Translate

Friday, July 11, 2014

பொன்மொழிகள்


பொன்மொழிகள்

501. ஒருவன் எதை உடையவன் என்பதன்று; எத்தகையவன்
     என்பதே வாழ்வின் முக்கியக் கேள்வி.

                                         --- ஸ்டீவன்ஸன்


502. பெருமையின் மூன்று அறிகுறிகள்:
     1. தோற்றத்தில் எளிமை.
     2. செயலில் மனித்தத் தன்மை.
     3. வெற்றியில் வெறியின்மை.

                                --- பிஸ்மார்க்


503. வாழ்க்கையின் சிறந்த பகுதி அவ்வப்போது அன்புடன்
    சிறு சிறு செயல்களைச் செய்வதுதான்.

                                      --- வோர்ட்ஸ்வொர்த்

504. அறியாமையே துர்பாக்கியத்தின் ஆணிவேர்.

                                      --- பிளேட்டோ


505. கொடுத்த வேலையைத் திறம்படச் செய்து முடிப்பதே
     நமது கடமை.

                                       --- எபிடெக்டஸ்


506. மனசாட்சி எதை நியாயமாக நினைக்கிறதோ, அதைத்
    தைரியமாகச் செய்.
                                   டாக்டர் ராமகிருஷ்ண பண்டார்கர்



507. வாழ்க்கையில் கடந்த காலம் ஒரு கனவு.
    வருங்காலம் ஒரு பெருமூச்சு.

                                --- அரேபியப் பழமொழி

                             
508. பிடித்த காரியத்தை செய்ய வேண்டும் என்பதைவிட,
    செய்யும் காரியத்தை நமக்குப் பிடித்ததாய் ஆக்கிக்கொள்ள
    வேண்டும்.

                                ---  கெமன்ஸ் வில்லியம்ஸ்



509. மகிழ்ச்சிகரமாகவும், வெற்றிகரமாகவும் வாழ
    விரும்பினால் எந்தச் சூழ்நிலையிலும் உங்கள்
    மன அமைதியைக் கலைக்கும் விதத்தில் எது
    நடந்தாலும் கவலைப்படாதீர்கள், கோபப்படாதீர்கள்,
    உங்கள் உயிர் வாழ்விற்கு இன்றியமையாதது
    கோபப்படாது அமைதியாக இருந்து பிரச்சினைகளைக்
    கையாளப் பழகிக் கொள்ளும் திறமைதான்.

                             --- என்.வி. பீல்

510.  நீங்கள் சாதிக்க வேண்டுமென்றால் 'முடியாது', 'நடக்காது'
     போன்ற வார்த்தைகளைச் சொல்லவே கூடாது.
     எதையும் நாளை என்று தள்ளிப் போடக்கூடாது.
                       
                            ---  கெமன்ஸ் வில்லியம்ஸ்



511. இரக்கம் உடைய இதயம், சிந்தனை, ஆற்றல் மிக்க மூளை,
     வேலை செய்யக்கூடிய கைகள் ஆகிய இம்மூன்றும்
     நமக்குத் தேவை.

                              --- சுவாமி விவேகானந்தர்

                           
                                 

512. தினமும் உங்களுக்கு எந்த வேலையைச் செய்யப் பிடிக்காதோ,
    அப்படிப்பட்ட வேலைகளில் ஒன்றிரண்டை செய்ய
    பழகிக்கொள்ளுங்கள். நாளடைவில் அப்படிப்பட்ட காரியங்கள்
    மீது உங்களுக்கு ஏற்பட்டுக்கொண்டிருந்த வெறுப்பு மறையும்,
    உங்கள் கடைமைகளை ஈடுபாட்டுடன் செய்வதற்கு இது
    மிகவும் உதவிகரமாக இருக்கும்.

                                    --- மார்க் ட்வைன்.                                                                            



513. அறிவு, உள்ளம் ஆகிய இரண்டில் எதனைப் பின்பற்றுவது
     என்ற போராட்டம் எழும்போது உள்ளம் கூறுவதையே
     பின்பற்றுங்கள்.

