned share.

To speak in assembly  ( of the learned) withoutfullness of
 knowledge, is like playing at chess (on a board) without
squares.

திகல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்
இல்லாதாள் பெண்காமுற் றற்று.                        402

படித்தவர் நிறைந்த சபையில் படிக்காதவன் ஒன்றைச்
சொல்ல விரும்புவது முலை இரண்டும் இல்லாதவள்
பெண்ணாக இருக்க ஆசைப்பட்டதற்கு ஒப்பானது.

kural-402

Like those who doat on hoyden's undeveloped charms are they,
Of learning void , who egarly their power of words display.

The desire of the unlearned to speak ( in an assembly),
is like a women without breasts  desiring ( the enjoyment)
women-hood.


கல்லா தவரும் நனினல்லர் கற்றார்முன்
சொல்லா திருக்கப் பெறின்.                       403

படித்தவர் முன்னால் படிக்காதவர் மௌனமாக
இருந்தாரானால் அவரது அறிவின்மை வெளிப்படாது.


kural-403

The blockheads, too,may men of worth appear,
If they can keep from speaking where the learned hear!

The unlearned also are very excellent men, if they know
how to keep silence before the learned.


கல்லாதான் ஒட்பம் கழிய நன் றாயினும்
கொள்ளார் அறிவுடையார்.                      404

படிக்காதவனுடைய அறிவு எத்தனை சிறந்ததாக
இருந்தாலும் அறிவுடையோர் அதை ஏற்றுக்
கொள்ளமாட்டார்.
kural-404

From blockheads'lips , when words of wisdom glibly flow,
The wise receive them not, though good they seem to show.

Although the natural knoweledge of an unlearned man
may be very good, the wise will not accept for true knowledge.



கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும்.                          405

படிக்காதவன் படித்தவருடன் சொற்போர்
நடத்தினால் அவனது சுய கௌரவமும்,
தன்னம்பிக்கையும் அழியும்.

kural-405
As worthless shows the worth of man unlearned,
When council meets, by words he speakes discerned.

The self-conceit of  an unlearned man will fade away,
as soon as he speakes in an assembly (of  the learned).

உளரென்னும் மாத்திரையர் அல்லார் பயவாக்
களரனையர் கல்லா தவர்.                     406

ஒன்றும் விளையாத களர் நிலமும் நிலம்தான்
படிக்காமல் உயிரோடு நடமாடும் மனிதரும்
களர்நிலமும் ஒன்றுதான்.

kural-406

'They are': so much is true of men untaught;
But,like a barren field , they yield us nought!

The unlearned are like worthless baren land:
all that can be said of them is, that they exist.



நுண்மான் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
மண்மான் புனைபாவை யற்று.                    407

எதையும் நுணுக்கமாக ஆராயும்  அறிவற்றவனுடைய
அழகு மண்ணால் செய்யப்பட்ட பதுமையைப் போன்றது.
(மண் பொம்மை  கீழே விழுந்தால் உடைந்து விடும்)


kural-407

who lack the power of subtle,large and penetrating sense,
Like puppet,decked with ornaments of  clay,their beauty's vain pretence.

The  beauty and goodness of one who is destitute of knowledge
by the study of great and exquisite works,is like (the beauty and
goodness) of a  painted earthen doll.

நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட்ட திரு.                        408

படிக்காதவரிடம் உள்ள செல்வம் படித்தவரிடம்
உள்ள தரித்திரத்தை விட மிகுந்த துன்பத்தைத்
தரும்.

kural-408

To men  unlearned,  from fortune's favour greater-evil springs
Than poverty  to men of  goodly wisdom brings.

Wealth,gained by the unlearned,will give more sorrow than
the poverty which may come upon the learned.

மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்திலர் பாடு.                              409

படிக்காதவர் உயர்ந்த குலத்தில் பிறந்திருந்தாலும்
தாழ்ந்தகுலத்தில் பிறந்து நன்கு படித்தவருக்கு
ஈடாகமாட்டார்.


kural-409

Lower are men unlearned, though noble be their race,
Than low-born men adorned with learning 's grace.

The unlearned,though noble born in a high caste,
are not equal in dignity to the learned; though they
may have been in a low caste.


விலொங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனையவர்.                          410

அறிவு பிரகாசிப்பதற்குக் காரணமான நூல்களைக்
கற்றவரோடு கல்லாதவரை ஒப்பிடும் போது
மக்களுக்கும், மிருகங்களுக்கும் உள்ள வேற்றுமை
காணப்படுகிறது.

kural-410

Learning's irradiating grace who gain,
others excel, as men the bestial train.

