Translate

Wednesday, October 31, 2012

அருட்பெருஞ்ஜோதியட்டகம்




திரு அருட்பா திரட்டு

அருட்பெருஞ்ஜோதியட்டகம்


நசைத்தமே னிலையீ தெனவுணர்ந் தாங்கே

     நண்ணியுங்கண்ணுறா தந்தோ

திசைத்திமா மறைக ளுயங்கின மயங்கிதி

      திரும்பின வெனிலத னியலை

இசைத்தலெங் ஙனமோ வையகோ சிறிதும்

     இசைத்திடு வேமென நாவை

அசைத்திடற் கரிதென் றுணர்ந்துளோர் வழுத்தும்

      அருட்பெருஞ் ஜோதியென் னரசே                 4








Google affiliate Ads;

source book.com link:


Up to 60% off Parenting & Children's Books



77 kids.com link


Primary




littlepim.com

585019_Little Pim 468x60

My blogs:

http://saivasiddhantam.blogspot.in/

http://sansalternatetherapy.blogspot.in/

http://behaviourtherapy.blogspot.in/







Tuesday, October 30, 2012

அருட்பெருஞ்ஜோதியட்டகம்




திரு அருட்பா திரட்டு

அருட்பெருஞ்ஜோதியட்டகம்



கண்முதற் பொறியால் மனமுதற் கரணக்

     கருவினாற் பகுதியின் கருவால்

எண்முதற் புருட தரத்தினாற் பரத்தால்

     இசைக்குமோர் பரம்பர வுணர்வால்

விண்முதற் பரையால் பராபர வறிவால்

      விளங்குவ தரிதென வுணர்ந்தோர்

அண்முதற் றடித்துப் படித்திட வோங்கும்

அருட்பெருஞ் ஜோதியென் னரசே              3


              (தொடரும்)


Google affiliate Ads;

source book.com link:


Up to 60% off Parenting & Children's Books



77 kids.com link


Primary







My blogs:

http://saivasiddhantam.blogspot.in/

http://sansalternatetherapy.blogspot.in/

http://behaviourtherapy.blogspot.in/





Monday, October 29, 2012

அருட்பெருஞ்ஜோதியட்டகம்





திரு அருட்பா திரட்டு

அருட்பெருஞ்ஜோதியட்டகம்


குலவுபே ரண்டப் பகுதியோ ரனந்த

     கோடிகோடி களுமாங் காங்கே

நிலவிய பிண்டப் பகுதிகள் முழுது

     நிகழ்ந்தபற் பலபொருள் திரளும்

விலகுறா தகத்திமு புறத்துமே விடத்தும்

     மெய்யறி வானந்தம் விளங்க

அலகுறா தொழியா ததுவதில் விளங்கும்

    அருட்பெருஞ் ஜோதியென் னரசே          2.



Google affiliate Ads;

source book.com link:


Up to 60% off Parenting & Children's Books



77 kids.com link


Primary







My blogs:

http://saivasiddhantam.blogspot.in/

http://sansalternatetherapy.blogspot.in/

http://behaviourtherapy.blogspot.in/







Sunday, October 28, 2012

அருட்பெருஞ்ஜோதியட்டகம்




 திரு அருட்பா திரட்டு

அருட்பெருஞ்ஜோதியட்டகம்


அருட்பெரு வெளியி லருட்பெரு வுலகத்

     தருட்பெருந் தலத்துமே னிலையில்

அருட்பெரும் பீடத் தருட்பெரு வடிவில்

     அருட்பெருந் திருவிலே யமர்ந்த

அருட்பெரும் பதியே யருட்பெரு நிதியே

     அருட்பெருஞ் சித்தியென் னமுதே

அருட்பெருங் களிப்பே யருட்பெருஞ் சுகமே

     அருட்பெருஞ் ஜோதியென் னரசே            1

                                                          (தொடரும்)


Google affiliate Ads;

source book.com link:


Up to 60% off Parenting & Children's Books



77 kids.com link


Primary







My blogs:

http://saivasiddhantam.blogspot.in/

http://sansalternatetherapy.blogspot.in/

http://behaviourtherapy.blogspot.in/







Saturday, October 27, 2012

திருக்குறள்





                                                                 திருக்குறள்

                                                               1.அறத்துப்பால்


                                                                 2.வான் சிறப்பு


வான்நின்று உலகம் வழங்கி வருதலால்

தான்அமிழ்தம் என்றுணர் பாற்று.           11


     மழை தவறாமல் பெய்ய உலகம் நிலை பெற்று வாழும்.