                                    --- சுவாமி விவேகானந்தர்


514. வாழ்க்கை என்பது திருப்பிப் படிக்க வேண்டிய கணக்குப் புத்தகம்.

                                    --- மண்பக்

515. செயலில் மட்டுமே நம்பிக்கை வையுங்கள். வாழ்க்கை
    செயல்மட்டத்தில்தான். பேச்சு மட்டத்தில் அல்ல.எனவே
    செயலில் நம்பிக்கை வையுங்கள்.

                                 --- ஆல்பிரட் இட்லர்


516. 'இலட்சியங்கள்' நட்சத்திரங்கள் போன்றவை. அவற்றை
    கைக்குள் அடக்கிவிட முயன்றால் தோல்வி நிச்சயம்.
    ஆனால் அவற்றை வழிகாட்டிகளாகக் கொண்டு
    பிந்தொடர்ந்து சென்றால் போக வேண்டிய இடத்தை
    அடைவது உறுதி.

                                   --- கார்ல் ரூஸ்

517. வாழ்வில் நாம் இரண்டு குறிக்கோள்களைக் கொள்ள
     வேண்டும். ஒன்று நாம் விரும்புவதை அடையவேண்டும்.
     அதற்குப்பின் அடைந்ததை அனுபவிக்க வேண்டும்.
     மனிதரில் விவேகம் மிக்கவராலேயே இரண்டாவதைச்
     சாதிக்க இயலும். அத்தகைய நபராக நீங்கள் இருங்கள்.

                                   --- சாமுவேல் ஸ்மித்

518. நம்பிக்கையும், உறுதியுமே வாழ்வின் அடிப்படை.
    இவை இரண்டும் இருந்தால் எல்லாம் இருந்தது
    மாதிரிதான்.

                                 --- சாரதா தேவியார்


519. ஓடுவதால் பயனில்லை. குறித்த நேரத்திற்கு முன்பே
     புறப்படுவதுதான் அவசியம்.


520. வாய்மூடாமல் பேசுபவன் அடுத்தவர் பேச்சைக்
     கேட்கவும் மாட்டான்; எதையும் கற்றுக்கொள்ளவும்
     மாட்டான்.


521. உலகில் சாகாவரம் பெற்றவை என்று ஒன்றைத்தான்
    சொல்லமுடியும். அவை புத்தகங்களே.

                                         --- கதே

522. கடுகளவு சிறந்த சிந்தனை பூசணியளவு நற்பயனைத் தரும்.

                                        --- வாரியார்


523. திட்டவட்டமான இலட்சியம் இல்லாதவர்கள்தான்
    இலக்குகள் உள்ளவர்களுக்காக என்றென்றும் வேலை
    செய்பவர்களாக வாழ்கின்றனர்.

                                    ---பிரையன் டிரேசி              


524. மனவலிமை இல்லாதவர்கள் சந்தர்ப்பங்களுக்காகக்
     காத்திருக்கிறார்கள்.

                                       --- வில்லியம்மார்டின்

525. ஆசைகள் குறைய குறைய அமைதி பெருகும்.


526. பொறுமை இல்லாதவர்கள் நீதிமான்களாக இருக்கமுடியாது.

                                            --- மார்க்கஸ்

527. இந்த உலகத்தை மாற்ற உங்களால் முடியாது. ஆனால்
     உங்களை மாற்றிக் கொள்ள முடியும். நீங்கள் சுதந்திரமாகவும்
     இன்பமாகவும் இருக்க வேண்டுமெனில் உலகக் கவலைகளையும்
     உங்கள் கவலைகளையும் மூட்டைக்கட்டுங்கள். இப்போது
     உங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளத் திட்டமிட்டு
     முயற்சி செய்யுங்கள்; அது போதும்.

                                        டாக்டர் ராபர்ட் அந்தோணி


528. படித்து அறிபவனைவிட அனுபவித்து உணர்பவன் அறிஞன்.

                                        --- இங்கர்சால்
529. உங்கள் துணிவு, கடின உழைப்பு இந்த இரண்டையும்
    பொருத்துத்தான் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி பிறக்கும்;
    நீடிக்கும்.

