Translate

Thursday, May 23, 2013

திருக்குறள்



திருக்குறள் 
 (see below in English)
 1.அறத்துப்பால்
20. பயனில சொல்லாமை

பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்.                    191

மற்றவர் வெறுக்கும்படிப் பயனற்ற பேச்சுக்களைப்
பேசினால் எல்லோரும் இகழ்வார்கள்.
kural-191

Words without sense, while chafe the wise,
Who bables, him will all despise.

He who to the disgust of many speaks useless
things will be despised by all.


பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
நட்டார்கண் செய்தலின் தீது.                   192

பலர்முன் பயனற்ற சொற்களைச் சொல்வது,
நண்பர்களிடம் அவர்கள் வெறுக்கும் செயல்களைச்
செவதை விடத் தீயது.
kural-192

Words without sense, where many wise men hear, to pour
Than deeds to friends ungracious done offendeth more.

To speak useless things in the presence of many is a greater
evil than to do unkind things towards friends.


நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கும் உரை.                         193

பயனில்லாதவற்றை வளவளவென்று சொன்னால்
இவன் சிறப்பு இல்லாதவன் என்பதைப் பிறர்
புரிந்துகொண்டு விடுவார்கள்.
kural-193
Diffusive speech of useless words proclaims
A man who  never righteous wisdom gains.

That conversation in which a man utters forth useless
things will say of him "he is without virtue."


நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லா ரகத்து.                194.

பயனும் தராமல் பண்பில்லாமலும் பேசினால்,
அவனுக்கு நன்மை தராததோடு அவமதிப்பும்
ஏற்படும்.

kural-194
 
unmeaning,worthless words,said to the multitude,
To none delight afford,and sever men from  good.

The words devoid of profit or pleasure which a man
speaks will, being inconsistent with virtue, remove
him from goodness.

சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை யுடையார் சொலின்.                      195

நல்ல குணமுடையவர்கள் பயனற்ற பேச்சுக்களைப்
பேசினால் அவருடைய நற்குணத்தையும், மற்ற
மேன்மைகளையும் அது அழித்துவிடும்.
kural-195
Gone are both fame and boasted excellence,
When men of worth speak of words devoid of sense.

If the good speak vain words their eminence and
excellence will leave them.


பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல்
மக்கட் பதடி யெனல்.                             196

பயனற்ற சொற்களைப் பல தடவை பலரிடத்தில்
பேசும் ஒருவனை மனிதரில் பதர் என்றே சொல்வார்கள்.

kural-196

Who makes display of idle words' inanity,
call him not man, -chaff of humanity!

call not him a man who parades forth his
empty words. Call him the chaff of men.

நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று.                        197

சான்றோர் நன்மை தராத சொற்களைச் சொன்னாலும்
பயனற்ற பேச்சுக்களைப் பேசக்கூடாது.

kural-197

Let those who list speak things that no delight afford,
'Tis good for men of worth to speak no idle word.

Let the wise if they will, speak things without excellence;
It will be well for them not to speak useless things.

அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல்.                198

அருமையான பயன்களை ஆராயவல்ல
அறிவுடையோர் பயனற்ற சொற்களைச்
சொல்ல மாட்டார்கள்.

kural-198

The wise  who weigh the woth of every utterence,
speak none but words of deep significance.

The wise who seek after rare pleasures will not speak
words that have not much weight in them.


பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர்.                               199

மயக்கம் நீங்கிய குற்றமற்ற அறிவுடையோர்
மறந்தும் பயனற்ற பேச்சுக்களைப் பேச மாட்டார்கள்.

 kural-199

The men of vision pure, from wildering folly free,
Not e'en in thoughtless hour,speak  words of vanity.

Those wise men   who are without faults and are freed
from ignorance will not even forgetfully speak things
that profit not.


சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.                       200

ஒருவன் பேசுகிறபோது பயனுடைய சொற்களை
மட்டுமே சொல்ல வேண்டும். பயனற்ற பேச்சுக்களை
தவிர்ப்பது நல்லது.

kural-200

If speak you will, speak words that fruit afford,
If speak you  will,speak never fruitless word.

Speak what is useful,and speak not useless words.

