Translate

Monday, August 12, 2013

பொன்மொழிகள்


பொன்மொழிகள்


201. புகழ் என்பது நம் செயல்களின் எதிரொளி.

                                 --- புல்லர்


202. ஒரு மனிதனின் இயல்பை அறியவேண்டுமானால்
    அவனிடம் அதிகாரத்தைக் கொடு.

203. எல்லாம் தெரிந்தவனும் உலகில் இல்லை.
    எதுவுமே தெரியாதவர்களும் உலகில் இல்லை.

                                    --- வாரியார்



204. எங்கு அன்பு இருக்கிறதோ அங்கே வாழ்வு இருக்கிறது.

                                    --- காந்திஜி


205. அன்பு  அருளைத் தரும்; ஆற்றல் பொருளைத்தரும்.
    அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன்  இருக்கிறார்.

                                   --- காந்திஜி


206. சிக்கல் எது என்று அறிந்தாலே பாதி சிக்கல் தீர்ந்துவிடும்.

                                    --- கிப்ளிங்


207. மணிக்கணக்கில் பேசுவதைக் காட்டிலும் குறைந்த
   அளவு காரியங்களைச் செய்வது மேலானது.

                                     ---விவேகானந்தர்


208. பொறுமை உள்ள மனிதன் நிச்சயம் வெற்றி பெறுவான்.

                                       ---  எபிடெட்ஸ்

209. வீண் சொற்கள் விஷயங்களைப் பழுதாக்குகின்றன.

                                         --- ஆண்ட்ரூஸ்


210. பாதையைச் சரியாகப் போட்டால் பயணம் சுலபமாக இருக்கும்.

                                          --- இங்கர்சால்

211. வெல்ல முடியும் என்று நினைப்பவரே வெல்லமுடியும்.

                                          --- வேர்ஜில்

212. சிறுகடமைகளில் கூட கருத்தாக இருப்பதுதான்
    மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு மிகச் சிறந்தவழி.

213. முள்ளில்லாத ரோஜா இல்லை: செயல் இல்லாமல்
     வாழ்க்கை இல்லை.
                               ---இங்கர்சால்


214. பத்து வெற்றிகளைவிட ஒரு சமாதானம் மேலானது.

                                      --- மாண்டேகு


215. கடமை உணர்வே உன் நேர்மையான வாழ்க்கைக்கு ஆதாரம்.

                                     --- ஹென்றி


216. சிந்தனை செய்வது வளர்ச்சியைத்தரும்; கவலைப்படுவது
    அழிவைத்தரும்.

                                        ---என்வியெஷல்


217. மனவலிமை மட்டும் இருந்தால் போதாது;
    அதை நல்லவிதமாகப் பயன்படுத்தவும் வேண்டும்.

                                      ---டெங்கர்டெஸ்

218. கேட்டது கிடைக்கவில்லையே என்று கவலைப்படாதீர்கள்;
    கிடைப்பதை ஏற்றுக்கொள்ளுங்கள்.

                                     --- டிபோ


219. முறிந்துபோவதைவிட வளைந்துபோவது கெட்டிக்காரத்தனம்.

                                        ---  சாணக்கியன்

220. உழைத்து உண்பது நமது கடமை;
    உழைக்காமல் இருப்பது நமது மடமை.

                                     --- வால்டேர்


221. பிறரை மாற்ற வேண்டும் என்று புத்திசொல்கின்றனர்.
    ஆனால் தன்னை மாற்றிக்கொள்ள யாருமே நினைப்பதில்லை.

                                   --- டால்ஸ்டாய்



222. மனத்திருப்தி நமக்கு இயற்கையாகக் கிடைத்த செல்வம்;
    ஆடம்பரம் நாம் செயற்கையாக உருவாக்கிக்கொண்ட பஞ்சம்.

                                   --- சாக்ரடீஸ்


223. நல்ல நூல்களைப் படிப்பது தலைசிறந்த மனிதருடன்
    உரையாடுவதைப் போன்றது.

                                     --- ரெனதெகார்த்

224. தவறை ஒப்புக்கொள்ளும் தைரியமும், அதைத்
    திருத்திக்கொள்வதற்கான பலமும்தான் வெற்றிக்கான
    வழிகள்.

                                    --- லெனின்

225. செயல் இல்லாத சிந்தனை அழிவைத் தரும்.
    சிந்திக்காது புரிகிற செயல் அர்த்தமற்றதாகப்
    போகும்.


226. நம் கருத்து சரி என்று தெரிந்திருந்தும், அது சரியோ, தப்போ
    என்று அச்சப்படுவது பெரும் பலவீனம்.

                                       --- ஹால்டேன்  


227. பேச இருப்பதை எல்லாம் நன்றாக யோசி.
    யோசிப்பதை எல்லாம் பேசிவிடாதே.

                                      --- டெலானி



228. எது நன்மை என்பது அதை இழந்தபிந்தான் தெரியும்.