As beasts by the side of men, so are other
Men by the side of those who are learned
in celebrated works;


செல்வத்துள் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை.                             411

செல்வங்களுள் ஒன்றாகப் போற்றப்படும் செவியால்
அறியப்படும் கேள்வி ஞானம் எல்லாச் செல்வத்திலும்
முதன்மையானது.



kural-411

Wealth of wealth is wealth acquired be ear attent;
Wealth  mid all wealth supremely excellent.

Wealth (gained) by wealth of wealth;  that wealth
is the chief of all wealth.


செவிக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப்படும்.                        412

காதுக்களுக்கு கேட்டலாகிய உணவு கொடுக்காத
போது கேட்பதற்குச் சக்தி கிடைப்பதற்காக
வயிற்றுக்கு சிறிது உணவு கொடுக்கலாம்.

kural-412

When 'tis no longer time the listening ear to feed
With trifling dole of food supply the body's need.

When there is no food for the ear,give a little also
to the stomach.
செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து.                    413

செவிக்கு உணவான கேள்வி ஞானத்தைப்
பெறுபவர் பூவுலகில் வாழ்ந்தாலும் யாக ஹவிஸை
உண்ணும் தேவர்களுக்கு சமமானவர்.

kural-413

Who feed their ear with learned teachings rare,
Are like the happy gods oblations rich  who share.

Those who in this world enjoy instruction which is
the food of the ear,are  equal to the Gods, who
Enjoy the food of the sacrifices.


கற்றில னாயினும் கேட்க அஃதொருவற்க்கு
ஒற்கத்தின் ஊற்றாந் துணை.                    414

நல்ல நூல்களைப் படிக்க முடியாவிட்டாலும்
கற்றறிந்தவரிடம் கேட்டறிதல் நன்மை தரும்.
அது சங்கடங்கள் நேரும் காலத்தில் ஊன்றுகோல்
போல் துணையாயிருக்கும்.

kural-414

Though learning none hath he, yet let him hear alway:
In weakness this shall prove a staff and stay.

Although a  man be without learning,let him listen
( to the teaching of  the  learned); that will be to him
a staff in adversity.


இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல்.                  415

ஒழுக்கமுடைய சான்றோரின் அறிவுரை
வழுக்கல் உடைய சேற்று  நிலத்தில் ஊன்று
கோல் போல் வாழ்க்கையில் உதவும்.

kural-415

Like staff in hand of him in slippery ground who strays
Are words from mouth of those who walk in righteous  ways.

The words of the good are like a staff in a slippery place.


எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்.                                 416

எவ்வளவு சிறியதானாலும் நல்ல விஷயங்களைக்
கேட்பது, கேட்டு மனத்தில் பதித்துக் கொண்ட அளவு
நன்மையைக் கொடுக்கும்.

kural-416

Let each man good things learn, for e'en as he
Shall learn, he gains increase of perfect dignity.

Let a man listen, never so little, to good (instruction),
even that will bring him great dignity.




பிழைத்துணர்ந்தும் பேதமை சொல்லார் இழைத்துணர்ந்
தீண்டிய கேள்வி யவர்.                               417

நுட்பமாக அறிந்து நிறைந்த கேள்வி ஞானம் உடையவர்
ஒன்றைத் தவறாகப் புரிந்து கொண்டாலும் தன் அறியாமை
வெளிப்பட அதை வெளியே சொல்லமாட்டார்.

kural-417

Not e'en through inadvertence speak they foolish  word,
With clear discerning mind who've learning's ample lessons heard.

Not even when they have imperfectly understood ( a matter),
will those men speak foolishly,who have profoundly studied
and diligently listened(to instruction).

கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி.                        418

நல்ல விஷயங்களைக் கேளாத செவிகள்
கேட்கும் தன்மையைப் பெற்றிருந்தும், செவிட்டுத்
தன்மை உடையதாகவே கருதப்படும்.
kural-418

Where teaching  hath not oped the learner's ear,
The man may listen, but he scarce can hear.

The ear which has not been bored by instruction,
although it hears, is  deaf.



நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராதல் அரிது.                         419

நுட்பமானவற்றைக் கேட்டுத் தெளிந்தவர்
அல்லாது மற்றவரின் வாய் பணிவான,
பண்புள்ள பேச்சுக்களைப் பேசுவது அரிதாகும்.

kural-419

'Tis  hard for mouth to  utter gentle, modest word,
When ears discourse of lore refined have never heard.

It is a rare thing to find modesty,a revered mouth-with
those who have not received choice instruction.

செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்.                            420

காதுகளால் சிறந்த செய்திகளைக் கேட்டு உணராமல்
நாவின் சுவை மட்டுமே உணர்ந்த மக்கள் இறந்தால்
என்ன?  உயிருடன் வாழ்ந்தால் என்ன?
 
kural-420

His mouth can taste, but ear no taste of joy can give!
What matter if he die,or prosperous live?

What does it matter whether those men live or die,
who can judge of tastes by the mouth, and not by
the ear?


திருக்குறள்
 (see below in English)
 2. பொருட்பால்
                                              43. அறிவுடைமை

அறிவற்றங் காக்கும் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்.                     421

அழிவு வராமல் காக்கும் கருவி அறிவு.
அறிவி பகைவரால் அழிக்க முடியாத கோட்டையுமாகும்.


kural-421

True wisdom wards off woes, A circling fortress high;
Its inner strength man's eager foes unshaken will defy.

Wisdom is a weapon to ward of destruction;
It is an inner fortress which enemies cannot destroy.



சென்ற  இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு.                     422

மனம் ஆசைப்படும் விதமெல்லாம் போகவிடாமல்
தீமையிலிருந்து காத்து நன்மையானதில் ஈடுபடுத்துவது
அறிவாகும்.
 
kural-422

Wisdom restrains, nor suffers mind to wander where it would
From every evil calls it back, and guids in way of good.

Not to permit the mind to go where it lists, to keep it from
evil and to employ it in good,this is wisdom.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.                       423

எந்த விஷயத்தையும் எவரெவர் வாய் மூலமாகக்
கேட்டாலும் அந்த விஷயத்தின் நிஜத்தை அறிவது
அறிவு.



kural-423

Though things diverse  from divers sages'lips we learn,
'Tis wisdom's part in each the true thing  to discern.

To discern the truth in every thing, by whomsoever
spoken,is wisdom.

எண்பொருள வாகச்செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு.                              424

கேட்பவர் மனத்தில் சுலபமாய்ப் புரியும்படிச் சொல்லி
மற்றவர் பேச்சில் உள்ள நுணுக்கமான விஷயங்களைப்
புரிந்து கொள்வதே அறிவுடைமை.

kural-424

Wisdom hath use of lucid speech, wods that acceptance win,
And subtle sense  of other men's discourse takes in.

To speak so as that the meaning may easily enter the mind
of the hearer, and to discern the subtlest thought which may
lie hidden in the words of others,this is wisdom.


உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்ல தறிவு.                       425

உலகத்தில் உயர்ந்தவரை நட்பாக்கிக் கொள்வது
சிறந்த அறிவு. முதலில் மகிழ்ந்து, பின் சினம் கொண்டு
நடக்காதது அறிவுடைமையாகும்.

kural-425

Wisdom emraces frank the world, to no caprice exposed;
Unlike the lotus flower, now opened wide, now petals strictly closed.

To secure the friendship  of the great is true wisdom; it is (also)
wisdom to keep(that friendship unchanged,and ) not  opening
and closing (like the lotus flower).



எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு
அவ்வ துறைவது அறிவு.                            426

உலகம் எப்படி நடை பெறுகின்றதோ அதற்கு
ஏற்றமுறையில் நடப்பது சிறந்த அறிவு.

kural-426

As dwells the world , so with the world to dwell
In harmony-this is to wisely live and well.

To live as the  world lives, is wisdom.

அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்.                                  427

அறிவுடையோர் எதிர்காலத்தில் நடக்கப் போவதை
முன்பே யூகித்துக் கொள்வர். அறிவற்றவரால் அப்படி
அறிய முடியாது.

kural-427

The wise discern, the foolish fail to see,
And minds prepare for things about to be.

The wise are those who know beforehand what will happen;
those who do not know this are the unwise.


அஞ்சுவ தஞ்சாமை பேதமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்.                    428

பயப்பட வேண்டியதற்குப் பயப்படாமலிருப்பது
பேதமை. அறிவுடையோர் பயப்பட வேண்டியதற்கு
நிச்சயம் பயப்படுவார்.

kural-428

Folly meets fearful ills with fearless heart;
To fear where cause of fear exists is wisdom's part.