Tuesday, May 14, 2013

யோகாசனம்




யோகாசனம்


பிராணாயாமம் : 

                    `பிராணா என்பதற்கு மூச்சு,சுவாசம், வாழ்க்கை, உயிர்சக்தி

                     காற்று, சக்தி அல்லது வலிமை என்று பொருள் உள்ளது

                    ஆயாமா என்றால் நீளம் , விரித்தல், நீட்டுதல் அல்லது

                    அடக்குதல் என்று பொருள்.

                   சுவாசித்தல்:

                  1. உள் சுவாசம். இது பூரகா (நிறைத்துக் கொள்ளுதல்) என 

                      அழைக்கப்படுகிறது.

                  2.. வெளி சுவாசம். இது ரேசகா ( காலி செய்தல் ) என 

                        அழைக்கப்படுகிறது.

                  3. கும்பகம் இது தக்க வைத்துக் கொள்ளுதல் மூச்சை பிடித்துவைத்துக் 

                     கொள்லுதலாகும்) . இது இரண்டுவகைப்படும்.

                     1) உட்சுவாசத்திற்குப் பின் மூச்சு நிறுத்தப்படுகிறது. [அந்தர கும்பகம்]

                     2) வெளிசுவாசத்திற்குப் பின் மூச்சு நிறுத்தப்படுகிறது. [ பாஹ்ய 

                           கும்பகம்]

பிரத்யாகாரம்:

                   ஒரு மனிதனின் பகுத்தறிவு அவனது புலன்கள் இழுத்த 

இழுப்புக்கெல்லாம் அடி பணிந்து கொண்டிருந்தால் அவன் தொலைந்து 

போகிறான். இதற்கு மாறாக, சுவாசத்தில் அளவான கட்டுப்பாடு இருந்தால், 

புலன்கள் ஆசைகளுக்குக் காரனமான வெளிப் பொருள்களை நாடி 

ஓடுவதற்குப் பதிலாக, உட்புறம் திரும்புகின்றன. அவற்றின் 

கொடுங்கோன்மையிலிருந்து அவன் விடுபடுகிறான். இதுவே யோகாவின் 

ஐந்தாவது கட்டம்.

               இந்து தத்துவத்தின்படி, உணர்வு நிலை மூன்று வெவ்வேறு 

தன்மைகளாக வெளிப்படுகிறது.

அவையாவன;

1. சாத்வம் ( ஒளிவிடும்,தூய்மையான அல்லது நல்ல தன்மை). இது தெளிவு 

மற்றும்  மன அமைதியைத் தரும்.

2. ராஜஸம் ( அசைவு மற்றும் செயல்பாட்டின் தன்மை). இது ஒரு மனிதரை 

சக்தி   மிக்கவராகவும், செயலூக்கமுள்ளவராகவும், இறுக்கமும் பிடிவாதமும் 

உள்ளவராகவும்  ஆக்கும்.

3. தாமஸம் என்பது மாயை, மறைபொருள், செயலற்ற தன்மை, அறியாமை 

ஆகியவற்றின்  தன்மையாகும். இத்தன்மை கொண்டவர் செயலற்ற மந்த 

நிலையில் இருப்பார்.

  சாத்வம் என்ற தன்மை தெய்வீகத்திற்கும், தாமஸம் அரக்கத்தனத்திற்கும் 

இட்டுச்  செல்கின்றன. இவ்விரண்டிற்கும் இடைப்பட்ட தன்மை ராஜஸம் 

ஆகும்.

ஒரு தனி மனிதனால் கடைபிடிக்கப்படும் நம்பிக்கை, உண்ணப்படும் உணவு,

செய்யப்படும் தியாகங்கள், கடைபிடிக்கப்படும் கடுமையான விரதங்கள்,

கொடுக்கப்படும் பரிசுகள் இவை எல்லாமே அவரிடம் மேலோங்கியுள்ள

குணத்தைப் பொறுத்து மாறுபடுகின்றன.


தாரணம் :

           உடல் ஆசனங்களால் பக்குவப்படுத்தப்பட்டு, 

           பிராணாயாமத்தால் சுத்தப்படுத்தப்பட்டு,

          மற்றும் புலன்கள் பிரத்தியாகாரத்தால் கட்டுக்குள்

          கொண்டுவரப்பட்ட பின்னர் தாரணம் என்ற ஆறாவது

          கட்டத்தை அடைகிறான் ஒரு பயிற்சியாளன்.