     ஆதலால் மழை உலகத்து உயிர்களுக்கு அமிர்தம்

     என்று கூறலாம்.



துப்பார்க்கு துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

துப்பாய தூஉம் மழை.                       12



உண்பவர்களுக்கு பல்வேறு உணவுகளை உண்டாக்கி

தாகம் தணிக்கும் நீருமாகி இருப்பது மழையாகும்.




விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து

உள் நின்று உடற்றும் பசி.                    13


      பருவமழை பெய்யாதிருந்தால் கடலால் சூழப்பட்ட உயிர்கள்

பசியால் வருந்தும். தாவரங்களும் அழிந்துவிடும்.        




ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும்

வாரி வளங்குன்றிக் கால்                             14


       மழை வளம் குறைந்தால் உழவர் வயலை

உழ ஏர் கொண்டு செல்ல மாட்டார்.




கெடுப்பதூஉங் கெட்டார்க்குச் சார்வாய்மற் றா\ங்கே

எடுப்பதூஉம் எல்லாம் மழை.                        15



       பெய்யாமல் நின்று வாழ்வைக் கெடுப்பதும் மழை.

மழை இன்றி வளம் கெட்டு துன்புறுவோர்க்கு துணையாக

பெய்து காப்பதும் மழையாகும்.





விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே

பசும்புல் தலைகாண்பு அரிது.                       16


        வானிலிருந்து மழைத்துளி விழாவிட்டால் பசுமையான

புல்லின் தலையையும் காண்பது அரிது.





நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி

தான்நல்கா தாகி விடின்.                          17


     மேகமானது கடலிலிருந்து நீரை கிரகித்து மறுபடியும்

அந்நீரையே மழையாகத் தருகிறது. அவ்வாறு இல்லாவிடின்

கடலும் வற்றிவிடும்.




சிறப்பொடு பூசனை செல்லாது வானம்

வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.            18.


மழை பொழியாவிடில், இப்பூமியில் வானவர்க்காண

பூஜைகள் நடைபெற இயலாது.





தானம் தவம் இரண்டும் தங்கா வியன்உலகம்

வானம் வழங்கா தெனின்.                        19



        மழை பொழியாவிடின் இந்தப் பரந்த உலகில்

தானம், தவம் என்ற இரண்டு அறங்களும் கிடையாது.





நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்

வான்இன்று அமையாது ஒழுக்கு.                20


     அனைத்து உயிர்களும் தண்ணீர் இல்லாமல்

வாழமுடியாது. தொடர்ந்து மழை இல்லாவிடில்

ஒழுக்கமும் மறைந்து போகும்.


source book.com link:


Up to 60% off Parenting & Children's Books



77 kids.com link


Primary





My blogs:

http://saivasiddhantam.blogspot.in/

http://sansalternatetherapy.blogspot.in/

http://behaviourtherapy.blogspot.in/









Friday, October 26, 2012

திருக்குறள்







                                                            திருக்குறள்


                                                            1.அறத்துப்பால்


                                           
                                                          1. கடவுள் வாழ்த்து


      அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

       பகவன் முதற்றே உலகு.          1


எழுத்துகள் அனைத்தும் "அ" என்ற எழுத்தை முதலாவதாகக் கொண்டு

உள்ளதுபோல் உலகத்து உயிர்கள் எல்லாம் இறைவனை முதலாவதாகக்

கொண்டுள்ளன.



  கற்றதனா லாய பயனெங்கொல் வாலறிவன்

  நற்றாள் தொழாஅர் எனின்.              2


           தூய அறிவினன் ஆகிய இறைவனின் திருப்பாதங்களை

தொழாதவன் எத்தனை கற்றும் பயன் இல்லை.



   மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்

   நிலமிசை நீடுவாழ்வார்.                  3


            அடியவர்களின் மனமென்னும் மலரில் வீற்றிருக்கும் இறைவனின்

திருவடிகளை   இடைவிடாமல் நினைக்கின்றவர்கள் இந்த உலகில் நீண்ட

ஆயுளுடன்வாழ்வார்கள்.



       வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு

       யாண்டும் இடும்பை இல.                              4.


             வேண்டியவர் வேண்டாதவர் என்பதே இல்லாத இறைவனின்
           
    திருவடிகளை எப்போதும் நினைப்பவர்களுக்கு எக்காலத்திலும் துன்பங்கள்

அணுகாது.



         இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்

       பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.                 5


                இறைவனின் புகழை விரும்பி அன்பு செலுத்துபவர்களுக்கு,

       இம்மையிலும் மறுமையிலும் துன்பங்கல் ஏற்படுவதில்லை.  




           பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க

         நெறிநின்றார் நீடுவாழ் வார்.                   6


                  மெய், வாய் , கண், காது, மூக்கு  என்ற ஐம்பொறிகளின் வழியாக

        உண்டாகும் பேராசைகளை நீக்கி இறைவனின் ஒழுக்க நெறிகளை

கடைபிடித்து நிற்பவர்கள் சிறந்த வாழ்க்கை வாழ்வார்.




          தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்

       மனக்கவலை மாற்றல் அரிது.                      7


                கடவுளுக்கு ஈடு கடவுள்தான். அவரது திருவடிகளை பக்தியுடன்

            வணங்குபவர்களைத் தவிர மற்றவர்களுக்கு மனக்கவலையை

             மாற்றுவது கடினம்.


             

            அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்

          பிறவாழி நீத்தல் அரிது.                        8


                     தருமக் கடலாக விளங்கும் இறைவனின் திருவடிகளைப்

               பற்றியவர்களைத் தவிர மற்றவர் பொருள், இன்பம் போன்ற

              கடல்களை  கடத்தல் இயலாது.





                  கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்

               தாளை வணங்காத் தலை.                        9.


                          எட்டு குணன்களை உடைய இறைவனின் பாதங்களை

வணங்காதவரின் தலையானது, தங்களுக்குரிய செயல்களை ஆற்றாத

( கேட்காத செவி, பார்க்காத கண், சாத வாய், நுகராத மூக்கு, இயங்காத தேகம்)

ஐம்புலங்களைப் போலப் பயனற்றதாகும்.





               பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

            இறைவன் அடிசேரா தார்.                10


                    இறைவனின் திருவடிகளை அடைந்தவர்கள் பிறவி என்ற 

பெருங்கடலை கடக்க இயலும். மற்றவர்களால் எளிதில் இயலாது.




source book.com link:


Up to 60% off Parenting & Children's Books



77 kids.com link


Primary







My blogs:

http://saivasiddhantam.blogspot.in/

http://sansalternatetherapy.blogspot.in/

http://behaviourtherapy.blogspot.in/









Wednesday, October 24, 2012

திருவருட்பிரகாச வள்ளலாரின் திருநெறிகள்







திருவருட்பிரகாச வள்ளலாரின் திருநெறிகள்



1. கடவுள் ஒருவரே : அவர் அருட்பெருஞ்ஜோதி

  ஆண்டவர் என்க.

2. எல்லா உயிர்களும் நமக்குச் சகோதரர்களே

  என்று உணர்க.

3. சாதி, சமய, மத, இன வேறுபாடுகளைக்

  காணற்க.

4. சிறு தெய்வ வழிபாட்டினையும்,

 பலியிடுவதையும் விலக்குக.

5. புலால் உண்னற்க; எவ்வுயிரையும் கொலை
 
 செய்யற்க.

6. பசித்தாரது பசியைப் போக்குதலே உண்மை

 வழிபாடாகக் கொள்க.

7. இறந்தவர்களைத் தகனம் செய்யாது புதைத்திடுக.

8. இந்திரிய, கரண, ஜீவ, ஆன்ம, நித்திய, ஜீவகாருண்ய

 ஒழுக்கங்களைக் கடைபிடுத்திடுக.

9. உண்மை அன்பால் கடவுளை வழிபாடு செய்து

 ஒளியை நமக்குள் காண்க.