Not to fear what ought to feared, is folly; it is the
work of the wise to fear what should be feared.


எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய்.                               429

வரப் போவதை யூகித்துக் காத்துக் கொள்ளும்
அறிவுடையோருக்கு அவர் நடுங்கும்படி வரும்
துன்பம் ஒன்றும் இல்லை.


kural-429

The wise with watchful soul who coming ills foresee;
From coming evil's dreaded shock are free.

No terrifying calamity will happen to the wise,
Who (foresee) and guard against coming evils.




அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்.                       430

அறிவுடையார் செல்வம் இல்லாதவரானாலும்
எல்லாம் உடையவராகவே சான்றோர் கருதுவர்.
அறிவற்றவர் செல்வந்தராயினும் ஒன்றும்
இல்லாதவராகவே நினைப்பர்.

kural-430

The  wise is rich,with ev'ry blessing blest;
The fool is poor,of everything possessed.

Those who possess wisdom, possess every thing;
Those who have not  wisdom, whatever they may
possess, have nothing.

திருக்குறள்
 (see below in English)
 2. பொருட்பால்
                                              44. குற்றங்கடிதல்

செருக்குஞ்சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து.                 431

அகம்பாவமும், கோபமும், அற்பகுணமும்
இல்லாதவருடைய வாழ்வில் உண்டாகும்
முன்னேற்றம் பெருமை உடையது.


kural-431

Who arrogance, and wrath, and littleness of low desire restrain,
To sure increase of lofty dignity attain.

Truely great is the excellence of those(kings) who are free
from pride,anger,and lust.



இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு.                        432

கருமித்தனமும்,புகழற்ற மானமும், தகுதியற்ற
மகிழ்ச்சியும் தலைமைப் பதவியிலுள்ளவனுக்குக்
குற்றங்களாகும்.


kural-432

A niggard hand,o'erweening self-regsrd, and mirth
Unseemingly, bring disgrace to men of kingly birth.

Avarice, undignified pride, and  low pleasures are faults
in a king.


தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழி நாணு வார்.                                    433

பழிக்கு அஞ்சுகின்ற சான்றோர், தினையளவாகிய
சிறு குற்றம் செய்தாலும் அதைப் பனையளவாக
நினைத்து மனம் வருந்துவார்.

kural-433

Though small as millet-seed the fault men deem;
As palm tree vast to those who fear disgrace 'twill seem.

Those who fear guilt, if they commit a fault small
as a Millet-seed, will consider it to be as large as a
Palmyra tree.



குற்றமே காக்க  பொருளாகக் குற்றமே
அற்றம் தரூஉம் பகை.                         434

குற்றம் அழிவைக் கொடுக்கும் பகையாகும்.
அதனால் குற்றம் செய்யாமல் இருப்பதை
லட்சியமாகக் கொண்டு கட்டுப் பாட்டோடு
வாழ வேண்டும்.


kural-434

Freedom from faults is  wealth; watch heedfully
'Gainst these, for fault is fatal enmity.

Guard against faults as a matter (of great consequence;for)
faults are deadly enemy.


வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.                       435

குற்றம் வருவதற்கு முன் வராமல் காத்துக்
கொள்ளாதவனுடைய வாழ்க்கை நெருப்பின் முன்
இருக்கும் வைக்கோல் போர் போல் அழிந்து விடும்.

kural-435

His joy who guards not 'gainst the coming evil day,
Like straw before the fire shall swift consume away.

The prosperity of him who does not timely guard
against faults, will perish like straw  before fire.

தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின்
என்குற்ற மாகும் இறைக்கு.                    436

முதலில் தன்னைக் குற்றமில்லாதவனாகச் செய்து
கொண்டு, பிறகு மற்றவர் குற்றங்களை ஆராயும்
நற்குணம்  கொண்ட தலைவனிடம் என்ன குற்றம் வரும்.

kural-436

Faultless the king who first his own faults cures,and then
permits himself to scan faults of other men.

What fault will remain in the king who has put away
His own evils, and looks after the evils of others.


செயற்பால செய்யா திவறியான் செல்வம்
உயற்பால தன்றிக் கெடும்.                       437

செய்யத்தக்க நல்லவற்றைச் செய்யாமல் பொருளைச்
சேர்த்து வைத்திருப்பவனின் செல்வம் பெருமையின்றி
அழியும்.

kural-437

Who leaves undone what should be done, with niggard mind,
His wealth perish, leaving not a wrack behind.

The wealth of the avaricious man, who does not expend it
for the purposes for which he ought to expend it will waste
away and not continue.

பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்
எண்ணப் படுவதொன் றன்று.                     438

பொருளை செலவழிக்க மனமின்றி கஞ்சத்தனமாக
நடந்து கொள்வது எந்தப் பிரிவிலும் சேராத
தனிக்குற்றமாகும்.

kural-438

The greed of soul that avarice men call,
When faults are summed,is worst of all.

Griping avarice is not to be reconed as
one among other faults;(it stands  alone-
greater than all).



வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை.                              439

சுயகர்வம் கொண்டு தன்னைதானே புகழ்ந்து
பேசக் கூடாது. நன்மை தராத செயல்களை
விரும்பவும் கூடாது.

kural-439

Never indulge in self-complaisant  mood,
Nor deed desire that yields no gain of good.

Let no (one) praise himself, at any time let
him not desire to do useless things.


காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல்.                                440

தன் விருப்பம் மற்றவர்களுக்குத் தெரியாதபடி
விரும்பியதை அனுபவிக்க வல்லவனானால்
அவனை வஞ்சிக்க நினைக்கும் பகைவரின்
சூழ்ச்சிகள் வியர்த்தமாகும்.

kural-440

If, to your foes unknown, you cherish what you love,
Counsels of men who wish you harm will harmless prove.

If ( a king) enjoys, privately the things which he desires,
the designs of his enemies will  be useless.


திருக்குறள்
 (see below in English)
 2. பொருட்பால்
                                          45. பெரியாரைத் துணைக்கோடல்

அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல்.                 441

தரும நெறிகளை அறிந்தவராய், தன்னை
விடமுதிர்ந்த அறிவுடையவராய் உள்ளவரின்
தோழமையை அடையும் வகையறிந்து அடைய
வேண்டும்.  

kural-441

As friends the men who virtue know, and riper wisdom share,
Their worth weighed  well, the king  should choose with  care.

Let  (a king) ponder well its value, and secure the  friendship
of men of virtue and  of mature knowledge.

உற்ற நோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்.                   442

வந்த துன்பம் போக்கி இனி துன்பம் வராமல்
முன்னதாகவே காத்துக் கொள்ளும் தன்மை
உடையவரைப் போற்றி அவர் நட்பைப் பெற
வேண்டும்.

kural-442

Cherish the all-accomplished men as friends,
Whose skill the present ill removes, from coming ill defends.

Let ( a king) procure and kindly care for men who can
overcome difficulties when they occur,and guard
against them before they happen.


அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்.                          443

சான்றோரைப் போற்றித் தனக்குச் சுற்றமாகக்
கொள்ளுதல் அரியவை எல்லாவற்றிலும்
அரியதாகும்.

kual-443
To cherish men of mighty soul, and make them all  their own,
Of kingly treasures rare,as rarest gift is known.

To cherish great men  and  make them his own,is the
Most difficult of all difficult things.

தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையு ளெல்லாந் தலை.                   444

தம்மை விட அறிவில் பெரியவர் தனக்கு
வேண்டியவராக அமைவது எல்லா பலத்திலும்
முதன்மையானது.

kural-444

To live with men of greatness that their own excels,
As cherished friends, is greatest power that with a monarch dwells.

So to act as to make those men, his own,
Who are greater than himself is of all
Powers the highest.


சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்.                    445

நல்ல வழிகளை ஆராய்ந்து கூறுவோரையே
உலகம் கண்ணாகக் கொண்டு நடப்பதால்
மன்னனும் அத்தகையோரையே ஆராய்ந்து
துணையாகக் கொள்ளவேண்டும்.

kural-445

The king, since counsellors are monarch's eyes,
Should counsellors select with counsel wise.

As a king must use  his ministers as eyes
(in managing his kingdom), let him well
examine their character and qualifications
before he engages them.


தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்த தில்.                         446

சான்றோர் கூட்டத்தில் ஒருவனாய், தானும்
அறிவுடன் நடக்க வல்லவனுக்கு அவன்
பகைவர்களால் எந்த தீங்கும் செய்ய முடியாது.

kural-446

The king,who knows to live with worthy men allied,
Has nought to fear any foeman's pride.