இக்கட்டத்தில்,அவன்தான் முழுமையாக ஆழ்ந்துள்ள ஒரு தனிப்புள்ளி

அல்லது பணியில் முற்றிலும் ஒருமுகப்படுத்தப்பட்டு இருக்கிறான்.இதை

அடைய மனம் அமைதிப்படுத்தப்படவேண்டும்.

மனம் என்பது வெளிஉலகிலிருந்து வருகின்ற கருத்துப்பதிவுகளையும்,

தனக்குள்ளே உள்ள கருத்துப்பதிவுகளையும் ஒழுங்குபடுத்தி, மதிப்பீடு

செய்து ஒருங்கமைக்கும் ஒருகருவியாகும்.

மனம் எண்ணங்களின் உருவாக்கம் ஆகும். எண்ணங்கள் நுண்மையாகவும்

மாறிக்கொண்டே இருப்பனவையாகவும் இருப்பதால்  இவற்றைக் 

கட்டுப்படுத்துவது கஷ்டம்.


தியானம்;


எண்ணெய் ஆனது ஒரு பாத்திரத்திலிருந்து மற்றொரு பாத்திரதிற்கு

ஊற்றப்படும் பொழுது அதன் தொடர்ந்த நிலையான வீழ்ச்சியைக்

காணலாம். 

ஒருமுகப்படுத்துதலின் வீழ்ச்சி குறுக்கீடு இன்றித் தொடர்ந்து செல்லும்போது

ஏற்படும் நிலைதான் தியானம்.

ஒழுங்கான இடைவெளியற்ற மின்சாரம் பாயும் பொழுது மின்விளக்கு 

சுடர்விட்டு ஒளிவிடுவதுபோல யோகியின் மனம் தியானத்தால் ஒளிவிடும்
.
அவனது உடல்,சுவாசம் ,புலன்கள், மனம்,பகுத்தறிவு மற்றும் அகங்காரம்

எல்லாமே பரமாத்மாவின் பால் ஒருங்கிணைந்து,அசைக்க முடியாத ஒரு

உணர்வு நிலையில் நிலைத்திருக்கிறான். ஒரு மின்னல் கீற்றைப் போல

பூமியையும், வானத்தையும் தாண்டி அப்பால் ஒளிவிடுகிற ஒரு வெளிச்சத்தை

யோகி காண்கிறான்.

யோகாவின் பாதையில் முன்னேற்றத்திற்கான அறிகுறிகள் ஆரோக்கியம்,

உடலில் ஒரு லேசான தன்மை, திடம், முகத்தில் தெளிவு, இனிய குரல்,

உடலில் நறுமணம் மற்றும் விழைவிலிருந்து விடுதலை ஆகியன ஆகும்.

அவன் தன் செயல்பாடுகள் அனைத்தையும் இறைவனுக்கு அர்ப்பணம்

செய்து அவனிடம் அடைக்கலம் புகுகின்றான்.


சமாதி:


  சமாதி என்பது பயிற்சியாளனின் தேடுதலின் முடிவு ஆகும். தனது

தியானத்தின் உச்சக்கட்டத்தில் அவன் சமாதி நிலைக்குள் புகுந்து

செல்லுகிறான். 

இதில்,அவன் உறக்கத்தில் இருப்பது போல,அவனது

உடலும்,புலன்களும் ஓய்வாக இருக்கின்றன.

அவன் விழித்திருப்பது போல அவனது மனமும் திறன்களும்

விழிப்புடன் இருக்கின்றன.

சமாதி நிலையில் உள்ள ஒரு நபர் முழுவதும் உணர்வு நிலையிலும்,

விழிப்புடனும் இருக்கிறார்.

                                                                                                (வளரும்)

சந்தானம்.

Sunday, May 12, 2013

திருக்குறள்



 திருக்குறள் 

 (see below in English)
 1.அறத்துப்பால்
17. அழுக்காறாமை


ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு.                              161

உள்ளத்தில் பொறாமை இல்லாமல் வாழ்வது
ஒழுக்கத்தின் ஒரு பகுதியாகும்.

kural-161

As 'strict decorum's' laws, that all men bind,
Let each regard unenvying grace of mind.

Let a man esteem that disposition which is
free from envy in the same manner as propriety
of conduct.

விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின்.                          162

எவரிடத்திலும் பொறாமை கொள்ளாதிருப்பது ஒருவர்
பெற்ற செல்வங்களிலெல்லாம் மேலான செல்வமாகும்.

kural-162

If man can learn to envy none on earth,
'Tis richest gift,beyond compare its worth.

