Translate

Sunday, October 6, 2013

பொன்மொழிகள்

பொன்மொழிகள்

251. புகழை வெறுக்கத் தெரிந்துகொள். காரணம் தீமையை
    வளர்ப்பவை புகழ்மொழிதான்.  

                                        --- ஹதீஷ்

பொன்மொழிகள்

252. தடைகள் ஏற்படும் போதெல்லாம் துணிவு
    இருந்தால்தான்  செயல்பட முடியும்.

                                   ---  டால்ஸ்டாய்



253. மேலோர்கள் கெட்டாலும் அவர்களுடைய மேன்மையான
    பண்புகள் ஒரு போதும் கெடாது.

                                  ---- லாங்பெல்லோ
                     
                                   
254. பலவீனமானவர்கள் அதிர்ஷ்டத்தில் நம்பிக்கை
    வைக்கிறார்கள்.
    பலமுடையவரோ காரணகாரியத்தில் நம்பிக்கை
    வைக்கின்றனர்.

                                 --- எமர்சன்



255. தனது நாட்டை நேசிக்காதவன் எதையுமே
    நேசிக்கமுடியாது.

                                --- பைரன்


256. துன்பமும் தோல்வியும் நம் மனத்தைப் பதப்படுத்தும்
    சோதனைகள். பதப்படாத மனத்தால் எதையும்
    சாதிக்க முடியாது.

                               ---சுவாமி விவேகானந்தர்


257. நீ எண்ணித் துணிந்த பின்பு உலகம் முழுவதும்
    வாளெடுத்து வந்து எதிர்த்து நின்ற போதும் உன்னுடைய
    இலட்சியத்தைக் கைவிடாதே.  



258. நீங்கள் செயல்படுகிறவர்கள் என்றால் அறிவைத்
    தேடிப் பெற்றுப் பயன்படுத்திக் கொள்கிறவராக
    இருக்க வேண்டும்.

                                 --- எஸ்.ஷர்மா

259. தவறுகளை ஒப்புக்கொள்ள மறுப்பதைவிட பெரிய
    அவமானம் வேறில்லை.

                               ---காந்திஜி

260. கூடிவாழும் இயல்பு இல்லாதவனுக்கு சமுதாய வாழ்வு
    சுகமாக இருக்காது.

                                  --- ஷேக்ஸ்பியர்

261. பிறரைப் பாராட்டவும் அங்கீகரிக்கவும் சிக்கனம் காட்டாதீர்கள்.

                                         ---- ஸ்டேபிள்



262. நண்பன் இதயத்தின் ஒளியாக இருக்கிறான்.

                                 --- எமர்சன்

263. இந்த நிமிடத்தை முறையாகப் பயன்படுத்தும் போது
    இன்றைய நாளை முறையாகப் பயன்படுத்திக்கொள்கிறோம்.  


264. அதிருப்தி என்பது நம்பிக்கையின்மையாகும்.

                                        --- எமர்சன்



265. தொழில் இல்லாத கல்வி நீரின்றி வாடும் தாவரத்தைப் போன்றது.
   
                                             ---போவி


266. செலவுக் கணக்கு எழுதாதவன் சேமிக்கத் தெரியாதவன்.



267. உங்களால் நம்பிக்கையுடன் கனவுகாண முடியும் என்றால்
    கனவில் கண்டதை நிஜத்திலும் செயல்வடிவில் செய்து
    முடிக்கமுடியும்.

                                             --- பில்கேட்ஸ்


268. நீங்கள் செய்யும் தவறை உடனே திருத்திக் கொள்ளுங்கள்.
    இல்லாவிட்டால் இன்னொரு தவறைச் செய்தவராகி
    விடுவீர்கள்.
                                      --- கன்பூஷியஸ்


269. காலம் நதியைப் போன்றது; உற்பத்தியாகும் இடத்துக்கு
    அது திரும்பவே திரும்பாது.


270. தன்னம்பிக்கை ஓர் உந்து சக்தி. அது உங்களையும்
    ஊக்குவிக்கும். அடுத்தவரையும் ஊக்குவிக்கும்.

                                       ---வால்டேர்


271. துன்பங்களைப் பலர் பொறுத்துக் கொள்கின்றனர்,
    ஆனால் அவமதிப்பைச் சகிப்பவர்கள் வெகுசிலரே.

                                     --- தாமஸ்


272. இனிய சொல்லால் இரும்புக் கதவைக்கூடத் திறக்கலாம்.

                               --- துருக்கிய பழமொழி          



273. நம் கையில் பணமிருந்தால் எல்லா வாசல்
   கதவுகளும் திறந்திருக்கும்.

                                --- இங்கர்சால்


274. நல்லொழுக்கம் பகைவனையும் வென்று விடுகிறது.

                                 --- சாணக்கியன்


275. ஊக்கமுள்ள மனிதன் தன் கடமைகளைத் தொடர்ந்து
    செய்து கொண்டே இருப்பான்.

                                 --- எமர்சன்

276. ஏழைகள் உணவைத் தேடுகிறார்கள்;
    செல்வர்கள் பசியைத் தேடுகின்றனர்.