                                    --- பால்ஜாக்


530. வாழ்க்கை அனுபவம் இல்லாத எவரும் கல்வி
    கற்றவராக முடியாது.

                                --- பெர்னாட்ஷா

531. உலகத்தில் சோதனைக்கு உட்படாமலும் அதனிடம்
    படிக்காமலும் ஒருவன் நிறைவுற்ற மனிதனாக
    விளங்கமுடியாது! அனுபவம் ஊக்கமாக உழைப்பதிலிருந்து
    கிடைக்கிறது;காலத்தின் வேகம் அதைச் செம்மைப்படுத்துகிறது


532. நம்முடைய தனிப்பட்ட சிந்தனைகளும் அனுபவங்களே
    நமது நம்பிக்கைகளைத் தீர்மானிக்கின்றன.அவைதான்
    நம்மைப்பற்றிய சுயமான தன்மையையும் உயர்வான
    மதிப்பீட்டையும் தீர்மானிக்கின்றன.

                                    வால்டர் ஸ்டேபிலிஸ்

533. அதிகம் பேசுகிறவர்கள் செயலில் திறமையற்றவர்கள்.

                                       --- ஷேக்ஸ்பியர்


534. ஆசை புத்தியை மறைக்கும் போது அறிவு வேலை செய்யாமல்
     போகிறது.

535. நெற்றிவியர்வை நிலத்தில் விழப் பாடுபட்டு உழைப்பதானது
     ஒருவரின் சாபக்கேடோ முன்வினையின் பாவத்தாலோ
     அல்ல; அது கவலையைப் போக்கித் தேக ஆரோக்கியத்தை
     வளர்க்கும் டானிக்.
                                     ---டேவிட் லிவிங்ஸ்டன்


536. அரிய செயலைச் செய்து முடிப்பது வலிமையினால் அல்ல;
     விடாமுயற்சியினால்தான்.

                                      --- ஜேம்ஸ்ஆலன்

537. உலகத்தில் மிகவும் மலிவான பொருள் அன்புதான்.
    வாங்குகிறவனுக்கும் கொடுக்கிறவனுக்கும் அது
     பல மடங்கு மிகுதியான லாபத்தைத் தரும்.

                                           --- இங்கர்சால்

538. உதடுகளை மூடு; உன் இதயத்தைத் திற.

                                --- சுவாமி விவேகானந்தர்


539. உங்கள் எண்ணம் உங்கள் சுதந்திரத்தில் இருக்கிறது.
     இந்த உண்மையை அறிந்து உங்கள் உள்ளத்தைக்
    கட்டுப்படுத்தி அடக்கி ஆண்டு வாழ்வில் அமைதியையும்
     வெற்றியையும் அடையுங்கள்.

                                   --- மார்கஸ் அரேலியஸ்


540. நல்ல நூல்களைப் படிப்பது தலைசிறந்த மனிதருடன்
    உரையாடுவதைப் போன்றது.

                                      -- ரெனதெகார்த்


541. நேற்று என்பது கையை விட்டுப்போன பணம்.
     இன்று என்பது கையில் இருக்கும் பணம்.
     நாளை என்பது கைக்கு வரும் பணம்.

                                   --- சாண்டில்யன்


542. நீ சிறிய செயல்களுக்கு உண்மையுள்ளவனாக
    இருந்தால் பெரிய செயல்களுக்கு அதிகாரியாகலாம்.

                                    --- இயேசுபிரான்

543. இனாமாக ஒன்றைப் பெற்றுக் கொள்வதால் உங்களுடைய
     சுதந்திரம் குறைகிறது.
                                         --- போலந்து

544. எளிமையில்தான் பகவானின் அருளைப் பெற முடியும்.

                                 --- கிருபானந்தவாரியார்

545. சுறுசுறுப்பு, மனஉறுதி என்ற வெற்றிக்குதிரைகளில்
    பயணம் செய்வான் புத்திசாலி.

                                      --- சாணக்கியன்


546. ஆன்மாவைப் பிரதிபலிப்பதே உண்மையான பேச்சு.