Amongst all attainable excellences there is
None equal to that of being free from envy
towards others.


அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணாது அழுக்கறுப் பான்.                                163

மற்றவருடைய முன்னேற்றத்தைக் கண்டு பொறாமைப்படுகிறவன்
தனக்கு முன்னேற்றத்தை விரும்பாதவனாகிறான்.

kural-163

Nor wealth nor virtue does that man desire 'tis plain,
Whom others' wealth delights not,feeling envious pain.

Of him who instead of rejoicing in the wealth of others,
envies it, it will be said " he neither desires virtue not
wealth "

அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழ்க்காற்றின்
ஏதம் படுபாக்கு அறிந்து.                              164

தவறான செய்கைகளால் குற்றம் ஏற்படும் என்பதை
உணர்ந்து சான்றோர் தருமமற்ற செயலைப் பொறாமை
கொண்டு செய்யமாட்டார்.

kural-164

The wise through envy break not virtu's laws,
Knowing ill-deeds of foul disgrace the cause.

(The wise) knowing the misery that comes from
transgression will not through envy commit
unrighteous deeds.


அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்கியும் கேடீன் பது.                         165

பொறமைக் குணம் உடையவர்க்கு அதுவே எதிரி.
பகைவர் தீங்கு செய்ய மறந்தாலும், பொறாமை
தவறாமல் கேடு விளைவிக்கும்.

kural-165

Envy they have within!  Enough to seat their fate!
Though foemen fail, envy can ruin consumte.

To those who cherish envy that is enough. Though
free from enemies that(envy) will bring destruction.


கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்.                     166

மற்றவருக்குத் தானம் செய்யும்பொருளைக் கண்டு
பொறாமைப்படுகின்ற உறவினர், உணவுக்கும்,
உடைக்கும் கூட தரித்திரப்படுவர்.

kural-166

Who scans good gifts to others given with envious eye,
His kin, with none to clothe or feed them, surely die.

He who is envious at a gift ( made to another) will
with his relations utterly perish destitute of food and
rainment.

அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்.                               167

பொறாமைக் குணமுடையவனைத் திருமகள்
ஆத்திரம் கொண்டு தன் தமக்கையான
மூதேவியிடம் ' இவனோடு போய்ச் சேர்ந்து கொள்'
எனச் சொல்லிவிடுவாள்.


kural-167

From envious man good fortune's goddess turnes away,
Grudging him good, and points him out misfortune's prey.

Lakshmi envying ( the prosperity) of the envious man will
depart and introduce him to her sister.


அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்துவிடும்.                            168

பொறாமை எனப்படும் பாவி ஒருவனுடைய
செல்வத்தை அழித்து அவனைத் தீயவழிகளில்
இறக்கிவிடும்.

kural-168
Envy,embodied ill, incomparable  bane,
Good fortune slays, and soul consignes to fiery pain.

Envy will destroy (a man's) wealth (in his world) and
drive him into the pit of fire ( in the world to come)

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமுஞ் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்.                         169

பொறாமை கொண்டவர் முன்னேற முடியாது.
பொறாமை இல்லாதவர் தரித்திரப் படமாட்டார்.
அப்படி இருந்தால் அது ஆராய்ச்சிக்குட்பட்டது.


kural-169
To men of envious heat, when comes increase of joy,
or loss to blameless men , the 'why' will thoughtful hearts employ.

The wealth of a man of envious mind and the poverty
of the righteous will be pondered.

அழுக்கற்று அகன்றாரும் இல்லைஅஃது இல்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்.                    170

பொறாமை கொண்டு பெருமை பெற்றவரும் இல்லை.
அது இல்லாதவர்கள் சிறுமை பெற்றதுமில்லை.

kural-170
No envious men to large and full felicity attain;
No  men from envy free have failed a sure increase to gain.

Never have the envious become great;
Never have those who are free from envy
been without greatness.

திருக்குறள்
 (see below in English)
 1.அறத்துப்பால்
18. வெஃகாமை


நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்.                             171

மனசாட்சிக்கு விரோதமாக மற்றவரிடமுள்ள
நல்ல பொருளை விரும்பினால் அது அவன்
குடியைக் கெடுத்து பல துன்பங்களையும் தரும்.


kural-171
With soul unjust to covet othyers' well-earned store,
Brings ruin to the home, to evil opes the door.