There will be nothing left for enemies to do,
against him who has the power of acting
(so as to secure) the fellowship of worthy men.

இடிக்குந் துணையாரை ஆள்வாரை யாரே
கெடுக்குந் தகைமை யவர்.                  447

கடிந்து புத்திமதி கூறும் பெரியாரின் துணை
கொண்டு ஆளும் தலைவனைக் கெடுக்கும்
ஆற்றல் எவருக்குண்டு?
kural-447

What power can work his fall, who faithful ministers
Employs, that  thunder out reproaches when he errs.

Who are great enough to destroy him who has servants
that have power to rebuke him?


இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்.                      448

கடிந்து அறிவுரை கூறும் சான்றோரின் துணை
இல்லாத அரசன் தன்னைக் கெடுக்கும் பகைவர்
இல்லாத போதும் கெடுவான்.

kural-448

The king with none to censure him, bereft of safeguards all,
Though none his ruin work, shall surely ruined fall.

The king,who is without the guard of men who  can rebuke
Him, will perish, eventhough there be no one to destroy him.



முதலிலார்க்கு ஊதியம் இல்லை மதலையாஞ்
சார்பிலார்க்கு இல்லை நிலை.                      449

முதல் சேர்க்காத மனிதருக்கு அதனால் வரும்
வருமானம் கிடையாது. அது போல தன்னைத்
தாங்கும் துணையில்லாதவர்களுக்கு நிலையான
பாக்கியம் கிடையாது.


kural-449

Who owns no principal,can have no gain of usuary;
Who lacks support of friends, knows no stability.

There can be no gain to those who have no capital;
And in like manner there can be no permanence to
those who are without the support of adherents.


பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்.                       450

நல்லவரான பெரியவர்களின் நட்பை விட்டு
விலகி இருத்தல் பலருடைய பகையைக்
கொள்வதை விடப் பத்து மடங்கு தீமையானது.


kural-450

Than hate of many foes incurred, works greater woe
Ten-fold, of worthy men the friendship  to  forego.

It is tenfold more injurious to abandon the friendship
of the good, than to incur the hatred of the many.


Sunday, January 26, 2014

பொன்மொழிகள்

பொன்மொழிகள்


350. தன்னம்பிக்கை முன் எந்த ஆயுதமும் நிற்காது.


351. முதலில் சிந்தியுங்கள்; பிறகு பேசுங்கள்; பேசினாலும்
     குறைவாகப் பேசுங்கள்.

352. சோர்வு, வறுமை, தீயசெயல் மூன்றிலிருந்தும்
     நம்மைக் காப்பது உழைப்பு.

                              --- வால்டேர்


353. நீ என்ன சொல்கிறாய் என்பது முக்கியமன்று;
    அதை எப்படிச் சொல்கிறாய் என்பதுதான்
    மனித உறவுகளில் மாற்றம் செய்ய வல்லது.

                         --- ஹ்யூஸ்யியர்ன்ஸ்

354. பழைய துன்பங்களுக்காக புதிய கண்ணீரை
    ஏன் செலவழிக்க வேண்டும்? அது வீண்.


355. சிறந்த மனிதன் என்பவன் சொற்களைச் சிக்கனமாகப்
    பயன்படுத்துவான்; நடத்தையில் உறுதியாக இருப்பான்.

                                  --- கன்பூஷியஸ்


356. சினத்தில் துவங்கும் எதுவும் அவமானத்தில்தான் முடியும்.



357. மனிதனின் மன உறுதி மலைகளையும் தகர்த்தெறியும்.

                                          --- மார்க்ஸ்

358. படித்திருந்தாலும், பட்டம் பெற்றிருந்தாலும்
    பெரியவர் சொல் கொஞ்சமாவது கேள்.

                              --- வாரியார்


359. முறையாக முயற்சி செய்தாலொழிய எந்தக் காரியமும்
    வெற்றியடையாது.

                                --- வால்டேர்

360. எஜமானனாக இருந்தால் சில சமயம் குருடனாக
    இருங்கள். வேலையாளனாக இருந்தால் சில சமயம்
    செவிடனாக இருங்கள்.

                               --- புல்லர்


361. உன் அன்பின் தன்மைக்கு ஏற்றபடி உன் செயல்கள்
    அமையும். உன் செயல்களுக்கு ஏற்றபடி உன்
    வாழ்க்கை அமையும்.