                                         --- எமர்சன்


547. மனம் சுத்தமாக இருந்தால் செயல் நல்ல வழியில் செல்லும்.

                                          --- லெனின்


548. பண்பாடு இல்லாமலோ, தெரியாமலோ பேசக்கூடாது.

                                          --- வாரியார்


549. எவன் நம்முடன் போராடுகிறானோ அவன் நம்முடைய
     திறமையைக் கூர்மைப்படுத்துகிறான்.

                                       --- எட்வின்பர்க்



550. அதிருப்திக்கெல்லாம் வேர் சுயநலமே.

                               --- கிளார்க்

Tuesday, July 1, 2014

திருக்குறள்


திருக்குறள் 
 (see below in English)
 2. பொருட்பால்
55. செங்கோன்மை

ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய்  வஃதே முறை.                        541

எவரிடத்தும் குற்றம் இன்னதென்று ஆராய்ந்து இவர் தனக்கு
என்ற கண்ணோட்டமின்றி நடுநிலை மாறாமல் ஆராய்ந்து
செல்வதே நீதிமுறை.

kural-541
Search out, to no  one favour show; with heart that justice loves
Consult, then act; this is the rule that right approves.

To  examine into ( the crimes which may be committed),
to show no favour(to any one) , to desire to act with
impartiality towards all, and to inflict (such punishments)
as may be wisely  resolved on, constitute rectitude.




வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழும் குடி.                              542

உலக உயிர்களெல்லாம் மழையை நம்பி வாழ்கின்றன.
அதுபோல, குடிமக்கள் வேந்தனது செங்கோலை
நம்பி வாழ்கின்றனர்.

Kural-542

All earth looks up to heav'n whence raindrops fall;
All subjects look to the king that ruleth all.

When there is rain, the living creation thrives; and so
When the king rules justly, his subjects thrive.



அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.                       543

அந்தணர் போற்றும் மறை நூலுக்கும், தரும
நெறிகளுக்கும் அடிப்படையாக இருந்து
உலகத்தைக் காப்பது வேந்தனின் செங்கோல்.
kural- 543

Learning and virtue of the sages spring,
From all-controlling sceptre of the king.

The sceptre of the king is  the firm support of the
Vedas of the Brahmin, and of all virtues therein
described.



குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு.                       544

குடிமக்களை அன்புடன் அரவணைத்துக் கொண்டு
அரசாட்சி செய்யும் மன்னரின் அடிகளைப்
பின்பற்றி உலகம் நிலைபெறும்.
kural- 544

Whose heart embraces subjects all, lord over mighty land
Who rules, the world his feet embracing stands.

The world will constantly embrace the feet of the great
King who rules over his subjects with love.


இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு.               545                    

நீதி நெறி தவறாமல் அரசோச்சும் கொற்றவனின்
நாட்டில் பருவ மழையும், நிறைந்த விளைச்சலும்
ஒருசேர ஏற்படும்.

Kural-545

Where king, who righteous laws regards, the sceptre wields,
There fall the showers, there rich abundance crowns the fields.

Rain and plentiful crops will ever dwell togather
in the country of the king who says his sceptre
with justice.


வேலன்று வெற்றி தருவது மன்னவன்
கோலதூஉம் கோடா தெனின்.                           546

வேந்தனுக்கு வெற்றியைக் கொடுப்பதுவேலல்ல!
கோணாதிருக்கும் செங்கோலே ஜெயத்தைத் தரும்.

Kural-546

Not lance gives kings  the victory,
But septre swayed with equity.

It is not the javelin that gives victory,
but the king's sceptre, if it do no injustice.


இறைகாக்கும் வையக மெல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின்.                547

உலகமெல்லாம் காப்பாற்றுவான் அரசன். நீதி நெறி
தவறாது அரசாண்டால் அந்த நீதியே அர்சனைக்
காப்பாற்றும்.

kural-547

The king all the whole realm of earth  protects;
And justice guards the king who right respects.

The  king defends the whole world; and justice,
When administered without defect, defends
the king.



எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்
தண்பதத்தான் தானே கெடும்.                            548

சாதாரண மக்கள் எளிதில் பார்த்துப் பேசக்கூடியவனாகி,
ஆராய்ந்து நீதி சொல்லாத அரசன் தாழ்ந்த நிலைக்குச்
சென்று கெடுவான்.

Kural-548

Hard of access , nought searching out, with partial hand
The king who rules, shall  sink and perish from the land.

The king who gives not facile audience ( to those who
approach him), and who does  not examine and pass
judgement ( on their complaints), will perish in disgrace.




குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில்.                   549

குடிகளைத் தானும் பிறரும் வருத்தாமல் காத்து,
குடிகளின் குற்றங்களை தண்டிப்பது மன்னரின்
கடமை. அது பழியாகாது.

Kural-549

Abroad to guard, at  home to punish,brings
No just reproach;'tis work assigned to kings.

In guarding  his subjects  (against injury from others),
and in preventing them himself; to punish crime is not
a fault in a king,  but a duty.



கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்.                                    550

கொலைகாரர்களுக்கு மரணதண்டனை விதிப்பது,
பயிரைக் காக்க களையெடுப்பதற்கு ஒப்பானது.

Kural-550

By punishment of death the cruel to restrain,
Is as when farmer frees from weeds the tender grain.

For a king to punish criminals with death, is like
pulling up the weeds in the green corn.


திருக்குறள்
 (see below in English)
 2. பொருட்பால்
56. கொடுங்கோன்மை

கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு
அல்லவை செய்தொழுகும் வேந்து.                       551

குடிமக்களை வருத்தி முறையற்ற ஆட்சி செய்யும் அரசன்
கொலைகாரனை விடக் கொடியவன்.

Kural-551

Than  one who piles the murderer's trade, more cruel is the king
Who all  injustice works, his subjects harassing.

The king who gives himself up to oppression and acts
Unjustly ( towards his subjects) is more cruel  than the
man who leads the life of a murderer.


வேலொடு நின்றான் இடுஎன் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு.                     552

செங்கோலைக் கொடுங்கோலாக்கிய அரசன்
குடிகளை வரி என்ற பெயரில் கசக்கிப்பிழிதல்
காட்டுவழியில் வேல்தாங்கி நிற்கும் கள்வன்
பணம் பறிப்பதை ஒத்தது.

Kural-552

As ' Give' the robber cries with lance uplift,
So  kings with sceptred hand implore a gift.

The request ( for money) of him who holds the
Sceptre is like the word of a highway robber who
stands with a weapon in hand and says " give up your wealth".



திருக்குறள்
 (see below in English)
 2. பொருட்பால்
56. கொடுங்கோன்மை


நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாடொறும் நாடு கெடும்.                              553

தினந்தோறும் நாட்டில் நடக்கும் நன்மை தீமைகளை
ஆராய்ந்து நீதி வழங்காத அரசனின் நாடு நாளுக்கு
நாள் கெடும்.


Kural-553

Who makes no daily search for wrongs, nor justly rules, that king
Doth day by day his realm to ruin bring.

The country of the king who does not daily examine into the
Wrongs done and distribute  justice, will daily fall to ruin.


கூழும்  குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்
சூழாது செய்யும் அரசு.                                 554

ஆட்சிமுறை தவறிக் கொடுங்கோலனாகி எதையும்
ஆராயாது செய்யும் மன்னன் தன் பொக்கிஷத்தையும்
குடிமக்களையும் ஒரே சமயத்தில் பறிகொடுப்பான்.

Kural-554

Whose rod from right deflects, who counsel doth refuse,
At  once his wealth and people utterly shall lose.

The king,who, without reflecting (on its  evil consequences),
perverts justice, will lose at once both his wealth and his
subjects.




அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை.                         555

கொடுங்கோல் அரசனால் துன்பபப்பட்டுத் தாங்க
முடியாமல் அழும் குடிகளின் கண்ணீர் அந்த
அரசனின் செல்வத்தை அழிக்கும் படையாகும்.