If a man departing from equity covet the property
(of others), at that very time will his family  be destroyed
and  guilt be incurred.



படுபயன் வெஃகிப் பழிபடுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர்.                     172

நடுநிலைமை தவற அஞ்சுகின்றவர் தனக்குக்
கிடைக்கும் பலனுக்காக பழிவரும் செயல்களைச்
செய்யமாட்டார்.


kural-172
Though lust of gain, no deeds that retribution bring,
Do they, who shink  with shame from every unjust thing.

Those who  blush at the want of equity will not commit
disgraceful acts through desire of the  pofit that may be
gained.

சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர்.                      173

தருமவழி நடந்து அதனால் கிடைக்கும் இன்பத்தை
விரும்புகின்றவர், நிலையில்லாத சிற்றின்பத்தை
விரும்பி அதருமச் செயல்களைஸ் செய்யமாட்டார்.

kural-173

No deeds of ill , misled by base desire,
Do they, whose souls to other joys  aspire.

Those who desire the higher pleasures(heaven)
will not act unjustly through desire of the
Trifling joy.(in this life)
இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர்.                          174

ஐம்புலன்களையும் வென்ற குற்றமற்ற
அறிவுடையோர் தரித்திரப்பட்டாலும் பிறர்
பொருளுக்கு ஆசைப்படமாட்டார்கள்.

kural-174

Men who have conquered  sense, with sight from sordid vision freed,
Desire not other's goods,e'en in  the hour of  sorest need.

The wise who have conquered their senses are free from crime,
will not covet  (the things of others), with the thought
"we are destitute'.

அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெரிய செயின்.                                   175

பொருளுக்காக அறிவில்லாத செயல்களைச் செய்தால்,
நுணுகி, ஆராய்ந்து பெற்ற விரிந்த அறிவுக்கு ஏது ம்திப்பு?

kural-175

What gain , though lore refined of amplest reach he learn,
His acts towards all mankind if covetous desire to folly turn?

What is the advantage of extensive and acurate knowledge
if a man through covetousness act senselessly towards all?
அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக்கெடும்.                              176

இறைவன் அருளை விரும்பி தரும நெறியில்
வாழ்பவன் பிறர் பொருளுக்கு ஆசைப்பட்டு பொல்லாத
குற்றங்களை எண்ணினால் கேடு வரும்.

kural-176

Though, grace desiring, he invirtue's way stand strong,
He's lost who wealth desires, and ponders deeds of wrong.

If he, who through desire ofthe virtue of kindness abides
in the domestic state i.e  , the path in which it may be obtained,
covet ( the property of others)  and think of evil methods
(to obtain it), he will perish.


வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்
மாண்டற் கரிதாம் பயன்.                             177

பிறர் பொருளை மோசம் செய்து உடைமையாக்கிக்
கொள்வதால் ஏற்படும் முன்னேற்றத்தின் பின் விளைவுகள்
பயங்கரமாயிருக்கும். அதனால் மற்றவர் பொருளுக்கு
ஆசைப்படக்கூடாது.

kural-177
Seek not increase by greed of gain acquired;
That fruit matured yields never good desired.

Desire not the gain of covetousness. In the
 Enjoyment of its fruits there is no glory.
அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்.                        178

செல்வம் சுருங்காமலிருக்க வேண்டுமானால்,
மற்றவர் விரும்பிப் போற்றுகின்ற அவரது பொருளை
தான் விரும்பக்கூடாது.
kural-178
What saves prosperity from swift decline?
Absence of lust to make another's cherished riches thine!

If it is weighed, " what is the indestructibility of wealth,"
it is freedom from covetousness.


அறனறிந்து வெஃகா அறியுடையார்ச் சேரும்
திறன்அறிந் தாங்கே திரு.                             179

தருமவழி நடந்து மற்றவர் பொருளுக்கு ஆசைப்படாத
அறிவுடையோரைத் திருமகள் தான் சென்று சேர வழி
அமைத்துக்கொண்டு தக்க காலத்தில் சேர்வாள்.

kural-179
Good fortune draws anigh in helpful time of need,
To him who, schooled in virtue, guards his soul from greed.

Lakshmi, knowing the manner(in which she may approach)
will immediately come to those wise men who, knowing
that is virtue, covet  not the property of  others.