                             --- சாக்ரடீஸ்



362. மன்னித்தலே மனிதனுடைய முதற்கடமை.
    மற்றவற்றை நமக்காகப் பிறர் செய்யமுடியும்.
    ஆனால் மன்னித்தலை நாம்தான் செய்யமுடியும்.

                            --- ஜான் ஹெர்பர்ட்

363. உன் மகிழ்ச்சி நிலத்திருக்க வேண்டுமானால்
    எதிலும் மிதமாக இரு.

                           --- சார்லஸ் அகஸ்டின்


364. முதலில் நீங்கள் நல்லவனாய் இருங்கள்; கெடுதல்கள்
     பறந்து போய்விடும். உலகம் முழுவதும் மாறிவிடும்.

                                      --- விவேகானந்தர்

365. நீங்கள் சிந்திக்கும் ஒவ்வொரு நற்சிந்தனையும்
    நீங்களே எதிர்பாராத அளவிற்கு அற்புதமான
    முடிவுகளை ஒவ்வொரு முறையும் தரும்.

                      --- ஜான்ரோஜர்


366. புத்தகங்களோடு வாழ்க்கையையும் சேர்த்துப் படிப்பவன்தான்
    உண்மையான அறிவாளி.

                         --- லின்யுடங்

367. தவறாக வேண்டுமானால் சிந்தியுங்கள்; ஆனால்
    உங்களுக்காக நீங்களே சிந்தியுங்கள். அதுதான்
   முக்கியம்.

                                 --- வெஸ்லின்


368. முடியும் என்ற உணர்வு பிறக்கும் போதே அதைச்
    செய்து முடிக்கும் திறமையும் அந்த ஜீவனுக்குள்
    அடங்கி இருப்பதால்தான் வெற்றி பிறக்கிறது.

                                   --- ஜேம்ஸ் ஆலன்


369. நேற்றைய தோல்விக்களுக்கான காரணங்களைக்
    கண்டு கொண்டு அவற்றை விலக்கிப் புதிய பாதையில்
    உற்சாகத்துடனும் நம்பிக்கையுடனும் செல்லுங்கள்.

370. நல்ல ஆலோசனைகளை விரும்பிக் கேட்பது
    நம் திறமையை அதிகப்படுத்தும்.

                                   --- கதே


371. நீண்ட நேரம் சிந்தித்தபின் உங்கள் நாவை அசையுங்கள்;
    நீங்கள் அவமானம் அடையமாட்டீர்கள்.

                                          --- அரிஸ்டாட்டில்



372. அன்பையும் மரியாதையையும் தயங்காமல்
    ஒவ்வொருவருக்கும் கொடுப்பவன் இந்த உலகத்தில்
    எதையும் சாதித்துவிடுவான்.




373. எந்தப் பிள்ளை தன் நல்லொழுக்கங்களால் பெற்றோரை
    மகிழ்விக்கிறானோ அவனே நல்ல பிள்ளை.

                                     --- விவேகானந்தர்

374. உடல் நலம் உள்ளவனுக்கு நம்பிக்கை இருக்கும்.
     நம்பிக்கை உள்ளவனுக்கு எல்லாம் இருக்கும்.

375. அடிமையைப்போல் உழைப்பவன் அரசனைப்போல்
    உண்பான்.

                                   --- பிராங்க்ளின்


376. மௌனமாக இருக்கத் தெரியாதவனுக்கு நன்றாகப்
     பேசவும் தெரியாது.

                                   --- புரு பர்க்

377. உற்சாகமுள்ளவனை எதிர்ப்பு தடைசெய்வதில்லை;
    மாறாக அவனுக்கு அது மேலும் ஊக்கத்தை ஊட்டுகிறது.

                                      ---ஹில்லர்

378. தவறுக்கு முன்னோர் இட்டபெயர் விதி. நீங்கள்
    தவறு செய்யாமல் உண்மையோடு போராடினால்
    விதியை வெல்லலாம்.

                              ---- ஆல்பாஷால்ஸ்

379. நேரத்தைத் தாமதப்படுத்தாதே; தாமதங்கள்
    தீமையான முடிவைத் தரும்.

                                 --- ஷேக்ஸ்பியர்

380. நல்ல இதயம் மட்டும் இருந்தால் போதும்;
    எல்லாத் துர்திஷ்டங்களையும் தகர்த்தெறிந்துவிடலாம்.

                                  --- ஸ்பெயின்


381. சந்தர்ப்பம் நிறைய பேரை அழைக்கிறது;
    ஆனால் சிலர்தான் எழுந்து நிற்கின்றனர்.