                                   --- இங்கர்சால்


229. தீமைகள் உங்களை அணுகாதிருக்க உங்களது எண்ணங்களில்
    தீமைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.

                                      --- சாக்ரடீஸ்


230. தன்னைத்தான் உயர்த்துகின்றவன் எவனும் தாழ்த்தப்படுவான்.
    தன்னைத்தான் தாழ்த்துகின்றவன் உயர்த்தப்படுவான்.

                                   லூக்கா 14:7-11


231. சுறுசுறுப்பாய் உள்ள மனிதன் எப்போதும்
    மகிழ்ச்சியோடு இருப்பான்.

                                  --- ஹென்றி ஃபோர்டு



232. நெருப்பு தங்கத்தைப் புடமிடுகிறது. துன்பம் மனிதனைப்
     புடமிடுகிறது.

                                       --- செனேகா


233. அதிக அவசரம் அதிக அழிவை உண்டாக்கும்.

                                        --- சாணக்கியன்


234. உலகத்தில் சோதனைக்கு உட்படாமலும் அதனிடம்
    பாடம் படிக்காமலும் ஒருவன் நிறைவுற்ற மனிதனாக
    விளங்கமுடியாது! அனுபவம் ஊக்கமாக உழைப்பதிலிருந்து
    கிடைக்கிறது; காலத்தின் வேகம் அதைச் செம்மைப்படுத்துகிறது.

                                        --- ஷேக்ஸ்பியர்


235. நம் எண்ணங்களைப் போல வலிமை மிகுந்தது எதுவுமில்லை.

                                     --- நைட்டிங்கேல்

பொன்மொழிகள்

236. இலட்சியத்தில் கவனம் செலுத்தி அதை அடைவதற்கு
    முயல்கிறவன் தன்னை அறியாமலேயே மேதையாக
    உருவாகிறான்.

                                     --- நெப்போலியன் ஹில்  

237. சதுரங்க விளையாட்டைப்போல வாழ்விலும் முன்யோசனை
    வெற்றிபெறுகிறது.

                                        ---  பாக்ஸ்டன்


238. பெருமையோ, இகழ்ச்சியோ தானே வருவதில்லை.
     உங்கள் கடமையை நன்றாகச் செய்யுங்கள்;
     எல்லாமே அதில்தான் அடங்குகின்றன.

                                          --- கீதாஉபதேசம்

239. நமக்கு எதையெல்லாம் பிறர் செய்யக்கூடாது என்று
    நினைக்கிறோமோ அதையெல்லாம் நாம் பிறருக்குச்
    செய்யக்கூடாது.

                                   --- கன்பூஷியஸ்

240. யாருமே உதவாக்கரை இல்லை- அவர்கள் நேரத்தை
    வீணாக்காமல் இருக்கும் வரை.

                                   --- மார்த்தா எச்

241. விழிப்பதற்கே உறக்கம்; வெல்வதற்கே தோல்வி;
    எழுவதற்கே வீழ்ச்சி.

242. நமது வாழ்க்கை இன்பமயமாக அமைவதற்கு
    இருகாரணங்கள் உண்டு. அவற்றில் ஒன்று
    நம்மை நாம் சரிவரப் புரிந்துகொள்வது.

                                      ---ஜி.டி. போவாஸ்


243. இவ்வுலகில் கடமையை விட கவலையே பலரைக்
    கொன்று விடுகிறது. ஏனெனில் அநேகர் கடமையைச்
    செய்வதை விட்டுவிட்டுக் கவலைப்பட்டுக் கொண்டேயிருக்கின்றனர்.

                                      --- இராபர்ட்


244. பகைவனின் புன்சிரிப்பைவிட நண்பனின் கோபம் மேலானது.

                                      ---ஜேம்ஹோபெல்

245. மனம் சாந்தமாகவும் சமாதானமாகவும் இருக்கவேண்டுமென்றால்
    அதை அறிவுள்ள உயர்ந்த எண்ணங்களைக் கொண்டு
    நிரப்பவேண்டும்.

                                       --- ஆவ்பரி

247. பிறரது அன்புக்குப் பாத்திரமாவதைவிட பிறரது
    நம்பிக்கைக்குப் பாத்திரமாவது பன்மடங்கு மேல்.

                                     --- டொனால்டு



248. புகழுக்காக நேர்மையை மறக்காதே.

                              --- சாணக்கியன்


249. கடமை உணர்வே உன் நேர்மையான வாழ்க்கைக்கு ஆதாரம்.

                                         ---ஹென்றி


250. மனவலிமை மட்டும் இருந்தால் போதாது; அதை நல்ல விதமாகப்
    பயன்படுத்தவும் வேண்டும்.