இறல்ஈனும் எண்ணாது வெஃகின் விறல் ஈனும்
வேண்டாமை என்னுஞ் செருக்கு.                  180

பின்னல் நடப்பதை எண்ணாமல் மற்றவர்
பொருளை விரும்புவது அழிவைத்தரும்.
மற்றவர்பொருளை விரும்பாதிருந்தால்
அது வாழ்வில் வெற்றியைத் தரும்.

kural-180

From thoughtless lust of other's goods springs fatal ill,
Greatness of soul  that covets not shall triumph still.

To covet ( the wealth of another) regardless of consequences
will bring destruction. That greatness(of mind) which covets
not will give victory.

Tuesday, May 7, 2013

யோகாசனம்


யோகாசனம்




பி.கே.எஸ் ஐய்யங்கார் அவர்கள் அருளிய யோகாசனம்
(செய்முறை விளக்கம்) ஓர் உன்னத நூலாகும். அதிலிருந்து
திரட்டுக்கள் இங்கே அளிக்கப்படுகிறது.

யமம்: ( நடைமுறை ஒழுக்கங்கள்)

அவையாவன: அஹிம்சை,
               சத்தியம்,
               அஸ்தேயம் (திருடாமை)
               பிரம்மச்சரியம் ( தன்னடக்கம்)
                      மற்றும்
               அபரிக்ரஹம் ( விழையாமை)    

நியமம்: இவை தனிநபரின் ஒழுக்கத்திற்கு ஏற்ற விதிமுறைகளாகும்.

பதஞ்சலியால் வரிசைப்படுத்தப்பட்ட ஐந்து நியமங்கள்:

                  ஸௌச்சம் (தூய்மை)
                சந்தோஷம் (திருப்தி)
                தபஸ் ( கண்டிப்பான எளிமை)
                ஸ்வாத்யாயம் (தன்னைப் பற்றிய ஆய்வு)
                ஈஸ்வரப்ரணிதானம் ( இறைவனிடம் பக்தி)
                                       
                                        (வளரும்)

ஆசனம் :

            யோகாவின் மூன்றாவது கட்டம் ஆசனம் அல்லது தோற்றம் ஆகும்.
            ஆசனங்கள் ஆரோக்கியம் மற்றும் கை, கால்களுக்கு லகுவான
            அசைவுகளைத் தருகிறது. மனதில் சமநிலையை உருவாக்கி
            மனச் சலனங்களைத் தவிர்க்கிறது.

                                                   ( வளரும்)

சந்தானம்.

யோகாசனம்


யோகாசனம்


யோகா என்பது செயல்முறையுடன் கூடிய அறிவியலாகும் .
மனிதனின் மனம்,ஆன்மா மற்றும் ஒழுக்கம் இவற்றுடன்
தொடர்புகொண்டதாகும்.

யுஜ் என்ற வடமொழி சொல்லிலிருந்து தொன்றியதே "யோகா"
என்ற சொல்லாகும். யோகாவானது அறிவு,மனம்,உணர்ச்சிகள்,
சித்தம் இவற்றை ஒழுங்குபடுத்தும்.

பதஞ்சலி முனிவர் எழுதிய யோக சூத்திரம், 185 சூத்திரங்களின்
வாயிலாக இதை விளக்குகிறது. பதஞ்சலி முனிவர் இதை எட்டு(8)
கட்டங்களாக எடுத்துரைக்கிறார்.

யோகாவின் எட்டு கட்டங்கள்:

1. யமம் (பிரபஞ்ச ஒழுக்கக் கட்டங்கள்)
2. நியமம் ( ஒழுக்கத்தின் வாயிலாக தூய்மைஅடைதல்)
3. ஆசனம் ( உடல் தோற்றம்)
4. பிராணாயாமம் (சுவாசித்தலை கட்டுப்படுத்துதல்)
5. பிரத்யாகாரம்  (புலன்கள் மற்றும் வெளிப் பொருள்களால்
   மனம் ஆதிக்கப்படுவதிலிருந்து விடுதலை பெறுதல்)
6. தாரணம் ( ஒருமுகப்படுத்துதல்)
7. தியானம்
8. சமாதி ( தூய்மையான தியானத்தினால் உருவாகும்
   உயர்ந்த உணர்வு நிலை)

                                   (வளரும்)