Translate

Sunday, December 1, 2013

பொன்மொழிகள்



பொன்மொழிகள்

301. உங்களின் துணிவு, கடின உழைப்பு இந்த இரண்டையும்
    பொருத்துத்தான் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி பிறக்கும்;
    நீடிக்கும்.

                                    --- பால்ஜாக்

302. வெற்றியை விட முக்கியமானது நல்ல பண்பு.
     வெற்றிமீது உள்ள தாகத்தால் அதை இழந்துவிட
     அனுமதிக்கக்கூடாது.

                       --- ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்  


303. காலத்தின் மதிப்பு உங்களுக்குத் தெரியுமா? அப்படியானால்
    உங்கள் வாழ்வின் மதிப்பு உங்களுக்குத் தெரியும்.

                                            --- நெல்சன்


304. உழைப்பு மூன்று பெருந்தீமைகளை நம்மிடமிருந்து
    நீக்குகிறது.
    1. தொந்தரவு 2. தீயொழுக்கம் 3. தரித்திரம்.

                                        --- வால்டேர்


305. செல்வமும் சிபாரிசும் வளர்ச்சிக்கு உதவா.

                                    --- மாத்யூஸ்

306. பார்க்காமல் எதையும் பருகாதீர்கள்;
    படிக்காமல் எதிலும் கையெழுத்துப்
    போடாதீர்கள்.

                           --- ஸ்பானிஷ்


307. வெற்றி என்பது இலட்சியத்தைப் படிப்படியாகப்
     புரிந்து கொள்வதேயாகும்.


308. மனோசக்தியுள்ள மனிதனுக்கு நன்மையான இடம்
    கிடைத்தே தீரும்.

                                      --- எமர்சன்


309. பழக்கம் முதலில் சிலந்திவலையைப் போல்தான்
    இருக்கும். அதைத் தொடர்ந்து செய்தால் இரும்பு
    சங்கிலியைப் போன்று மாறி விடும்.

                                         --- எட்வர்ட்ஸ்

310. ஒருவன் எப்போதும் வீரனாகவே வாழமுடியாது;
    ஆனால் என்றென்றைக்கும் மனிதனாக வாழமுடியும்.

                                        --- கதே


311. செய்யத் தெரிந்தவன் சாதிக்கிறான்;
    செய்யத்தெரியாதவன் போதிக்கிறான்.

                            --- சாக்ரடீஸ்


312. வளமான காலத்தில் நண்பர்கள் நம்மைத் தெரிந்து கொள்கிறார்கள்.
    வறுமைக் காலத்தில் நண்பர்களை நாம் தெரிந்துகொள்கிறோம்.

                                         --- இங்கர்சால்


313. இயற்கையை நேசிக்கக் கற்றுக்கொண்டால் இந்த பிரபஞ்சமே
    இறைவனின் குரலைக் கேட்கச் சொல்லும். பிரபஞ்சமே
    இறைவனின் சிந்தனைகள் என்ற ஞானமும் பிறக்கும்.

                                          --- வால்டேர்



314. மன அமைதி பெற  நீ விரும்பினால் ஒன்று நான் கூறுவேன்.
     பிறர் குறைகளைக் காணாதே; அதற்குப் பதிலாக உன்
    குறைகளைக் காண்.

                                 --- அன்னை சாரதாமணி

315. நீங்கள் முதலில் நல்லவனாய் வாழுங்கள்;
    கெடுதல்கள் எல்லாம் பறந்துபோய்விடும்.
    உலகம் முழுவதும் மாறிவிடும்.

                              ---விவேகானந்தர்  


316. பேசும் முன் கேளுங்கள்,
    எழுதும் முன் யோசியுங்கள்,
   செலவு செய்யுமுன் சம்பாதியுங்கள்,
   முதலீடு செய்யுமுன் விசாரியுங்கள்,
   குற்றம் செய்யும் முன் நிதானியுங்கள்:,
   ஓய்வு பெறும் முன் சேமியுங்கள்,
   இறப்பதற்கு முன் தர்மம் செய்யுங்கள்.