10. உயிர்க்குலமே கடவுள் விளங்கும் ஆலயமாகக்

 கருதி உயிர்கட்கு இரங்கி இதம்புரிக.



source book.com link:


Up to 60% off Parenting & Children's Books



77 kids.com link


Primary







My blogs:

http://saivasiddhantam.blogspot.in/

http://sansalternatetherapy.blogspot.in/

http://behaviourtherapy.blogspot.in/

 


Tuesday, October 23, 2012

நமச்சிவாய சங்கீர்த்தன லகரி








  நமச்சிவாய சங்கீர்த்தன லகரி

(ராமலிங்கம் சுவாமிகள் அருளியது)


பெற்ற தாய்தனை மகமறந்தாலும்

பிள்ளை யைப்பெறும் தாய்மறந் தாலும்

உற்ற தேகத்தை உயிர்மறந் தாலும்

கற்ற நெஞ்சம் கலைமறந் தாலும்

கண்கள் நின்றிமைப் பதுமறந் தாலும்

நற்றவத்தவர் உள்ளிருந் தோங்கும்

நமச்சிவாயத்தை நான்மற வேனே.




source book.com link:


Up to 60% off Parenting & Children's Books



77 kids.com link


Primary







Monday, October 22, 2012

திருநாவுக்கரசர் அருளிய போற்றித்தாண்டகம்




திருநாவுக்கரசர் அருளிய போற்றித்தாண்டகம்


உண்ணாது உறங்காது இருந்தாய் போற்றி

ஓதாதே வேதம் உணர்ந்தாய் போற்றி

எண்ணா இலங்கைக்கோன் தன்னைப் போற்றி

இறைவிரலால் வைத்துகந்த ஈசா போற்றி

பண்ணார் இசையின்சொற் கேட்டாய் போற்றி

பண்டேஎன் சிந்தை புகுந்தாய் போற்றி

கண்ணா யுலகுக்கு நின்றாய் போற்றி

கயிலை மலையானே போற்றி போற்றி.

                         ( முற்றும்)






source book.com link:


Up to 60% off Parenting & Children's Books





Sunday, October 21, 2012

திருநாவுக்கரசர் அருளிய போற்றித்தாண்டகம்






திருநாவுக்கரசர் அருளிய போற்றித்தாண்டகம்



நெடிய விசும்பொடு கண்ணே போற்றி

நீள அகலம் உடையாய் போற்றி

அடியும் முடியும் இகலிப் போற்றி

அங்கொன்று அறியாமை நின்றாய் போற்றி

கொடிய வன்கூற்றம் உதைத்தாய் போற்றி

கோயிலா என்சிந்தை கொண்டாய் போற்றி

கடிய உருமொடு மின்னே போற்றி

கயிலை மலையானே போற்றி போற்றி.

                         (தொடரும்)



Saturday, October 20, 2012

திருநாவுக்கரசர் அருளிய போற்றித்தாண்டகம்




திருநாவுக்கரசர் அருளிய போற்றித்தாண்டகம்


மூவாய் பிறவாய் இறவாய் போற்றி

முன்னமே தோன்றி முளைத்தாய் போற்றி

தேவாதி தேவர்தொழுந் தேவே போற்றி

சென்றேறி யெங்கும் பரந்தாய் போற்றி

ஆவா அடியேனுக்கு எல்லாம் போற்றி

அல்லல் நலிய அலைந்தேன் போற்றி

காவாய் கனகத் திரளே போற்றி

கயிலை மலையானே போற்றி போற்றி.

                         (தொடரும்)



Friday, October 19, 2012

திருநாவுக்கரசர் அருளிய போற்றித்தாண்டகம்






திருநாவுக்கரசர் அருளிய போற்றித்தாண்டகம்




இமையாது உயிராது இருந்தாய் போற்றி

என்சிந்தை நீங்கா இறைவா போற்றி

உமைபாகம் ஆகத்து அணைத்தாய் போற்றி

ஊழி யேழான ஒருவா போற்றி

அமையா வரு நஞ்சம் ஆர்த்தாய் போற்றி

ஆதி புராணனாய் நின்றாய் போற்றி

சுமையாகி நின்ற கனலே போற்றி

கயிலை மலையானே போற்றி போற்றி.