                 --- ஆலிவர் வோர்போண்ட்


382. அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும் வரை உங்களுக்கு
    என்றைக்கும் விடிவுகாலம்தான்.

                                 ---- பிளாட்டோ


383. தன்னந்தனியே எவனொருவன் நிற்கத் துணிகின்றானோ
    அவனே உலகில் வலிமைமிக்க மனிதன்.

                                      --- மாத்யூஸ்  


384. அழகு என்பது நாம் செய்துள்ள செயல்களில்தான்
    உள்ளது.செயலில் உண்மையிருந்தால் அந்த அழகு
    ஒவ்வொருவரையும் கவரும். உலகில் இதைத் தவிர
    வேறு நிலையான அழகு எதுவுமில்லை.


385. அறிஞர்கள் அறிவைத் தேடுகிறார்கள்; முட்டாள்கள்
    அதைப் பெற்றுவிட்டதாக நினைக்கிறார்கள்.

                                         ---ஜேம்ஸ் ஆலன்



386. அன்பு, பணிவு, நேர்மை, தாழ்மை, நன்றி, நம்பிக்கை
    உடையவராக இருந்து இறைவனை நம்புங்கள்;
    உங்களை யாராலும் அசைக்கவே முடியாது.

                                 --- விவேகானந்தர்


387. துன்பமும் ஏழ்மையும் போதிப்பதுபோல் வேறு ஒன்றும்
    போதிக்க முடியாது.



388. சிக்கனமாக வாழும் ஏழை சீக்கிரம் செல்வந்தனாவான்.

                                      --- செனேகா


389. தூய்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய மூன்றும்
    வெற்றிக்கு இன்றியமையாதவையாகும். அத்துடன்
    இவை அனைத்திற்கும் மேலாக அன்பு இருந்தாக வேண்டும்.

                                   --- விவேகானந்தர்




390. வாழ்நாளைப் பெருக்க உணவைச் சுருக்கு.


391. அகங்காரமில்லாமல் பழகுவரிடம் இந்த அகில உலகமும்
    திரண்டு வந்து ஆதரவாகக் கூடிவிடும்.

                                     --- எமர்சன்


392. காலம்! காலத்திற்கு உள்ள மகிமையை யாராலும்
    விளக்கிப் புரிய வைக்க முடியாது. நம்முடைய
    எல்லாப் பிரச்னைகளுக்கும் தீர்வே காலம்தான்.
    கால ஓட்டத்தால் எல்லாக் குறைகளுமே கரைவது
    மட்டுமல்ல, நிறைவாகவும் மாறுகின்றன.

393. மனநிறைவு என்பது இயற்கையாகவே நம்மிடம்
    உள்ள செல்வம்; ஆடம்பரம் என்பது நாமே
   தேடிக் கொள்ளும் வறுமை.


394. எதையும் செய்யாதிருப்பதைவிட ஏதாவது ஒன்றை
    நாள்தோறும் செய்துகொண்டிருப்பது மேல்.

                                      --- வில்லியம் ஜேம்ஸ்


395. மனிதன் வாழ்க்கையைப் புரிந்துகொள்வதைவிட அதை
    வாழ்ந்து பார்ப்பதே சிறந்த முயற்சி.
                                 --- சாந்தான்யா

395. நீங்கள் சிரிக்கும்போது உங்களுடன் சேர பலர் வருவார்கள்.
    ஆனால் நீங்கள் அழும்போது யாரும் வரமாட்டார்கள்.

                                        --- கார்லைல்



396. நாம் விரும்பினால் சோகம் மகிழ்ச்சியாக மாறும்.

                                      --- அரவிந்தர்

397. நண்பர்கள் இல்லாவிட்டால் பெரும்பாலோர் துன்பத்தின்
    தூணாகவே நின்றுகொண்டு இருப்பார்கள்.

                                 --- ஜெம்மிடெய்லர்


398. மின்மினிப் பூச்சி பறக்கும் போதுதான் சுடர்விடுகிறது.
    மனிதனும் செயல்படும்போதுதான் உயர்வடைகிறான்.


399. அரைகுறை தன்னம்பிக்கை கூடாது;
    எதிலும் முழுமை வேண்டும்.

                             --- வால்டேர்



400. புது நம்பிக்கைகளை வளர்த்துக் கொண்டு புதியவர்களைச்
    சந்தியுங்கள்.