             --- வில்லியம் ஆர்தர்

317. செயலே புகழ்பரப்பும்;வாய் அல்ல.

                             --- ஆவ்பரி



318. திட்டங்கள் தீட்டிக்கொண்டிருப்பதை விட்டு ஒழியுங்கள்;
    முதலில் செயலில் இறங்குங்கள்.

                                     --- பிளாரன்ஸ்

319. சின்னஞ்சிறு செலவுகளைப் பற்றிக் கவனமாக இருங்கள்.
    கப்பலையே கவிழ்ப்பது சிறிய ஓட்டைதான்.

                                    --- பெஞ்சமின் பிராங்கிளின்


320. எதற்கும் அஞ்சாதே; எதையும் வெறுக்காதே; யாரையும்
    ஒதுக்காதே; உன் பணியை ஊக்கத்துடன் செய்.

                                     ---அரவிந்தர்.


321. ஆசான் புகட்டாத அறிவை அனுபவம் புகட்டும்.

                                   --- குய்நாட்

322. வாழ்க்கை என்பது எண்ணங்களால் ஆனது.

                         ---மார்க்ஸ் அரேலியஸ்

323. எவன் தவிர்க்க முடியாததைத் துணிச்சலுடன்
    ஏற்றுக்கொள்வதோடு அதை விருப்பத்துடன்
    பொறுத்துக்கொள்கிறானோ அவன்தான் மாமனிதன்.

                             --- நீட்ஸே  
324. நாம் அனைவருமே நமக்குள்ளே ஒரு தெய்வீக
    அக்கினியுடன் பிறந்திருக்கிறோம். இந்த அக்னியைக்
    கொழுந்துவிடவைத்து அதன் பொன்னொளியை
   இந்த உலகத்தில் பரப்புவதற்காக முனைவது
   நமது கடமை.

                             --- ஏ.பி.ஜே. அப்துல்கலாம்



325. வாழ்க்கைத் தேர்வில் காப்பி அடிக்க முடியாது;
    ஏனெனில் அதை நீயே எழுதி நீயே திருத்துகிறாய்.

                                 --- இங்கர்சால்



326. பிறரைச் சீர்திருத்தும் கடமையைவிடத் தன்னை
    சீர் திருத்துவதே முதற்கடமை.

                             --- பெர்னாட்ஷா


327. தன்னைத்தானே வெற்றிக்கொண்டவன் ஆயிரம்
    வீரர்களை வெற்றிக் கொண்டவனைவிட மேலானவன்.

                                  --- புத்தர்


328. என்னுடைய தவறுகளை எனக்குச் சொல்பவர்
    என்னுடைய ஆசிரியராக இருக்கிறார். என்னுடைய
    புண்ணியங்களை எனக்குச் சொல்பவர் எனக்குத்
    தீங்கு செய்கிறார்.

                              --- கன்பூஷியஸ்

329. சிக்கனம்தான் பெரிய வருமானம்.

                             ---செனீகா


330. ஆணவம் கொண்டவருக்கு ஆபத்து எப்பொழுது
     வருமோ  அது ஆண்டவனுக்கே  தெரியாது.


                                   ---வால்டேர்
 

331.வாழ்க்கையில் மட்டும் போராட்டங்கள் இல்லையென்றால்
   இது ஒரு மேடை நாடகமாகவே இருந்திருக்கும்.

                            --- வில்லியம் ஜேம்ஸ்


332. படித்தல் ஒரு மனிதனை முழு மனிதனாய் ஆக்குகிறது.
    எழுதுதல் ஒரு மனிதனை சரியான மனிதனாகச் செய்கிறது.
    வரலாறு ஒருவனை அறிவாளியாக ஆக்குகிறது.
    நீதி நூல்கள் ஒருவனைக் கண்டிப்பானவனாக்குகிறது.