                                          --- டெங்கர்டெஸ்

Saturday, August 3, 2013

திருக்குறள்


திருக்குறள் 
 (see below in English)
 1.அறத்துப்பால்
25.அருளுடைமை

அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள.                                  241

எல்லாச் செல்வங்களிலும் சிறந்தது அருட்செல்வம்.
பொருள் செல்வம் இழிந்த குணமுடையவர்களிடமும்
இருக்கிறது.

kural-241

Wealth 'mid wealth is wealth 'kindliness';
Wealth of goods the  vilest too possess.

The wealth of kindness is wealth of wealth,
in as much as  the wealth of property  is possessed
by the basest of men.

நல்லாற்றான் நாடி அருளாள்க பல்லாற்றால்
தேரினும் அஃதே துணை.                        242

நல்ல வழிகளை ஆராய்ந்து கருணை உடையவர்களாய்
இருக்கவேண்டும். பலவழிகளிலும் ஆராய்ந்து பார்த்தாலும்
கருணையே வாழ்க்கைக்கு உற்ற துணையாக இருக்கிறது.

kural-242

The law of 'grace'fulfil, by methods good due trial made,
Though many systems you explore, this is your only aid.

(Stand) in the good path, consider, and be kind.Even  considering
according to the conflicting tenets of different sects, kindness
will be your best aid, (in the acquisition of heavenly bliss.)

அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல்.                                         243

அறியாமை என்கிற இருட்டான துன்ப உலக வாழ்க்கை
அருள் நிறைந்த மனமுடையவர்களுக்கு இல்லை.
kural-243

They in whose breast a 'gracious kindliness' resides,
See not the gruesome world of darkness drear abides.

They will never enter the world of darkness and wretchedness
whose minds are the abode of kindness.
 
மன்னுயிர் ஓம்பி அருள்வாற்கு இல்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை.                    244

உலகில் உள்ள உயிர்களிடம் இரக்கமும்
அன்பும் கொண்டு காப்பாற்றுபவர்களுக்கு
தன் உயிர் நடுங்கும்படியான தீவினைகள் தோன்றாது.

kural-244

Who for undying souls of men provides with gracious zeal,
In his own soul the dreaded guilt of sin shall never feel.

(The wise) say that the  evils, which his soul would dread,
will never come  upon the man who exercises kindness and
protects the life (of other creatures)

அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வாரிவழங்கும்
மல்லல்மா ஞாலம் கரி.                              245

கருணை மனம் கொண்டவர்களுக்குத் துன்பம் வராது.
காற்று இயங்குகின்ற வளமான இப்பெரிய உலகத்தில்
வாழ்பவர்களே இதற்கு அத்தாட்சியாகும்.

kural-245

The teeming earth's vast realm, round which the wild winds blow.
Is witness, men of 'grace' no woeful want shall know.

This great rich earth over which the wind blows, is a witness that
sorrow never comes upon the kind -hearted.



அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு.                                 247

பொருளில்லாதவர்க்கு இவ்வுலக சுகங்கள் கிட்டாததைப்
போல இரக்கமும், அன்பும் கொண்டு நடக்காதவர்க்கு
மறு உலக இன்பங்கள்கிடைக்காது.

kural-247

As to improverished men this present world is not;
The 'graceless' in you world have neither part nor lot.

As this world is not for those who are without wealth ,
so that world is not for those who are without kindness.


பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்
அற்றார்மற் றாதல் அரிது.                              248

பொருள் இல்லாதவருக்கு ஒரு காலத்தில் செல்வம்
கிடைக்கும். மனத்தில் அன்பும், கருணையும் இல்லாதவர்கள்
ஒரு காலத்திலும் மேன்மையுற முடியாது.
kural-248

Who lose the flower of wealth, when seasons change,again may bloom;
Who lose 'benevolence', lose all;nothing can change their doom.

Those who are without wealth may,at some future time,
become prosperous; those who are destitute of  kindness
are utterly destitute; for them there is no change.


தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறன்.                              249

கருணையில்லாதவன் செய்யும் தான தருமங்களை
ஆராய்ந்து பார்த்தால், அறிவில் தெளிவு ஏற்படாதவன்
உயர்ந்த நூலில் உள்ள உண்மைப் பொருளை அறிந்ததாகக்
கூறுவதற்கொப்பாகும்.
kural-249

When souls unwise true wisdom's mystic vision see,
The  'graceless' man may  work true works of charity.

If you  consider, the virtue of him who is without kindness
is like the perception of the true being by him who is without wisdom.


வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்
மெலியார்மேல் செல்லும் இடத்து.                          250

தன்னை விட எளியவரைத் தான் துன்புறுத்த முற்படும்
போது தன்னை விட வலியவரின் முன் தான் அஞ்சி
நிற்கும் நிலையை எண்ணவேண்டும்.

kural-250

When weaker men you front with threat'ning brow,
Think how you felt in presence of sronger foe.

When a man is about to rush upon  those who  are weaker
than  himself, let him remember how he has stood(trembling)
before those who are sronger than himself.