                         (தொடரும்)



Thursday, October 18, 2012

திருநாவுக்கரசர் அருளிய போற்றித்தாண்டகம்




திருநாவுக்கரசர் அருளிய போற்றித்தாண்டகம்



பண்ணின் இசையாகி நின்றாய் போற்றி

பாவிப்பார் பாவம் அறுப்பாய் போற்றி

எண்ணும் எழுத்துஞ்சொல் ஆனாய் போற்றி

என்சிந்தை நீங்கா இறைவா போற்றி

விண்ணும் நிலனுந்தீ யானாய் போற்றி

மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி

கண்ணின் மணியாகி நின்றாய் போற்றி

கயிலை மலையானே போற்றி போற்றி.

                         (தொடரும்)





Wednesday, October 17, 2012

திருநாவுக்கரசர் அருளிய போற்றித்தாண்டகம்








திருநாவுக்கரசர் அருளிய போற்றித்தாண்டகம்



சில்லுருவாய்ச் சென்று திரண்டாய் போற்றி

தேவர் அறியாத தேவே போற்றி

புல்லுயிற்க்கும் பூட்சி புணர்த்தாய் போற்றி

போகாதுஎன் சிந்தை புகுந்தாய் போற்றி

பல்லுயிராய்ப் பார்தோறும் நின்றாய் போற்றி

பற்றி யுலகை விடாதாய் போற்றி

கல்லுயிராய் நின்ற கனலே போற்றி

கயிலை மலையானே போற்றி போற்றி.

                         (தொடரும்)





Tuesday, October 16, 2012

திருநாவுக்கரசர் அருளிய போற்றித்தாண்டகம்






திருநாவுக்கரசர் அருளிய போற்றித்தாண்டகம்




ஊராகி நின்ற உலகே போற்றி

ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி

பேராகி எங்கும் பரந்தாய் போற்றி

பெராதுஎன் சிந்தை புகுந்தாய் போற்றி

நீராவியான நிழலே போற்றி

நேர்வார் ஒருவரையும் இல்லாய் போற்றி

காராகி நின்ற முகிலே போற்றி

கயிலை மலையானே போற்றி போற்றி.

                         (தொடரும்)






Monday, October 15, 2012

திருநாவுக்கரசர் அருளிய போற்றித்தாண்டகம்





திருநாவுக்கரசர் அருளிய போற்றித்தாண்டகம்



வானத்தார் போற்றும் மருந்தே போற்றி

வந்தென்றன் சிந்தை புகுந்தாய் போற்றி

ஊனத்தை நீக்கும் உடலே போற்றி

ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி

தேனத்தை வார்த்த தெளிவே போற்றி

தேவர்க்குத் தேவனாய் நின்றாய் போற்றி

கானத்தீ யாடல் உகந்தாய் போற்றி

கயிலை மலையானே போற்றி போற்றி.

                         (தொடரும்)





Sunday, October 14, 2012

திருநாவுக்கரசர் அருளிய போற்றித்தாண்டகம்




திருநாவுக்கரசர் அருளிய போற்றித்தாண்டகம்


மருவார் புரமூன்றும் எய்தாய் போற்றி

மருவியென் சிந்தை புகுந்தாய் போற்றி

உருவாகி யென்னைப் படைத்தாய் போற்றி

உள்ளாவி வாங்கி யொளித்தாய் போற்றி

திருவாகி நின்ற திறமே போற்றி

தேசம் பரவப் படுவாய் போற்றி

கருவாகி யோடும் முகிலே போற்றி

கயிலை மலையானே போற்றி போற்றி.

                         (தொடரும்)




Saturday, October 13, 2012

திருநாவுக்கரசர் அருளிய போற்றித்தாண்டகம்









திருநாவுக்கரசர் அருளிய போற்றித்தாண்டகம்


பிச்சாடல் பேயோடு உகந்தாய் போற்றி

பிறவி அறுக்கும் பிரானே போற்றி

வைச்சாடல் நன்று மகிழ்ந்தாய் போற்றி

மருவியென் சிந்தை புகுந்தாய் போற்றி

பொய்ச்சார் புரமூன்றும் எய்தாய் போற்றி

போகாதென் சிந்தை புகுந்தாய் போற்றி

கச்சாக நாகம் அசைத்தாய் போற்றி

கயிலை மலையானே போற்றி போற்றி.