Kural-555

His people's tears of sorrow past endurance, are not they
sharp instruments to wear the monarch's wealth away?

Will not the tears, shed by people who cannot endure
the oppression which they suffer (from their king),
become a saw to waste away his wealth?



மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்
மன்னாவாம் மன்னர்க் கொளி.                          556

மன்னர்களுக்குப் புகழ் நிலைபெறக் காரணம்
செங்கோன்மை, செங்கோல் முறைதவறினால்
புகழ் அழியும்.

kural-556

To rulers' rule stability is sceptre right;
When  this is not, quenched is the rulers' light.

Righteous government gives permanence to (the fame of)
Kings; without  that their fame will have no endurance.



துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன்
அளியின்மை வாழும் உயிர்க்கு.                    557

மழைத்துளி பூமியில் விழவில்லையானால் உலகம்
எப்படி இருக்குமோ அப்படிப்பட்டது குடிமக்களுக்குக்
கருணையற்ற அரசனின் கொடுங் கோலாட்சி.

Kural-557

As lack of rain to thirsty lands beneath,
Is lack of grace in kings to all that  breath.

As is the world without rain, so live a people
whose king is without kindness.



இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா
மன்னவன் கோற்கீழ்ப் படின்.                           558

பாதுகாப்புத் தராத அரசனின் கொடுங்கோல்ஆட்சியில் இருக்க
நேர்ந்தால் வறுமையைவிடசெல்வநிலை துன்பத்தைத் தரும்.

Kural-558

To poverty it adds a  sharper sting,
To live beneath the sway of unjust king.

Property gives  more sorrow than poverty,
to those who live under the sceptre of a king
without justice.


முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்.                       559

வேந்தன் நீதி நெறி தவறி ஆட்சிசெய்தால் அவனது
நாட்டில் பருவமழை தவறி விடும்.

Kural-559

Where king from right deflecting,makes unrighteous gain,
The seasons change, the clouds pour down no rain.

If the king acts contrary to justice, rain will become
unseasonable, and the heavens will withhold showers.



ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்.                             560

அரசன் முறைப்படி நாட்டை ஆளாவிட்டால்
அந்த நாட்டில் பசுக்கள் பால் குறைத்தே கொடுக்கும்.
அந்தணர்கள் வேதம் ஓதுவதை மறப்பர்

Kural-560

Where guardian guardeth not, udder of kine grows dry,
And Brahmans' sacred lore  will all forgotten lie.

If the guardian ( of the country) neglects to guard it,
The produce of the cows will fail, and the men of
Six duties viz. Bramins will forget vedas.


திருக்குறள்
 (see below in English)
 2. பொருட்பால்
57. வெருவந்த செய்யாமை

தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து.                     561

ஒருவன் செய்த குற்றத்தை நன்கு ஆராய்ந்து மீண்டும்
அக்குற்றத்தை அவன் செய்யாதபடி குற்றத்துக்கேற்றபடி
தண்டிப்பவனே அரசன்.
Kural-561

Who punishes, investigation made in due degree,
So as to stay advance of crime, a king is he.

He is a king who having equitabily examined
(any in justice which has been brought to his notice),
suitably punishes it, so that it may not be again committed.

திருக்குறள்
 (see below in English)
 2. பொருட்பால்
57. வெருவந்த செய்யாமை

கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்
நீங்காமை வேண்டு பவர்.                       562

தனது புகழ் நெடுங்காலம் நீடிக்க விரும்புபவன்
தண்டிக்கத் தொடங்கும் போது பெரிதாகச் சொல்லி
அளவோடு தண்டிக்க வேண்டும்.

Kural-562

For length of days with still increasing joys on Heav'n who call
Should raise the rod with brow severe, but let it gently fall.

Let the king, who desires that his prosperity may long remain,
Commence his peliminary enquires with strictness, and then
punish with mildness.




வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்
ஒருவந்தம் ஒல்லக் கெடும்.                            563

குடிமக்கள் அஞ்சி நடுங்கும் கொடுங்கோல் அரசனாக
இருந்தால் அவன் நிச்சயமாக விரைவில் அழிவான்.