                      --- பெஞ்சமின் பிராங்ளின்  


277. வாழ்க்கையில் தைரியமாக எதையும் அணுக
   முடியாதவர்களுக்கு அவர்கள் விரும்பிய எதுவுமே
   கிடைப்பதில்லை.          
                               --- தாமஸ் ஏ. செப்வில்


278. அன்பினால் ஊக்கப்பட்டு அறிவினால் நடத்தப்படுவது
    வாழ்க்கை.

                               --- ரஸ்ஸல்

279. எது நன்மை என்பது அதை இழந்தபின்தான் தெரியும்.

                                   ---- இங்கர்சால்


280. நாளைக்கு நல்ல காரியம் செய்வேன் என்று
    சொல்பவன் முட்டாள். அறிவுள்ளவன் நேற்றே
    அதை செய்து முடித்திருப்பான்.

                                   --- மார்ஷல்



281. சரியாகத் சிந்திக்கத் தெரிந்துகொண்டால் உலகத்தையே
    மாற்றிவிடலாம்.

                                --- போவீ

282. நீங்கள் உயர்த்திக்கொள்ள விரும்பினால்
   வேறொருவரை உயர்த்துங்கள்.

                     --- டி. வாஷிங்டன்


283. நட்பு கொள்வதில் நிதானமாக செல்லவும். ஆனால்
    நட்பு கொண்டபின் உறுதியாகவும் நிலையாகவும்
    நிற்கவும்.

                             --- சாக்ரடீஸ்




284. பிறருடைய பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால்
    மகத்தான காரியம் எதையும் செய்யமுடியாது.


285. உன் நோக்கத்தை வாளால் சாதித்துக் கொள்வதைவிட
    புன்சிரிப்பால் சாதித்துக்கொள்வதே சிறந்தது.

                                     --- ஷேக்ஸ்பியர்

286. நம்பிக்கையை இழந்துவிடாதே. பாதை, கத்தி முனையில்
    நடப்பதைப்போல மிகவும் கடினமானதுதான். எனினும்
    எழுந்திரு, விழித்துக்கொள். மனம் தளராதே. நீ அடைய
   வேண்டிய உனது லட்சியமாகிய குறிக்கோளைக் கண்டுபிடி.

                                    --- விவேகானந்தர்


287. திடமான மனம் இருந்தால் வெற்றி தானகவே தேடிவரும்.

                               --- சாணக்கியன்

288. எதையும் நம்பிக்கையுடன் தாங்குபவன் இறுதியில்
    வெற்றியடைவான்.

                              --- பெர்னியஸ்


289.உள்:ளத்தில் மட்டும் அன்பு இருந்தால் போதாது:
   அது செயலில் பயன்படவும் வேண்டும்.

                                       --- டால்ரிக்ஸ்



290. உலகிலுள்ள எந்த சக்தியாலும் அளக்க முடியாத சக்தி
    ஒன்று உள்ளது. அதுவே மனிதனுடைய மனோசக்தி.

                                      --- ஸ்டாலின்

291. கவலை நமது சவப் பெட்டியில் ஓர் ஆணியை
    அறைகிறது.சிரிக்கும் ஒவ்வொரு சிரிப்பும் ஓர்
   ஆணியைக் கழற்றுகிறது.

                          --- வால்காட்


292. நடந்ததை அமைதியுடன் ஏற்றுக்கொண்டு
    நடக்க வேண்டியதைக் கவனி.

                             --- கார்லைல்


293. உழைப்பு கொழுப்பைக் கரைக்கும்; கொழுப்பு கண்ணை
    மறைக்கும்.

                                 --- வாரியார்


294. இரண்டு சதவீதம் கற்பனையும் தொண்ணூற்று
    எட்டு சதவீதம் கடும் உழைப்பும் உள்ளவனே
    மேதையாக இயலும்.

                              --- மில்டன்



295. உன் மகிழ்ச்சி நிலைத்திருக்க வேண்டுமானால்
    எதிலும் மிதமாக இரு.

                            --- சார்லஸ்  அகஸ்டின்


296. இவ்வுலகில் கடமையை விட கவலையே பலரைக்
    கொன்று விடுகிறது. ஏனெனில் அநேகர் கடமையைச்
    செய்வதைவிட்டுவிட்டுக் கவலைப்பட்டுக்கொண்டேயிருக்கின்றனர்.

                                --- இராபர்ட்


297. ஆசை பேராசையாகவும்,அன்பு வெறியாகவும் மாறும் போது
     அமைதி அவ்விடத்தைவிட்டு நகர்ந்து விடுகிறது.

                                   ---மாக்ஸிம் கார்க்கி.


298. மற்றவர்களிடம் வாதமிடாதே. குற்றங்களில் எல்லாம்
    பெரிய குற்றம் வாய்ப்பேச்சுதான்.

                             --- ஆல்பிரட் நோபல்


299. வீண்பேச்சு, வீண்வம்பு, வீராப்பு குடும்பத்தைக் கெடுக்கும்.
    விடியும் வரை தூங்குவது கஷ்டத்தைக் கொடுக்கும்.

                               --- பெர்னாட்ஷா



300. மனத்தை மறைக்க முடியாது. உள்ளதே உள்ளிருந்து
    வெளிவரும்.

                                     --- ஸ்ரீ அரவிந்தர்