                         (தொடரும்)


Friday, October 12, 2012

திருநாவுக்கரசர் அருளிய " போற்றித் தாண்டகம்"



திருநாவுக்கரசர் அருளிய " போற்றித் தாண்டகம்"


வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி

மீளாமே ஆளென்னைக் கொண்டாய் போற்றி

ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி

ஓவாத சத்தத்து ஒலியே போற்றி

ஆற்றாகி அங்கே அமர்ந்தாய் போற்றி

ஆறங்கம் நால்வேதம் ஆனாய் போற்றி

காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி

கயிலை மலையானே போற்றி போற்றி

                     (தொடரும்)






Thursday, October 11, 2012

திருநாவுக்கரசர் அருளிய " போற்றித் தாண்டகம்"







திருநாவுக்கரசர் அருளிய " போற்றித் தாண்டகம்"



பிரமன்தன் சிரம் அரிந்த பெரியோய் பொற்றி

பெண்ணுருவோடு ஆணுருவாய் நின்றாய் போற்றி

கரம் நான்கும் முக்கண்ணும் உடையாய் போற்றி

காதலிப்பார்க்காற்ற எளியாய் போற்றி

அருமந்த தேவர்க்கரசே போற்றி

அன்றரக்கண் ஐந்நான்கு தோளுந்தாளும்

சிரம்நெரித்த சேவடியாய் போற்றி போற்றி

திருமூலட்டானனே போற்றி போற்றி

                     (தொடரும்)



Wednesday, October 10, 2012

திருநாவுக்கரசர் அருளிய " போற்றித் தாண்டகம்







திருநாவுக்கரசர் அருளிய " போற்றித் தாண்டகம்"



பூவார்ந்த சென்னிப் புனிதா போற்றி

புத்தேளிர் போற்றும் பொருளே போற்றி

தேவார்ந்த தேவர்க்கும் தேவே போற்றி

திருமாலுக்கு ஆழி அளித்தாய் போற்றி

சாவாமே காத்தென்னை ஆண்டாய் போற்றி

சங்கொத்த நீற்றம் சதுரா போற்றி

சேவார்ந்த வெல்கொடியாய் போற்றி போற்றி

திருமூலட்டானனே போற்றி போற்றி

                     (தொடரும்)











Tuesday, October 9, 2012

திருநாவுக்கரசர் அருளிய " போற்றித் தாண்டகம்"



திருநாவுக்கரசர் அருளிய " போற்றித் தாண்டகம்"




உள்ளமாய் உள்ளத்தே நின்றாய் போற்றி

உகப்பார் மனத்தென்றும் நீங்காய் போற்றி

வள்ளளே போற்றி மணாளா போற்றி

வானவர்கோன் தோள்துணித்த மைந்தா போற்றி

வெள்ளை யேறேறும் விகிர்தா போற்றி

மேலோர்க்கும் மேலோர்க்கும் மேலாய் போற்றி

தெள்ளு நீர்க் கங்கைச் சடையாய் போற்றி

திருமூலட்டானனே போற்றி போற்றி

                     (தொடரும்)








Monday, October 8, 2012

திருநாவுக்கரசர் அருளிய " போற்றித் தாண்டகம்"





திருநாவுக்கரசர் அருளிய " போற்றித் தாண்டகம்"



வம்புலவு கொன்றைச் சடையாய் போற்றி

வான் பிறையும் வாளரவும் வைத்தாய் போற்றி

கொம்பனைய நுண்ணிடையாள் கூறா போற்றி

குரை கழலாற் கூற்றுதைத்த கோவே போற்றி

நம்புமவர்க்கு அருள்பொருளே போற்றி போற்றி

நால் வேதம் ஆறங்கம் ஆனாய் போற்றி

செம்பொன்னே மரகதமே மணியே போற்றி

திருமூலட்டானனே போற்றி போற்றி

                     (தொடரும்)



Sunday, October 7, 2012

திருநாவுக்கரசர் அருளிய " போற்றித் தாண்டகம்"






திருநாவுக்கரசர் அருளிய " போற்றித் தாண்டகம்"


சங்கரனே நின்பாதம் போற்றி போற்றி

சதாசிவனே நின்பாதம் போற்றி போற்றி

பொங்கரவா நின்பாதம் போற்றி போற்றி

புண்ணியனே நின்பாதம் போற்றி போற்றி

அங்கமலத் தயனோடு மாலுங் காணா

அனல் உருவா நின்பாதம் போற்றி போற்றி

செங்கமலத் திருப்பாதம் போற்றி போற்றி

திருமூலட்டானனே போற்றி போற்றி

                     (தொடரும்)


Saturday, October 6, 2012

திருநாவுக்கரசர் அருளிய "போற்றித் தாண்டகம்"



திருநாவுக்கரசர் அருளிய "போற்றித் தாண்டகம்"



நஞ்சுடைய கண்டனே போற்றி போற்றி

நற்றவனே நின்பாதம் போற்றி போற்றி

வெஞ்சுடரோன் பல்லிருத்த வேந்தே போற்றி

வெண்மதியங் கண்ணி விகிர்தா போற்றி

துஞ்சிருளிள் ஆடல் உகந்தாய் போற்றி

துநீறு மெய்க்கணிந்த சோதி போற்றி

செஞ்சடையாய் நின்பாதம் போற்றி போற்றி

திருமூலட்டானனே போற்றி போற்றி

                     (தொடரும்)



Thursday, October 4, 2012

திருநாவுக்கரசர் அருளிய "போற்றித் தாண்டகம்"







திருநாவுக்கரசர் அருளிய "போற்றித் தாண்டகம்"




பொன்னியலும் மேனியனே போற்றி போற்றி

பூதப்படையுடையாய் போற்றி போற்றி

மன்னியசீர் மறை நான்கும் ஆனாய் போற்றி

மறியேந்து கையானே போற்றி போற்றி

உன்னுமவர்க்கு உண்மையனே போற்றி போற்றி

உலகுக்கு ஒருவனே போற்றி போற்றி

சென்னிமிசை வெண்பிறையாய் போற்றி போற்றி

திருமூலட்டானனே போற்றி போற்றி

                     (தொடரும்)

Tuesday, October 2, 2012

திருநாவுக்கரசர் அருளிய "போற்றித் தாண்டகம்"




திருநாவுக்கரசர் அருளிய "போற்றித் தாண்டகம்"




மலையான் மடந்தை மணாளா போற்றி

மழவிடையாய் நின்பாதம் போற்றி போற்றி

நிலையாக என் நெஞ்சில் நின்றாய் போற்றி

நெற்றிமேல் ஒற்றைக்கண் உடையாய் போற்றி

இலையார்ந்த மூவிலைவேல் ஏந்தீ போற்றி

ஏழ்கடலும் ஏழ்பொழிலும் ஆனாய் போற்றி

சிலையாலன்றே யிலெரித்த சிவனே போற்றி

திருமூலட் டானனே போற்றி போற்றி

                      (தொடரும்)

Monday, October 1, 2012

திருநாவுக்கரசர் அருளிய "போற்றித் தாண்டகம்"







  திருநாவுக்கரசர் அருளிய "போற்றித் தாண்டகம்"





கற்றவர்கள் உன்ணுங் கனியே போற்றி

கழலடைந்தார் செல்லுங் கதியே போற்றி

அற்றவர்கட் காரமுதம் ஆனாய் போற்றி

அல்லல் அறுத் அடியேனை ஆண்டாய் போற்றி


மற்றொருவர் ஒப்பில்லா மனியே போற்றி

வானவர்கள் போற்றும் மருந்தே போற்றி

செற்றவர்தம் புரமெரித்த சிவனே போற்றி

திருமூலட் டானனே போற்றி போற்றி


வங்கமலி கடல் நஞ்சம் உண்டாய் போற்றி

மதயானை ஈருரிவை போர்த்தாய் போற்றி

கொங்கலரும் நறுங்கொன்றைத் தாராய் போற்றி

கொல்புலித்தோல் ஆடைக் குழகா போற்றி

அங்கணனே அமரர்கள் தம் இறைவா போற்றி

ஆலமர நீழலறஞ் சொன்னாய் போற்றி

செங்கனகத் தனிக்குன்றே சிவனே போற்றி

திருமூலட் டானனே போற்றி போற்றி

                      (தொடரும்)