Kural-563

Where subjects dread of cruel wrongs endure,
Ruin to unjust king is swift and sure.

The cruel-sceptred king, who acts so as to put
his subjects in fear, will certainly and quickly
come to ruin.
இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்
உறைகடுகி ஒல்லக் கெடும்.                           564

நம் அரசன் கொடியவன் என்று குடிகள் உரைக்கும்
கொடுஞ்சொல் உடைய அரசன் தன் ஆயுள் தேய
விரைவில் கெடுவான்.

Kural-564

'Ah! cruel is our king' , where  subjects sadly say,
His age shall dwindle, swift his joy of life decay.

The king  who is spoken of as cruel will quickly
perish; his life becoming shortened.



அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்
போய்கண் டன்னது உடைத்து.                      565

எளிதில் பார்க்க முடியாதபடிக் கட்டுக் காவலுடனும்
கடுகடுப்பான முகத்துடனும் உள்ளவனின் பெருஞ்
செல்வம் பூதம் காக்கும் புதையல் போன்றது.

Kural-565

Whom subjects scarce may see, of harsh forbidding countenance;
His ample wealth shall waste, blasted by demon's glance.

The great wealth of him who is difficult of access and possesses
a sternness of  countenance, is like that which has  been obtained
by a devil.


கடுஞ்சொல்லன் கண்ணில னாயின் நெடுஞ்செல்வம்
நீடின்றி ஆங்கே கெடும்.                                    566

கடும் சொல் உடையவனாகவும் கண் பார்வையால்
நல்லது கெட்டதைத் தீர்மானிக்க முடியாதவனாயும்
உள்ளவனின் பெருஞ்செல்வம் நீண்டகாலம் பயன்படாது
அழியும்.

kural-566

The tyrant, harsh  in speach and hard of eye,
His ample joy , swift fading , soon shall die.

The abundant wealth of the king whose words
are harsh and whose looks are void of kindness,
will instantly perish instead of abiding long,
with him.


கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்
அடுமுரண் தேய்க்கும் அரம்.                         567

கடும் சொல்லும், சிறுகுற்றத்துக்கு வரம்பு மீறிய
தண்டனையும் அரசனுடைய வெற்றிக்குக் காரணமான
வல்லமையைத் தேய்க்கும் அரமாகும்.

Kural-567

Harsh words and punishments severe beyond the right,
Are file that wears away the monarch's conquering might.

Severe words and excessive punishments will be a file to
waste away a king's power for destroying (his enemies).





இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்
சீறின் சிறுகும் திரு.                                  568

அமைச்சர் முதலான குழுவினருடன் கலந்து
ஆலோசிக்காத அரசன், சினத்தையும் கட்டுப்படுத்தாமல்
சீறி விழுந்தால் அவனது செல்வம் சுருங்கும்.

Kurl-568

Who leaves the work to those around, and thinks of it no more;
If he in wrathful mood reprove, his prosperous days are o'er!

The prosperity of that king will waste away, who without
reflecting (on his affairs himself), commits them to his ministers,
and (when a failure occurs) gives away to anger,and rages
against them.


செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்
வெருவந்து வெய்து கெடும்.                         569

முன்பே தனக்கு அரண் செய்து கொள்ளாத அரசன்
யுத்தம் வந்த போது அஞ்சி விரைவில் கெடுவான்.

Kural-569

Who builds no fort whence he may foe defy,
In time of war shall fear  and swiftly die.

The king who has not provided himself with a
place of defence, will in times of war be  seized
with fear and quickly perish.

கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது
இல்லை நிலைக்குப் பொறை.                          570

கொடுங்கோலரசன் படிக்காதவரைத் தனக்குப்
பாதுகாவலனாக வைத்துக் கொள்வான். அது
பூமிக்கு பெரும் சுமையாகும்.


Kural-570

Tyrants with fools their counsels share:
Earth can no heavier burthen bear!

The earth  bears up no greater burden than
ignorant men  whom a cruel  sceptre attaches
to itself ( as the ministers of its evil deeds).