                                   --- பேகன்



333. நடந்ததை அமைதியுடன் ஏற்றுக்கொண்டு
    நடக்க வேண்டியதைக் கவனி.

                                   --- கார்லைல்


334. மனம் சாந்தமாகவும் சமாதானமாகவும்
    இருக்கவேண்டுமென்றால் அதை அறிவுள்ள
    உயர்ந்த எண்ணங்களைக் கொண்டு நிரப்பவேண்டும்.

                                  --- ஆவ்பரி

335. நாம் கோபத்தை வென்றுவிட்டால் அடக்கம்
    தானாக வரும்.

                             --- மகாவீர்



336. ஒருவர் நன்கு வாழ்கிறார் என்றால் அவர் இடைவிடாது
    முயற்சி செய்கிறவர் என்பதே உண்மையான பொருள்.

                                         ---- ஜெர்மனி



337. தன்னைப் பற்றியே சிந்திப்பவன் பிறரைக் கவரமுடியாது.

                                          --கதே

338. உழைத்து உண்பது நமது கடமை. உழைக்காமல் இருப்பது
    நமது மடமை.

                                        --- வால்டேர்


339. பேசப்படும் முன் நன்றாக யோசி.

                             --- ஷேக்ஸ்பியர்


340. உன்னைப் பிறர் விரும்பி நட்பு கொள்ள வேண்டுமென்று
    ஆசைப்பட்டால் மக்களால் பாராட்டத் தக்க நற்பண்புகளை
    நீ பெற்றிருக்க வேண்டும்.

                                 --- ஜார்ஜ்எலியட்


341. வாழ முடிவுசெய்யுங்கள். முடியும் என்று ஆக்கப்பூர்வமாக
    சிந்தித்தால் துன்பங்களைத் துன்பப்பட வைத்துத் தொடர்ந்து
    செயலாற்றல் கொண்டவர்களாக வாழலாம்.

                                      --- இங்கர்சால்


342. மனம் தளர்வதனால் எதையும் சாதிக்க முடியாது.


343. ஒவ்வொருவரும் தன்நெற்றி வியர்வை சிந்தி
    உழைத்துப் பிழைத்தால் மண்ணுலகம்
    விண்ணுலகமாகிவிடும்.

                         --- மகாத்மா காந்தி


344. எப்பொழுதும் உழைத்துக்கொண்டே இரு. உழைப்பு
    வீண் போகாது.உழைப்பிலே சுகமிருக்கிறது. வறுமை,
    நோய் போன்ற குட்டிப் பேய்களெல்லாம் உழைப்பைக்
    கண்டவுடன் ஓடிப்போய்விடும்.
    உழைப்பே இன்பம் தரும்.

                                  --- பஸ்கால்  


345. இன்பத்தில் உண்டாகும் மறதி. துன்பத்தில் உண்டாகும் உறுதி.



346. வானத்து நட்சத்திரங்கள் பாடல்களாக விளங்குதல் போல
     பெண்கள் உலகின் பாடல்களாக விளங்குகின்றனர்.

                                           --- ஹார்கி ரோவ்


347. பிறரை நம்பி வாழ்பவனிடம் வறுமை இருந்து
    கொண்டே இருக்கும்.

                         --- வில்லியம் டெம்பிள்
     
348. உள்ளதைச் சொன்னால் நான் பொல்லாதவன்.
    சொல்லாமல் இருந்தால் நான் அறிவில்லாதவன்.


349. எந்த அளவுக்கு ஒருவர் தம் அறிவைத் தொழிற் கல்வியோடு
     சேர்த்துப் பயன்படுத்துகிறாரோ, அந்த அளவிற்கு முன்னேறுவார்.

                                 --- இங்கர்சால்

350. தன்னம்பிக்கை முன் எந்த ஆயுதமும் நிற்காது.