Translate

Saturday, September 29, 2012

சிவபெருமான் திருப்பள்ளியெழுச்சி





சிவபெருமான் திருப்பள்ளியெழுச்சி



விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா

விழுப்பொருளே! உன் தொழுப்படி யோங்கள்

மண்ணகத் தேவந்து வாழச்செய் தானே!

வண்திருப் பெருந்துறையாய்! வழி யடியோம்

கண்ணகத் தேநின்று களிதரு தேனே!

கடலமு தே! கரும் பேவிரும் படியார்

எண்ணகத் தாய்! உல குக்குயிரானாய்!

எம்பெரு மான்பள்ளி எழுந்தருளாயே!


புவனியிற் போய்ப்பிற வாமையின் நாள் நாம்

போக்குகின்றோம் அவமே இந்தப் பூமி

சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித்

திருப்பெருந் துறையுறை வாய்திரு மாலாம்

அவன்விருப் பெய்தவும் மலரவன் ஆசைப்

படவும் நின்னலர்ந்தமெய்க் கருணையும் நீயும்

அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்!

ஆரமு தேபள்ளி எழுந்தரு ளாயே!

                 (முற்றும்)




Friday, September 28, 2012

சிவபெருமான் திருப்பள்ளியெழுச்சி




சிவபெருமான் திருப்பள்ளியெழுச்சி


முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்;

மூவரும் அறிகிலர் யாவர்மற் றறிவார்?

பந்தணை விரலியும் நீயும்நின் னடியார்

பழங்குடில் தொறும் எழுந்தருளிய பரனே!

செந்தழல் புரைதிரு மேனியுங் காட்டித்

திருப்பெருந் துறையுறை கோயிலுங் காட்டி,

அந்தண னாவதும் காட்டிவந் தாண்டாய்

ஆரமு தே! பள்ளி எழுந்தருளாயே.

                      (தொடரும்)

Thursday, September 27, 2012

சிவபெருமான் திருப்பள்ளியெழுச்சி




சிவபெருமான் திருப்பள்ளியெழுச்சி



அதுபழச் சுவையென அமுதென அறிதற்கு

அரிதென எளிதென அமரரும் அறியார்

இதுஅவன் திருவுரு: இவன் அவன்: எனவே

எங்களை ஆண்டுகொண் டிங்கெழுந் தருளும்

மதுவளர் பொழில்சூழ் திரு உத்தர கோச

மங்கையுள்ளாய்! திருப் பெருந்துறை மன்னா

எதுஎமைப் பணிகொளும் ஆறது கேட்போம்:

எம்பெரு மான்! பள்ளி எழுந்தரு ளாயே!

                      (தொடரும்)

Wednesday, September 26, 2012

சிவபெருமான் திருப்பள்ளியெழுச்சி




  சிவபெருமான் திருப்பள்ளியெழுச்சி



பப்பற வீட்டிருந் துணரும்நின் அடியார்

பந்தனை வந்தறுத் தார் அவர் பலரும்

மைப்புறு கண்ணியர்: மானுடத் தியல்பின்

வணங்குகின் றார் அணங் கின்மண வாளா!

செப்புறு கமலங்கள் மலருந்தன் வயல்சூழ்

திருப்பெருந் துறையுறை சிவபெருமானே!

இப்பிறப் பறுத்தெமை ஆண்டருள் புரியும்

எம்பெரு மான்! பள்ளி எழுந்தரு ளாயே!

                      (தொடரும்)




Tuesday, September 25, 2012

சிவபெருமான் திருப்பள்ளியெழுச்சி




சிவபெருமான் திருப்பள்ளியெழுச்சி




பூதங்கள் தோறும்நின் றாயெனின் அல்லால்

போக்கிலன் வரவிலன் என நினைப் புலவோர்

கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்

கேட்டறி யோம்உனைக் கண்டறிவாரைச்

சீதங்கொள் வயல்திருப்பெருந்துறை மன்னா!

சிந்தனைக் கும்அரியாய்! எங்கள் முன்வந்து

ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும்

எம்பெரு மான்! பள்ளி எழுந்தரு ளாயே!

                            (தொடரும்)

Monday, September 24, 2012

சிவபெருமான் திருப்பள்ளியெழுச்சி





சிவபெருமான் திருப்பள்ளியெழுச்சி



இன்னிசை வீணையர், யாழினர், ஒருபால்;

இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்;

துன்னிய பிணைமலர்க் கையினர், ஒருபால்;

தொழுகையர், அழுகையர், துவள்கையர் ஒருபால்;

சென்னியில் அஞ்சலி கூப்பினர், ஒருபால்;

திருப்பெருந் துறையுறை சிவபெருமானே!

என்னையும் ஆண்டுகொண் டின்னருள் புரியும்

எம்பெரு மான்! பள்ளி எழுந்தரு ளாயே!

                                                            (தொடரும்)




Sunday, September 23, 2012

சிவபெருமான் திருப்பள்ளியெழுச்சி



சிவபெருமான் திருப்பள்ளியெழுச்சி



கூவின பூங்குயில்; கூவின கோழி

குருகுகள் இயம்பின; இயம்பின சங்கம்;

ஓவின தாரகை யொளி ஒளி உதயத்து

ஒருப்படு கின்றது விருப்பொடு நமக்குத்

தேவ! நற் செறிகழல் தாளிணை காட்டாய்!

திருப்பெருந் துறையுறை சிவபெருமானே!

யாவரும் அறிவரி யாயெமக் கெளியாய்!

எம்பெரு மான்! பள்ளி எழு ந்தருளாயே!

                  (தொடரும்)




Saturday, September 22, 2012

சிவபெருமான் திருப்பள்ளியெழுச்சி




சிவபெருமான் திருப்பள்ளியெழுச்சி


அருணன் இந்திரன் திசை அணுகினன் இருள்போய்

அகன்றது உதயம் நின் மலர்த்திரு முகத்தின்

கருணையின் சூரியன் எழ எழ, நயனக்

கடிமலர் மலரமற் றண்ணலங் கண்ணாம்

திரள் நிறை அறுபதம் முரல்வன இவையோர்

திருப்பெரு ந்துறையுறை சிவபெருமானே!

அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே

அலைகட லே! பள்ளி எழு ந்தருளாயே!

                    (தொடரும்)



Wednesday, September 19, 2012

சிவபெருமான் திருப்பள்ளியெழுச்சி




   சிவபெருமான் திருப்பள்ளியெழுச்சி


போற்றியென் வாழ்முத லாகிய பொருளே!

புலர்ந்தது பூங்கழற் கிணைதுணை மலர்கொண்டு

ஏற்றி நின் திருமுகத் தெமக்கருள் மலரும்

எழில் நகை கொண்டு நின் திருவடி தொழுகோம்

சேற்றிதழ்க் கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்

திருப்பெருந் துறையுறை சிவபெருமானே!

ஏற்றுயர் கொடியுடை யாய்எனை யுடையாய்

எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே!